சுவற்றின்மேல் எழுதப்பட்ட கையெழுத்து THE HANDWRITING ON THE WALL 56-0902 ஞாயிற்றுக்கிழமை மாலை, செப்டம்பர் 2, 1956 பிரான்ஹாம் கூடாரம், ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் ùNn§: 56-0902 - சுவற்றின்மேல் எழுதப்பட்ட கையெழுத்து நாம் தொடங்குவதற்கு முன்பாக, சகோதரர் நெவில்லையும் அவருடைய சகோதரியையும், நமக்காக ஒரு விசேஷ பாடலைப் பாடும்படி நான் கேட்க விரும்பு கிறேன். நீங்கள் அதை விரும்புகிறீர்களா? [சபையார், "ஆமென்" என்று சொல்கிறார்கள்] அவர்கள் வானொலியில் பாடுவதைக் கேட்க நாம் அனைவரும் விரும்புகிறோம். சரி. 2 [சகோதரர் நெவில் சொல்கிறார், "அவள் இன்று இரவு இங்கே இருக்கிறாளா, இல்லையா? அவள் இன்று இரவு இங்கே இல்லை என்று நான் நினைக்கிறேன். அவள் இன்று இரவு இங்கு வரவில்லை என்று நான் கருதுகிறேன்." ஒரு சகோதரி சொல்கிறார், "அவர்கள் இங்கே இல்லை."] அவள் வரவில்லை என்று அவர்கள் சொன்னார்கள்... அவள் இங்கே இல்லை என்று அவர் நினைக்கிறார். ["அவள் இன்னும் வந்து சேரவில்லை. அவள் இங்கே இருந்திருக்க வேண்டும்."] நல்லது, நாம் தொடங்குவதற்கு முன்பாக அவள் வந்துவிட்டால், எப்படியும் அவளை நாம் பாட வைப்போம். எனவே, நாங்கள் அதை விரும்புவோம். 3 கர்த்தருடைய வீட்டில் இருப்பதற்கும், அவரை... நம் முழு இருதயத்தோடும் சேவிப்பதற்கும் இன்று இரவு நாங்கள் மகிழ்ச்சி யடைகிறோம். இப்பொழுது ஒவ்வொருவரும் மெய்யாகவே விடுதலையை உணர வேண்டும் என்றும், நாம் கர்த்தரை ஆராதிக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். கர்த்தராகிய இயேசுவை ஆராதிப்பதே, அந்த ஒரே நோக்கத் திற்காகவே, இன்று இரவு நாம் இங்கே ஒன்றாகக் கூடியிருக்கிறோம். 4 மேலும், இப்பொழுது, கர்த்தருக்குள் சில அற்புதமான நேரங்களைக் கொண்டிருந்தோம், வியாதியஸ்தர்களுக்காகவும் பாதிக்கப் பட்டவர் களுக்காகவும் ஜெபிப்பதில் கர்த்தர் நம்மை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் இப்போது தான் திரும்பி வந்திருக்கிற கனடாவின் சஸ்காட்செவனில், நமது அன்பான பரலோக பிதா அங்கு ஒரு அற்புதமான விதத்தில் ஜெபத்திற்குப் பதிலளித்தார். மக்களிடையே நாங்கள் ஒரு அற்புதமான, மிகச்சிறந்த கூட்டத்தை நடத்தினோம். அநேக மக்கள் இரட்சிக்கப்பட்டார்கள்; வழிதப்பிப் போயிருந்தவர்கள் கர்த்தரிடம் திரும்பி வந்தார்கள். நம் மத்தியில் அநேக பெரிய அடையாளங்களை நம் கர்த்தர் செய்தார். ஆகவே அதற்கெல்லாம் நாங்கள் மகிழ்ச்சி யடைகிறோம். 5 நான் இப்போதுதான் ஒரு பரிதாபகரமான நிலையைக் கடந்து வந்தேன். நமது சகோதரர் பர்ன்ஸ், முன்பு இங்கு இந்த கூடாரத்திற்கு வருவார், மறுநாளன்று அவருடைய சரீரத்தில் புற்றுநோய் இருப்பதை அவர்கள் கண்டறிந்தார்கள். எனவே நாம்... இன்னும் சில நாட்கள் மட்டுமே அவர் உயிரோடிருப்பார் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர் இப்போது நம்முடன் ஆராதனை செய்ய வருவார், அனேகமாக புதன்கிழமை இரவு, மீண்டும்... கர்த்தருடைய சேவையில் கலந்து கொள்வார். 6 வெளியூரிலுள்ள மருத்துவமனையில் இருக்கும் ஒரு சிறு பையனுக்காக ஜெபம் பண்ண நாங்கள் அங்கு சென்றோம். நான் நம்புகிறேன்... சகோதரர் கர்டிஸ் ஹூப்பர், அவர் இன்று இரவு இங்கே இருக்கிறாரா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் இருந்தார்... சகோதரர் காக்ஸ் என்னை அழைத்தார், பத்து வாரங்களாக சுயநினைவின்றி இருந்த ஒரு சிறு பையன், அவன்... புல் கிரீக் மலையில் (Bull Creek Hill) ஓரிடத்தில் மோதியிருந்தான். மலையிலிருந்து கீழே இறங்கும்போது அவனது பிரேக் செயலிழந்தது. நான் அவனது தாயாரிடம் பேசினேன்... அவர்கள் ஒரு சபைக்குச் செல்கிறார்கள், ஆனால், அவர்கள், அவர்களில் யாரும் உண்மையாகவே, மறுபடியும் பிறந்திருக்கவில்லை என்று நான் நம்புகிறேன். கர்த்தர் அந்தச் சிறு பையனை விழிக்கச் செய்தால், அவர்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரைச் சேவிப்பார்கள் என்று அவர்கள் தேவனிடம் ஒரு பொருத்தனை செய்தார்கள். அது ஒரு நல்ல விஷயம். தேவன் இப்போது அந்தச் சிறு பையனை விழிக்கச் செய்வார் என்று நான் நம்புகிறேன். அவன் ஒரு சிறுவன் தான். அவன் அங்கே படுத்திருப்பதைப் பார்க்கும்போது... அவன் மிகவும் இளைத்துப் போயிருந்தான். அவர்களால் சாப்பிட முடியாது, நிச்சயமாக, அவன் பத்து வாரங்களாக சுயநினைவின்றி இருக்கிறான். அவனது கால்கள் உடைந்திருக்கின்றன, அவர்களால் அவனது கால்களைச் சீர்படுத்தவோ அல்லது எதுவும் செய்யவோ முடியவில்லை, ஏனென்றால் அவற்றைச் சீர்படுத்துவதற்கு அவன் சுய நினைவுடன் இல்லை. அது ஒரு பரிதாபகரமான நிலை. 7 அது உங்கள் குழந்தையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். நாம் அதைப்பற்றி உண்மையாகவே சிந்திக்க வேண்டும். நாங்கள் ஜெபித்துக் கொண்டி ருக்கிறோம், நீங்கள் இப்போது என்னுடன் இணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்தத் தாய் தன் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுவதாக தேவனிடம் வாக்குறுதி அளித்திருக்கிறாள். அந்தச் சிறு பையன் விழித்தவுடனே, என்னை அழைக்கும்படி நான் அவளிடம் சொன்னேன். நான் இங்கே இல்லாவிட்டாலும், நாங்கள் உள்ளே வந்தவுடனே எனக்குத் தெரியப் படுத்தும்படி சொன்னேன். அந்தச் சிறு பையனிடம் பேச நான் அங்கு செல்ல விரும்புகிறேன். 8 இப்போது அவனது பெயர் எனக்கு நினைவில் இல்லை. நான் அதை என் சட்டைப்பையில் வைத்திருந்தேன், ஆனால் மறந்துவிட்டேன். அவர்கள் வடக்கு சார்லஸ்டவுனில் எங்கேயோ, அந்தப் பக்கமாக எங்கேயோ வசிக்கிறார்கள். அது மிகவும் பரிதாபகரமான நிலை, எனவே அந்தச் சிறு பையனுக்காக ஜெபியுங்கள். அதை, நான்... 9 சரி, நாம் ஜெபித்த பிறகு, தேவனுக்கு நன்றி செலுத்தத் தொடங்குவோம், ஏனென்றால் அவர் அவர்களுடைய ஜெபத்திற்குப் பதில ளிக்கப் போகிறார். உங்களுக்குத் தெரியும், கூடாதவைகளாகத் தோன்றின காரியங்களுக்காக தேவனைத் துதிப்பதில் ஆபிரகாம் வல்லவனா யிருந்தான். அவன் பலவீனமடைவதற்குப் பதிலாக, எல்லா நேரத்திலும் பலவடைந்து கொண்டே இருந்தான். அவன் பத்து வருடங்கள் காத்திருந்தான், அப்போதும் அதே நிலையில் இருந்தான்; இருபது வருடங்கள், அப்போதும் அதே நிலை. அவன் தொண்ணூறு, அல்லது நூறு வயதான பிறகும், அவன் தேவனைத் துதித்துக்கொண்டே இருந்தான், ஏனென்றால் அது நடக்கும் என்று அவனுக்குத் தெரியும். தேவன் அப்படிச் சொன்னார், அது முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதுவே போதுமானது. தேவன் ஒன்றைச் சொல்லும்போது, அதைத் தீர்மானிப்பதற்கு அதுவே போதுமானது. 10 இப்போது, இன்று மதிய ஆராதனையில், நாம்... நான்... கடந்த ஞாயிற்றுக்கிழமை, நான் இங்கே இருந்தேன், ஆனால் என்னால் கீழே இறங்க முடியாத அளவுக்கு நான் மிகவும் களைப்பாயிருந்தேன். எனவே இன்று இரவு வரலாம் என்று நினைத்தேன். அடுத்த வாரம், பழைய அசுஸா ஸ்ட்ரீட் (Azusa Street) பேரணிக்காக நாங்கள் கலிபோர்னியாவுக்குச் செல்கிறோம். 11 இரண்டு வருடங்களுக்கு முன்பு, கலிபோர்னியாவில், நாங்கள் கவ் பேலஸில் (Cow Palace) இருந்தபோது... கலிபோர் னியாவில் ஒரு கூட்டத்தில். அமெரிக்காவில் பெந்தெகொஸ்தே வந்து இந்த வருடத்துடன் ஐம்பது ஆண்டுகள் ஆகிறது என்று நான் சிந்திக்க நேர்ந்தது. இது பெந்தெகொஸ்தேவின் ஐம்பது ஆண்டுகள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, கலிபோர்னியாவில் உள்ள பழைய அசுஸா ஸ்ட்ரீட் மிஷனில், அசுஸா ஸ்ட்ரீட்டில் முதன்முதலாகப் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். 12 பின்னர், கர்த்தருக்குச் சித்தமானால், அனேகமாக, அடுத்த... பதினாறாம் தேதி, இந்தக் கூட்டத்தைத் தொடங்கி வைக்க கர்த்தர் எனக்குக் கிருபை செய்வார் என்று நம்புகிறேன். பின்னர், முதல் இரண்டு இரவுகளில் நான் இருப்பேன்; அடுத்து ஓரல் ராபர்ட்ஸ் எடுத்துக்கொள்வார்; அதன் பிறகு, ஜாக் கோ எடுத்துக்கொள்வார் என்று நினைக்கிறேன்; அப்படியே வரிசையாக, பல இரவுகளுக்கு இது நடக்கும். 13 நான் சற்று முன்னதாகவே செல்கிறேன், ஏனென்றால் சில வாரங்களுக்கு முன்பு மெக்ஸிகோவிலிருந்தபோது எனக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்த சகோதரர் எஸ்பி னோசா, அங்கு ஒரு நாள் இரவில், தாயின் கைகளில் அன்று மதியம் இறந்த ஒரு சிறியக் குழந்தையின் உயிர்த்தெழுதலினால் இருபதா யிரம் பேர் கர்த்தராகிய இயேசுவிடம் வந்தார்கள். 14 இந்த மாதம் வெளிவந்த 'தி வாய்ஸ் ஆஃப் ஹீலிங்' (The Voice of Healing) எத்தனை பேருக்குக் கிடைத்தது? அதில் அதன் படத்தைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்? அவர் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் உள்ள மெக்சிகன் மக்கள் அனைவரையும், அசுஸா ஸ்ட்ரீட் பேரணிக்கு முன்னதாக, மூன்று நாட்கள் கூட்டத்திற்காக ஒரு கூடாரத்தின் கீழோ அல்லது ஏதோ ஒரு இடத்திலோ கூட்டிச் சேர்த்திருக்கிறார். எனவே இந்த வாரம் எனக்காக ஜெபத்தில் தரித்திருங்கள். 15 பின்னர், கர்த்தருக்குச் சித்தமானால், அதற்கடுத்த வார இறுதியில், இங்கு மற்றொரு ஆராதனைக்காகக் கூடாரத்திற்குத் திரும்பி வருவேன். பின்னர் அங்கிருந்து நாங்கள் மேலே... இடாஹோவுக்குச் சென்று, பின்னர் கூடாரத்தில் கலிபோர்னியாவுக்குத் திரும்பி, பீனிக்ஸ் நகருக்குச் சென்று, இப்போது அவர்கள் வெளிநாடுகளுக்கான கோடைக்காலப் பருவத்தைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். கர்த்தருடைய ஆசீர்வாதங்களில் நாங்கள் உங்கள் அனைவருடனும் மகிழ்ச்சியடைகிறோம். 16 இப்போது, இன்று இரவு, இது திருவிருந்து இரவு என்று நான் காண்கிறேன், அதை நாங்கள் நேசிக்கிறோம். நாங்கள் நீண்ட நேரம் பேசப்போவதில்லை, சிறிது நேரம் மட்டுமே பேசுவோம். இங்கு வியாதியஸ்தர்கள் இருந்தால்... யாரோ ஒருவரை உள்ளே கொண்டுவருவதற்காக ஒரு கட்டிலைக் கொண்டு வந்திருப்பதை நான் பார்க்கிறேன் என்று நினைக்கிறேன், ஆகவே தேவையுள்ள வர்களுக்காக நாங்கள் ஜெபிப்போம். நேற்று மாலை, ஒரு கருப்பின மனிதர் என்னிடம் வந்து, அவர் ஜெபிக்கப்படுவதற்காக முன் வரலாமா என்று கேட்டார். நான், "நிச்சயமாக, என் சகோதரனே. எல்லோரும் வரலாம்" என்று சொன்னேன். 17 அவர் சொன்னார், "விருப்பமுள்ளவன் எவனோ அவன் வரக்கடவன்." "எவனோ" ஆகலாம்! உங்கள் நிறம், அதில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. உங்கள் ஆத்துமா மற்றொரு நிறமுள்ள மனிதனைப் போலவே கடவுளின் பார்வையில் தெளிவாக இருக்க முடியும், புரிகிறதா. 18 "தேவன் மனுஷரான அனைத்து ஜாதிகளையும் ஒரே இரத்தத்தினாலே தோன்றப் பண்ணினார்." இறக்கும் தருவாயில் உள்ள அந்தக் கருப்பின மனிதர், உங்களுக்கு இரத்த தானம் செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியும், மஞ்சள் நிற மனிதர் பழுப்பு நிற மனிதருக்குக் கொடுக்கலாம், பழுப்பு நிற மனிதர் கருப்பின மனிதருக்குக் கொடுக்கலாம், கருப்பின மனிதர் வெள்ளை நிற மனிதருக்குக் கொடுக்கலாம்? ஆனால் ஒருபோதும் மிருக இரத்தத்தை உங்களுக்குள் செலுத்தாதீர்கள்; நீங்கள் இறந்துவிடுவீர்கள். ஆக, அது அதைக் காட்டு கிறது, பார்த்தீர்களா. நாம் ஒருபோதும் விலங்கு களிலிருந்து வரவில்லை. நாம் மனித இரத்தம், அது சரி, தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். 19 இப்போது, இன்று இரவு ஒரு சிறிய பாடத்திற்காக, இது சரியான நேரம் என்று நான் நினைத்தேன். நான் விரும்பினேன்... இன்று இரவு என் தலைப்பு: சுவற்றின்மேல் எழுதப்பட்ட கையெழுத்து (The Handwriting On The Wall). கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு சற்று முன்னதாக, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தை அறிந்திருப்பதினால். பழைய அசுஸா ஸ்ட்ரீட் இப்போது தோன்றி, அமெரிக்காவில் பரிசுத்த ஆவியானவர் வந்து ஐம்பது ஆண்டுகள் ஆகிறது என்பதைக் காண்பதாலும், அது முழுமையாக நிராகரிக்கப் படுவதைக் காண்பதாலும், இன்று இரவு தானியேல் புத்தகத்தை வாசித்து, இந்நாளில் நமக்கு நிழலாட்டமாகச் சொல்லப்பட்ட சில காரியங்களைக் கண்டறிவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவருடைய புத்தகத்தைத் திறப்பதற்கு முன், நாம் நம் தலைகளைத் தாழ்த்தி அவரிடம் ஒரு கணம் பேசுவோமா? 20 எங்கள் பரலோக பிதாவே, உமது ஆச்சரியமான கிருபையினால் எங்களைப் போன்ற தகுதியற்ற ஏழை சிருஷ்டிகள் பெற்றுக்கொண்ட உமது தயவு மற்றும் இரக்கங்கள் அனைத்திற்காகவும் இன்று இரவு உமக்குத் துதி செலுத்துகிறோம். 21 ஓ தேவனே, நாங்கள் அங்கே பத்தாயிரம் வருடங்கள் இருக்கும்போது, அந்தக் கவிஞர் சொன்னது போல், "நாங்கள் முதலில் தொடங்கியதை விட, உமது துதியைப் பாட எங்களுக்குக் குறைவான நாட்கள் இருக்காது." அது எப்பேர்ப்பட்ட நேரமாக இருக்கும்! நம் மத்தியில் கண்ணுக்குத் தெரியாதவராக இருந்து, நம்மை அற்புதமாக ஆசீர்வதித்தவரின் முகத்தைப் பார்க்கும் அந்தப் பெரும் நம்பிக்கையை நாம் கொண்டிருப்பதும், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருப்பதும் எதிர்காலத்தில் சமீபமாயிருக்கிறது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். 22 பிதாவே, இன்று இரவு நீர் வருவீரா? நாங்கள் வார்த்தையைத் திறக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் வார்த்தைக்குள்ளே இறங்கி, அதை சபையார் மத்தியிலும், ஆயத்தமாயிருக்கிற ஒவ்வொரு இருதயத்துக்குள்ளும் கொண்டு செல்வாராக. நிலம் அனைத்தும் பண்படுத்தப் பட்டுள்ளது, விதை நல்ல நிலத்தில் விழுந்து, நூறடங்காகப் பலன் தரட்டும். பிதாவே, அதை அருளும். உமது அன்பான குமாரனாகிய, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 23 வார்த்தையை வாசிக்கும் விதத்தில்... என்னுடைய சொந்த வார்த்தைகள் பெரிதல்ல என்று நான் எப்போதும் உணர்கிறேன், அவை தோல்வியடையும், ஏனென்றால் அது ஒரு மனிதனின் வார்த்தை மட்டுமே. ஆனால் தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தோல்வியடையாது. அது அப்படியே... 24 இன்று ஒரு மனிதனிடம் பேசிக் கொண்டிருந்தேன், அவர் தான் கர்த்தரைத் தன் சுகத்திற்காக நம்பியிருந்ததாகவும், ஆனால் சுகத்தைப் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டதாகவும் நினைத்துக்கொண்டிருந்தார். பின்னர் அவர் சோர்வடைந்து, "சுகமடைவதற்கு எனக்குப் போதுமான விசுவாசம் இல்லை என்றால், ஒருவேளை, இரட்சிக்கப்படுவதற்கு எனக்குப் போதுமான விசுவாசம் இல்லையோ" என்று கூறினார். 25 நான் அவரிடம் சொன்னேன். "தெய்வீக சுகத்தின் அடிப்படை இரட்சிப்பின் அதே நிலையில் இல்லை" என்று நான் சொன்னேன். தெய்வீக சுகம் என்பது விசுவாசிக்குக் கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஒன்று. ஆனால், இரட்சிப்பு, நீங்கள்... நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு மறுபடியும் பிறக்கும்போது, அழிந்து போகாத அல்லது பழமையாகாத ஒரு அழியாத ஜீவனைப் பெறுகிறீர்கள். அது ஒருபோதும் சாகாது. அது ஒருபோதும்... நீங்கள் தேவனுடைய ஆவியி னால் பிறக்கும்போது, அது என்றென்றைக்கும் முடிந்துவிட்டது. ஆனால், இந்த சரீரம், அது நோயுற்று பலவீனமடைகிறது, தேவன் நமக்கு உதவி செய்து நம்மைக் குணமாக்குகிறார், நாம் மீண்டும் நோயுறுகிறோம். பயணம் முடியும் வரை இது தற்காலிகமானது. ஆனால், இரட்சிப்பு என்றென்றைக்கும் நிரந்தரமானது. ஆமென். அது தோல்வியடையாது. 26 இப்போது, வார்த்தையில், "விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வார்த்தையினாலே வரும்." தானியேல் 5-ம் அதிகாரத்தில், ஒரு வழியாக 22-ம் வசனத்தை வாசிக்கிறோம். அவருடைய குமாரனாகிய பெல்ஷாத்சாரே, நீர் இவைகளையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தை நீர் தாழ்த்தவில்லை; 27 கர்த்தர் தமது வார்த்தையை வாசிப்பதை ஆசீர்வதிப்பாராக. பழைய ஏற்பாட்டின் பழைய காரியங்கள் அனைத்தும் வரப்போகும் புதிய காரியங்களின் நிழலாக மட்டுமே இருந்தன. அந்தக் காரியங்கள், நாம் கர்த்தரைச் சேவித்தால் இந்நாளில் நாம் எதை எதிர்பார்க்கலாம், கர்த்தரைச் சேவிக்கவில்லை என்றால் நாம் எதை எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றிய முன் அறிவை நமக்குத் தருவதற்காக அங்கே நடந்தன. நாம் அவரை அரை மனதுடன் சேவிக்கிறோமா, அல்லது முழு இருதயத் தோடும் சேவிக்கிறோமா. 28 எபிரேயர் நிருபத்தில், "மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமை யோடே ஓடக்கடவோம்" என்று சொல்லப் பட்டிருக்கிறது. 29 இப்போது, அந்தப் பழைய காரியங்கள் எல்லாம், தானியேல்... நான் தானியேல் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தேன்; அதை மிகவும் விரும்புகிறேன். வெகு நாட்களாக அதில் போதிக்கவில்லை. ஆனால், ஏனென்றால், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தப் பெரிய நாளுக்கு அது ஒரு நிழலாக இருந்தது. தானியேலின் நாளில் தான் புறஜாதியினரின் காலம் துவங்கியது. தேவன் இதுவரை யூதர்களுடன் இடைபட்டு வந்தார், இப்போது அவர் புறஜாதியினரிடம் திரும்புகிறார். இந்தத் தானியேலின் பெரிய தீர்க்கதரி சனத்திலும், தரிசனங்களிலும், சொப்பனங் களிலும், நேபுகாத்நேச்சார் மற்றும் பெல்தெ ஷாத்சார், மற்றும் தானியேல் புத்தகத்தில் உள்ள பல கதாபாத்திரங்கள் அனைத்தும் வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன; அதை இன்று நாம் பார்க்கலாம். தானியேலின் தரிசனத்தில், மிருகத்தின் சாயலின் விளக்கத்தையும், புறஜாதியினரின் காலத்திலுள்ள அனைத்தையும் கண்டது போல, ஒரு ராஜ்யத்திற்குப் பின் மற்றொரு ராஜ்யம் எப்படி வரும் என்பதை, நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் கடைசி நாட்கள் வரை சரியாகக் காட்டுகிறது. 30 மத்திய கிழக்கில், இந்தக் காரியங்கள் எல்லாம் எழும்புவதைப் பார்க்கும்போது, அங்குள்ள சிறிய நாடுகள், பல நூறு, ஆம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நினைத்துக் கூடப் பார்க்கப்படாத, அல்லது பேசப்படாத நாடுகள். ஒருவேளை இரண்டாயிரம் ஆண்டுகள், அல்லது இருபத்தைநூறு ஆண்டுகள், இந்தக் கடைசி நாட்கள் வரை அந்தச் சிறிய நாடுகளைப் பற்றி அதிகம் எதுவும் சொல்லப்படவில்லை. 31 முக்கியமற்றவை என்று நாம் நினைத்த மிகவும் மதிப்புமிக்க பொருட்கள், சவக்கடல் (Dead Sea) போன்ற இடங்கள், உலகின் மற்ற பகுதிகள் அனைத்தையும் விட, அனைத்து யுரேனியம் சுரங்கங்கள் மற்றும் எல்லாவற் றையும் விட அதிகமான பொக்கிஷங்கள் சவக்கடலில் இருப்பதை நாம் காண்கிறோம். இங்கிலாந்து அரபு நாடுகளுக்குத் திரும்பக் கொடுக்கத் தயாராக இருந்த ஒரு சிறிய விஷயம். "அதில் ஒன்றுமில்லை" என்று சொன்னார்கள். அந்தப் பழைய பாறை நிலங்கள் அவர்களுக்கு எதற்கு? ஆனால், "அது ரோஜாவைப் போல பூத்து, தன் சம்பூரணத்தைக் கொடுக்கும்" என்று வேதம் சொன்னதை அவர்கள் அறியத் தவறினார்கள். 32 எவ்வளவு சிறிய... கடந்த காலங்களில் மனிதர்கள், இந்நாளில் கூட, தேவனுடைய வார்த்தையிலிருந்து அதை எடுத்துக் கொள்ளாமல் காரியங்களை எப்படித் தவறாகக் கணித்திருக்கிறார்கள். இங்கிலாந்து அப்போது எவ்வளவு பெரிய தவறைச் செய்தது. இந்தியாவுக்குத் தன் உரிமைகளைத் திரும்பக் கொடுத்ததன் மூலம் அவர்கள் எவ்வளவு பெரிய தவறைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் அந்தக் காரியங்களை உணரவில்லை, ஏனென்றால் அவர்கள் வேதாகமத்தை வாசிப்பதில்லை. தேசங்களுக்கு இடையே அது உண்மையாக இருக்குமானால், ஒவ்வொரு மனிதனுக்காகவும் தேவன் தம் வார்த்தையில் என்ன வைத்திருக்கிறார் என்பதைப் பார்க்க, நாளுக்கு நாள் வேதாகமத்தை வாசித்து தங்கள் வாழ்க்கையை மதிப்பிடாத மனிதகுலத்திற்கு இடையே, அது இன்று இரவு எவ்வளவு அதிகமாக உண்மையாக இருக்கும்; மேலும் தேவன் மீதும் அவருடைய வார்த்தை மீதும் உங்கள் மனப்பான்மை எப்படி இருக்கிறது. 33 பாபிலோனுக்குச் சிறைபிடித்துச் செல்லப்பட்ட இந்த நேரம், மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நேரமாக இருந்தது. முதலாவதாக, அவர்கள் எகிப்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இரண்டாவதாக, அவர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள், புறஜாதியினர் உள்ளே வந்தார்கள். பின்னர், மூன்றாவதாக, அவர்கள் ரோமப் பேரரசால் கொண்டு செல்லப்பட்டார்கள் அல்லது சிதறடிக்கப்பட்டார்கள். 34 1947-ல், மே 7-ம் தேதி, இருபத்தைநூறு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, உலக நாடுகளால் யூதர்கள் மீண்டும் அங்கீகரிக்கப் பட்டார்கள். முடிவின் ஆரம்பம். அத்திமரம் துளிர்விடுகிறது. தாவீதின் பழைய ஆறு முனை நட்சத்திரம், பூமியில் பறந்ததிலேயே மிகப் பழமையான கொடி, இருபத்தைநூறு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மீண்டும் கொடிக்கம்பத்தில் ஏறியது. இது எபிரேய தீர்க்கதரிசிகளுக்குத் தேவன் சொன்ன ஒரு திட்டவட்டமான வாக்குறுதி நடைபெறும் என்பதைக் குறிக்கிறது. "அவர் ஒரு கொடியை ஏற்றுவார்." 35 இன்று இரவு எருசலேமின் மேல் அது அசைவதைப் பார்க்கும்போது, யூதர்களைத் துன்புறுத்தவும், அவர்களைத் தாய்நாட்டிற்குத் துரத்தவும் ஸ்டாலின், ஹிட்லர், முசோலினி போன்ற மனிதர்களின் இருதயங்களை தேவன் கடினப்படுத்துவதைப் பார்க்கும்போது, காலம் சமீபமாயிருக்கிறது என்பதை நாம் அறிகிறோம். ஓ, இது எப்பேர்ப்பட்ட நாள், எப்பேர்ப்பட்ட வாய்ப்பு, கர்த்தராகிய இயேசுவின் மகிமைக் காகச் சாட்சி சொல்ல இன்று பலவீனமான கிறிஸ்தவனுக்குக் கூட வாய்ப்பிருக்கிறது. தீர்க்கதரிசிகள் செய்ய விரும்பிய ஒன்றைச் செய்ய எப்பேர்ப்பட்ட ஒரு வாய்ப்பு. அது மிகவும் பலவீனமான கிறிஸ்தவனின் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறிய இல்லத் தரசி, கர்த்தராகிய இயேசுவுக்கும் அவருடைய உயிர்த்தெழுதலுக்கும் சாட்சி சொல்வது இன்று அவள் கைகளில் இருக்கிறது. 36 யூதர்கள் தேவனை விட்டு விலகி, குளிர்ந்துபோய், பின்வாங்கிப் போயிருந்தார்கள். தேவன் ஒரு அந்நியத் தேசம் உள்ளே வர அனுமதித்தார், தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப் பட்டபடியே, அவர்கள் தேவனை விட்டு விலகிச் சென்றதால், அது அவர்களைச் சிதறடித்துச் சிறைபிடித்துச் செல்லும். 37 தேவன் யூதர்களை அவ்வளவாக நேசித்து, அவர்கள் அவருடைய முதல் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனமாக இருந்தும். அவர் யூதர்களை வெளியே அழைத்தார். இருப்பினும், அவர்கள் விதைத்தபோது, அவர்கள் விதைத்ததை அவர்கள் அறுக்க வேண்டியிருந்தது. அவருடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படியாதபோது, நாம் விலக்கப்படவில்லை, அல்லது தேவனுடைய நியாயத்தீர்ப்புகளிலிருந்து நமக்கு விலக்களிக்கப் படவில்லை. அது சரி. அது தேசங்களுக்கோ, தனிநபர்களுக்கோ, சபைகளுக்கோ, அல்லது எதுவாக இருந்தாலும் பொருந்தும். நாம் தேவனுக்குக் கீழ்ப்படியாத போது, அதற்கான நியாயத்தீர்ப்பை நாம் பெறுவோம். தேவன் நீதியுள்ளவர், வேறொன்றும் செய்ய முடியாது. ஆனால், "ஒவ்வொரு மனிதனும் தான் செய்த செயல்களுக்கு ஏற்ற நீதியான பிரதிபலனைப் பெறுவான்." 38 இப்போது, யூதர்கள் பின்வாங்கிப் போன அந்தப் பெரிய காலத்தில், அவர்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரைச் சேவிக்காததினால், தேவன் ஒரு அந்நியத் தேசத்தை வந்து, தெரிந்துகொள்ளப்பட்டவர்களைச் சிறைபிடித்துச் செல்ல அனுமதித்தார். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாளுக்கு இது மிகவும் அழகான ஒரு சித்திரம். இருந்தும், நாம் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப் பட்ட ஜனமாக, உலகின் மற்ற எவரையும் விட ஆசீர்வதிக்கப்பட்ட ஜனமாக இருக்கிறோம். ஆனால் நாம் தேவனுடைய கற்பனைகளை மறந்து, பெரிய குடிவெறி, களியாட்டம், விவாகரத்து மற்றும் விபச்சாரம் போன்றவற்றை அனுமதித்து, இந்த தேசத்தில் அதை முற்றிலும் சட்டப்பூர்வமாக்கும்போது, தேவன் விரும்பும் எந்த நேரத்திலும் வந்து அதை எடுத்துக் கொள்ளக்கூடிய தேசங்களை அவர் வைத்திருக்கிறார். 39 ரஷ்யாவிலிருந்து வெளியேறிய அந்த வர்ணனையாளர் மறுநாள் சொன்னதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவர்கள் எரிபொருள் நிரப்பாமலே பறக்கக்கூடிய குறைந்தது பத்தாயிரம் ஜெட் பாம்பர்களை (Jet bombers) வைத்திருக்கிறார்கள் என்றும், அமெரிக்காவின் மேல் பறந்து, எரிபொருள் நிரப்பாமலே திரும்பிச் செல்லக்கூடிய அணுகுண்டுகள் அவர்கள் ஹேங்கர்களில் (hangars) ஏற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு விமானமும் குறைந்தது எட்டு அல்லது பத்து அணு மற்றும் ஹைட்ரஜன் குண்டுகளைச் சுமந்து செல்கிறது, இது நூற்று ஐம்பது மில்லியன் மக்களை... இந்த தேசத்தை ஒரு மணி நேரத்தில் முழுமையாக அழித்துவிட முடியும். பாவம், ஊழல், கர்த்தரை கைவிடுதல், அவருடைய சித்தத்திற்கு மாறான காரியங்களைச் செய்தல், மற்றும் சரியானதைச் செய்ய முயற்சிப்பவர்களைப் பார்த்துச் சிரித்து கேலி செய்தல் ஆகியவற்றில் நாம் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறோம். பாபிலோனுக்கு சிறை பிடித்துச் செல்லப்பட்டதின் மறுபடியும் ஒரு நிகழ்வைத் தவிர வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும், மிகச் சரியாக! 40 கவனியுங்கள், அங்கே, தானியேல் என்ற பெயருடைய ஒரு ஊழியனை தேவன் வைத்திருந்தார், சுமார் நாற்பது வயதுடைய ஒரு இளம் தீர்க்கதரிசி, அவர் முழு இருதயத்தோடும் கர்த்தரைச் சேவித்து வந்தார், தேவன் அவருக்குச் செய்ய ஒரு வேலையை வைத்திருந்தார். பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதில்... 41 நினைவில் கொள்ளுங்கள், தேவன் உங்களுக்குச் செய்ய ஒரு வேலையை வைத்திருந்தால், நரகத்திலுள்ள பிசாசுகள் அனைத்தும் உங்களைத் தொட முடியாது. அவர்களால் உங்களை எந்த விதத்திலும் அசைக்க முடியாது. பரிசுத்த ஆவி சபைக்கென்று தேவன் ஒரு நோக்கத்தைக் கொண்டிருக்கிறார், நரகத்தின் பிசாசுகள் அனைத்தும் அதை ஒருபோதும் எடுத்துப்போட முடியாது. தேவன் அதற்கென்று ஒரு நோக்கத்தைக் கொண்டி ருக்கிறார். தேவன் எதைச் செய்ய அதை நியமித்தாரோ அந்த நோக்கத்தை அது நிறைவேற்ற அனுமதிக்கும் வரை அது ஒருபோதும் அழிக்கப்படாது. அது நிறைவேறும். 42 நினைவில் கொள்ளுங்கள், தானியேல் எபிரேய வாலிபர்களுடன் அங்கே சென்றபோது, அவர்களில் அநேகர் ஏற்கனவே உலக சிந்தனையுள்ளவர்களாக இருந்தார்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அவர்களில் அநேகர் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை, அவர்கள் எதிர்ப்பு இல்லாத திசையில் அப்படியே போனார்கள். 43 அது இன்றைய நம் நாட்டின் நிலையை அப்படியே சித்திரிக்கிறது அல்லவா? இது அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் இது இன்றைய சபையின் நிலையைப் பற்றியது, தேசத்தைப் பற்றி மட்டுமல்ல; எதிர்ப்பு இல்லாத திசையில் மிதந்து செல்வது. காற்று எந்தத் திசையில் வீசுகிறதோ, அப்படியே பாய்மரத்தை அமைத்து, நேராகச் செல்லுங்கள். 44 ஓ தேவனே, தானியேலைப் போன்ற மனிதர்களை எங்களுக்குத் தாரும். சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ போன்ற கிறிஸ்தவர்களை எங்களுக்குத் தாரும், அவர்கள் கர்த்தருடைய ஊழியராக மாறத் தங்களுக்குள்ள ஒவ்வொரு உரிமையையும் தியாகம் செய்யவோ இழக்கவோ தயாராக இருக்கிறார்கள். 45 கவனியுங்கள். தானியேல், பாபிலோ னுக்குக் கீழே சென்றபோது, தான் அவிசுவா சிகளான, விருத்தசேதனமில்லாதவர்கள் மத்தியில் செல்கிறோம் என்பதை அறிந்திருந்தார். அவர் அங்கு சென்றபோது, அவர்களுடன் சிக்கிக் கொள்வோம் என்பதை அறிந்திருந்தார்; அவர் அப்படி இருக்க விரும்பியதால் அல்ல, ஆனால் தேசம் விழுந்துவிட்டதால் அவர்களுடன் சிறைபிடிக்கப்பட்டுச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் ஒரு அந்நியனாக தேவன் அவரோடு இருந்தார். நான் அதை நேசிக்கிறேன். இல்லை, நாம் ஒரு அந்நியனாக இருந்தாலும், தேவன் இன்னும் உங்களோடு இருப்பார். 46 ஒரு சிறிய கதை, எனக்குத் தெரியாது... நான் அதை பலமுறை சொல்லியிருக்கிறேன். நான் அதை கூடாரத்தில் (tabernacle) சொல்லியிருக்கலாம், ஆனால் இந்த நேரத்தில் அது என் இருதயத்தில் வருகிறது. சில காலத்திற்கு முன்பு, தெற்குப் பகுதிகளில், அவர்கள் அடிமைகளை வாங்குவது வழக்கம். இன்று பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை நிலையத்தில் (used car lot) செய்வது போல, அவர்கள் தரகர்களை அனுப்பி அடிமைகளை வாங்குவார்கள்; மக்களை, கருப்பின இனத்தவரை, அடிமைகளாக விற்பார்கள். அவர்கள் அப்படிச் செய்தபோது, மக்கள் பழைய தோட்டங்களைக் கடந்து செல்லும்போது, அடிமைகளின் கூட்டத்தைப் பார்ப்பார்கள்; அவர்கள் நல்ல வேலையாட்களாகத் தெரிந்தால், அவர் ஒரு குறிப்பிட்ட விலையைக் கேட்பார், இந்த அடிமைகளை வாங்கி வேறு எங்காவது நல்ல வேலையாட்களாக விற்று, அந்தப் பரிமாற்றத்தில் லாபம் சம்பாதிப்பார். 47 இப்போது, ஒரு நாள் ஒரு தரகர் வந்தார், அவர் ஒரு குறிப்பிட்ட தோட்டத்தில் நூறு அல்லது அதற்கு மேற்பட்ட அடிமைகள் வேலை செய்வதைக் கண்டார், அவர்கள் வீட்டை விட்டு வெகுதூரத்தில் இருந்ததால் சோகமாக இருந்தார்கள். அவர்கள் வேலை செய்யாததால் பலமுறை அவர்களைச் சாட்டையால் அடிப்பார்கள். அவர்கள் இனி ஒருபோதும் வீட்டிற்குச் செல்ல முடியாது என்று நினைத்தார்கள்; தங்கள் குழந்தைகளை ஒருபோதும் பார்க்க முடியாது; அப்பா அம்மாவை ஒருபோதும் பார்க்க முடியாது; தங்கள் உறவினர்களை ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் மிகவும் மனச் சோர்வடைந்திருந்தார்கள், குறிப்பாக நீங்கள் ஒடுக்கப்படும்போது அப்படி ஆவது மிகவும் எளிது. 48 பிசாசு உங்கள் மீது வேலை செய்யவும், உங்களை ஒடுக்கவும் விரும்புவது அதுதான். உங்களுக்குத் தெரியும், ஒடுக்குவது பிசாசின் ஒரு தந்திரம். ஆனால் கிறிஸ்தவன் தனது சட்டரீதியான உரிமைகளை அறியும்போது! ஆமென்! "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவது மில்லை" என்ற தேவனுடைய வார்த்தையை நீங்கள் மேற்கோள் காட்டும்போது, அது எல்லா ஒடுக்குமுறையையும் நீக்கிவிடுகிறது. மேகங்கள் விலகத் தொடங்குகின்றன. ஆனால் தேவன் வாக்குறுதி அளித்திருக்கிறார் என்பதையும், தேவன் உண்மையுள்ளவர் என்பதையும் நீங்கள் அறிந்திருந்தால் போதும்! அவரால் தமது வாக்குறுதியைக் காப்பாற்ற முடியும், இல்லை யென்றால் அவர் ஒருபோதும் வாக்குறுதி அளித்திருக்க மாட்டார். 49 பின்னர் இந்தத் தரகர் வந்தார், அந்த அடிமைகளில் ஒருவரைக் கவனித்தார். ஓ, என் தேவனே, அவன் மற்றவர்களைப் போல் இல்லை. அவனைச் சாட்டையால் அடிக்கத் தேவையில்லை. அவன் நிமிர்ந்து, தன் நெஞ்சை நிமிர்த்தி, தலையை உயர்த்தி இருந்தான். அவன் வேலை செய்யவோ எதையும் செய்யவோ தயாராக இருந்தான், மிகவும் சுறுசுறுப்பான, புத்திசாலித்தனமான மனிதன். அந்தத் தரகர் சொன்னார், "நான் அவனை வாங்க விரும்புகிறேன்." அவர் சொன்னார், "அவன்..." உரிமையாளர் சொன்னார், "அவன் விற்பனைக்கு அல்ல." அவர் கேட்டார், "ஏன், என்ன விஷயம்?" அவர் கேட்டார், "அவன் மற்றவர்களுக்குத் தலைவனா?" "இல்லை. அவன் ஒரு அடிமை தான்" என்று சொன்னார். "ஏன்," "ஒருவேளை மற்றவர்களை விட அவனுக்குச் சாப்பாடு கொஞ்சம் நன்றாகப் போடுகிறீர்களோ?" என்று கேட்டார். அவர் சொன்னார், "இல்லை, அவன் மற்ற எல்லோருடனும் சேர்ந்து அங்கே சமையலறையில் தான் சாப்பிடுகிறான்." "சரி," "அப்புறம் எது அவனை இவ்வளவு உற்சாகமாக வைத்திருக்கிறது?" என்று கேட்டார். 50 "நானே ஆச்சரியப்பட்டேன், ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கும் வரை" என்று சொன்னார். "நான் என்ன கண்டுபிடித்தேன் தெரியுமா? அவனுடைய தந்தை அந்தப் பழங்குடியினரின் ராஜா. அவன் ஒரு அந்நியனாக இருந்தாலும், தான் ஒரு ராஜாவின் குமாரன் என்பதை அவன் அறிந்திருக்கிறான்." ஆமென். 51 சகோதரனே, பாவமும் குழப்பமும் உள்ள இந்த உலகில் நாம் அந்நியர்களாக இருந்தாலும், உங்கள் நெஞ்சை நிமிர்த்தி, உங்கள் கண்களை உயர்த்துங்கள், நீங்கள் ஒரு ராஜாவின் குமாரர்கள் மற்றும் குமாரத்திகள். எப்பேர்ப்பட்ட ஒரு நபராக... மற்றவர்களின் மன உறுதியைத் தக்கவைக்க அவன் அப்படிச் செய்தான். 52 பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்த நாமும் அதைத்தான் செய்ய வேண்டும், நல்ல தைரியத்தைக் கொண்டிருக்க வேண்டும். நாம் எப்பேர்ப்பட்ட மக்களாக இருக்க வேண்டும், நமது பரலோக பிதா ராஜா என்பதை அறிந்து. 53 ஒரே ஒரு விஷயம், அந்த அடிமை தான் மீண்டும் வீட்டிற்குச் செல்வானா என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால், ஆசீர்வதிக்கப் பட்ட ஒரு விஷயம் இருக்கிறது, நாம் ஒரு நாள் வீட்டிற்குச் செல்கிறோம் என்பது நமக்குத் தெரியும். ஆமென். இயேசு சொன்னார், "நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. வேறு எதையும் பற்றி நினைக்காதீர்கள், ஆனால் உங்கள் மனதை இந்தக் காரியங்களில் வையுங்கள்." அது நள்ளிரவில் ஒரு பாடும் பறவையை (mockingbird) பாட வைக்கும். அவனால் அறிய முடியும் போது! 54 நான் அடிக்கடி ஆச்சரியப் பட்டிருக்கிறேன். சகோதரர் ரைட் இங்கே அமர்ந்திருப்பதை நான் பார்க்கிறேன். நான் பாப்டிஸ்ட் சபையில் பிரசங்கம் செய்வேனே. அந்தப் பழைய பாடும் பறவை இரவில் வெளியே அமர்ந்து அந்தத் தேவதாரு புதரில் பாடுவதை நான் பார்த்திருக்கிறேன். எது அதைப் பாட வைக்கிறது என்று நான் ஆச்சரியப் பட்டேன். நான் பறவைகளைப் பற்றி வாசிக்கத் தொடங்கினேன். அது என்ன செய்கிறது என்பதை நான் கண்டுபிடித்தேன், மேக மூட்டமான இரவில், அது எப்போதாவது பாடும்; அது நட்சத்திரங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும். நட்சத்திரங்கள் மின்னுவதைப் பார்க்கும் போதெல்லாம், எங்கேயோ சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்று அதற்குத் தெரியும், எனவே அது பாடத் தொடங்குகிறது. 55 கிறிஸ்தவர்களுக்கும் அது அப்படித்தான் என்று நான் நினைக்கிறேன். தேவனுடைய பிரசன்னம் நம்முடன் இருப்பதை நாம் உணரவும் அறியவும் முடியும் வரை, அவ்வப்போது சிறிது மகிமை இறங்கி வரும்போது, ஒரு நல்ல பழைய பாணியிலான எழுப்புதல், அல்லது ஒரு பழைய அல்லேலூயா பாடல் நம் முழு இருதயத்தோடும் பாட வைக்கும்போது, ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் எங்கேயோ இறங்கிக் கொண்டிருக்கிறார் என்று நமக்குத் தெரியும். தேவன் இன்னும் மகிமைப்படுகிறார். எப்பேர்ப்பட்ட அற்புதமான விஷயம்! 56 தானியேல், ஒரு அந்நியன், வீட்டை விட்டு வெகுதூரத்தில், கீழே, ஆனால் அவன் என்ன செய்தான் என்று பாருங்கள். "அவன் ராஜாவின் போஜனத்தினால் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ள மாட்டேன் என்று தன் இருதயத்தில் தீர்மானித்தான்." ஓ, ராஜாவின் ஆடம்பரமான உணவுகள், மற்றும் அவன் சாப்பிட வேண்டிய அவனுடைய சுவையான உணவுகள், அவனுடைய திராட்சரசங்கள், மதுபானங்கள், ஆனால் அவன் ஒரு அந்நியனாக இருந்தபோது, தன்னை தேவனுக்காகக் காத்துக்கொள்வேன் என்று தன் இருதயத்தில் தீர்மானித்தான். ஆமென். 57 அங்கேதான் காரியம். உலகம் உங்களைக் கைவிட்டாலும், எல்லோரும் உங்களைப் பார்த்துச் சிரித்து, அழைக்கப்படக்கூடிய ஒவ்வொரு வெறித்தனமான பெயரிலும் உங்களை அழைத்தாலும், சரியானதைச் செய்ய உங்கள் இருதயத்தில் தீர்மானியுங்கள். உலகத்தோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டேன் என்று உங்கள் இருதயத்தில் தீர்மானியுங்கள். 58 நாம் கர்த்தருடைய வருகையின் நிழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாருக்காவது நீங்கள் என்ன வாக்குறுதி அளிக்க முடியும்? எந்தத் தேசத்தால் என்ன வாக்குறுதி அளிக்க முடியும்? ஒரு வாக்குறுதியும் மிச்சமில்லை. எதுவும் மிச்சமில்லை. எல்லாவற்றிலும் குழப்பம் இருக்கிறது. இந்த வழியில் எதுவும் இல்லை, நீங்கள் பார்க்கலாம். ஆனால் அந்த வழியாக மேலே பாருங்கள், வார்த்தையில் உள்ள ஒவ்வொரு வாக்குறுதியும் உண்மை. ஏதோ ஒரு மகிமையான நாளில், இயேசு வருவார், இந்தக் காரியங்கள் அனைத்தும் அகற்றப்படும், கிறிஸ்து ஆட்சி செய்வார். 59 நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் பழைய பலவீனமான, அழியக்கூடிய சரீரங்களும், நாம் நடந்து கொண்டிருக்கும் இந்தச் சிறிய எளிதில் உடையக்கூடிய வாழ்க்கையின் இழைகளும், ஒரு நாள் இல்லாமல் போகும் என்பதை அறிவது ஒரு அற்புதமான நம்பிக்கை இல்லையா? சுழன்று கொண்டிருக்கும் ஒவ்வொரு மனுஷீக சக்கரமும் நின்றுவிடும், நாம் தேவனுடைய பிரசன்னத்தில் என்றென்றைக்கும் வாழ சீயோன் மலைக்கு ஒரு பயணம் மேற்கொள்வோம். ஒரு புதிய ஆணாகவும், புதிய பெண்ணாகவும், இளமையாகவும், இளமையின் மகிமையுடனும், என்றென்றைக்கும் அப்படியே இருக்க. முதியவர்கள் அங்கே இளைஞர்களாவார்கள், என்றென்றைக்கும், ஒரு இமைப்பொழுதில் மறுரூபமாக்கப்படுவார்கள்; அழியாதவர்களாய், அவருடைய சாயலில் பிரகாசிப்பார்கள், நட்சத்திரங்களையும் சூரியனையும் விடப் பிரகாசிப்பார்கள். 60 இதைப் பற்றி நமக்கு எப்பேர்ப்பட்ட ஒரு மகிமையான நிச்சயம் இருக்கிறது, ஏனென்றால் தேவனுடைய நித்திய வார்த்தை, எல்லா காலங்களிலும் உண்மையாக இருந்தவர், விசுவாசிக்கு அதை வாக்களித்திருக்கிறார். நாம் கவலைப்பட என்ன இருக்கிறது? ஒன்று மில்லை. ஆனால், அதைப்பற்றி மகிழ்ச்சியாக இருங்கள். 61 இப்போது, தானியேல் சொன்னான், "நான் என் இருதயத்தில் தீர்மானிக்கப் போகிறேன், அவர்கள் எனக்கு எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், அவர்கள் எவ்வளவு சிரித்து நான் ஒரு ஹோலி-ரோலர் (holy-roller) என்று சொன்னாலும், அது என்னைச் சிறிதும் பாதிக்காது. அது என்னைச் சிறிதும் அசைக்காது. என்ன நடந்தாலும் நான் தேவனுக்கு உண்மையாக இருப்பேன்." அதுதான் வழி. அந்த மனப்பான்மையுடன் நீங்கள் தொடங்கும் போது நீங்கள் ஒரு இடத்தை அடைவீர்கள். 62 நினைவில் கொள்ளுங்கள், எதை நோக்கியும் நீங்கள் கொண்டிருக்கும் நோக்கங்கள் தான், அதிலிருந்து நீங்கள் எதைப் பெறப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது. அது உங்கள் நோக்கங்கள். உங்கள் நோக்கங்கள் சரியாக இருந்தால், நீங்கள் சரியாக இருப்பீர்கள். ஆனால் எப்போதும் உங்கள் நோக்கங்களைச் சரியாக வைத்துக்கொள்ளுங்கள். ஒரே நோக்கத்திற்காகக் கர்த்தரைச் சேவியுங்கள், ஏனென்றால் நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள்; நீங்கள் நரகத்திற்குப் பயப்படுவதால் அல்ல, நீங்கள் சாவதற்குப் பயப்படுவதால் அல்ல; ஆனால் நீங்கள் நேசிக்கப்பட முடியாதவர்களாய் இருந்தபோது உங்களை நேசித்தவரை, நீங்கள் நேசிப்பதாலேயே. அதுதான். அன்புள்ள மரிக்கும் ஆட்டுக்குட்டியே, உமது விலையேறப்பெற்ற இரத்தம் ஒருபோதும் அதன் வல்லமையை இழக்காது, தேவனால் மீட்கப்பட்ட சபை முழுவதும் இரட்சிக்கப்பட்டு, இனி பாவம் செய்யாதிருக்கும் வரை. (அது சரி.) விசுவாசத்தினால் அந்த நீரூற்றை நான் கண்டதிலிருந்து உமது பாய்கின்ற காயங்கள் அதை அளிக்கின்றன, மீட்கும் அன்பு என் கருப்பொருளாக இருக்கிறது, நான் மரிக்கும் வரை அது இருக்கும். 63 கவிஞரின் எப்பேர்ப்பட்ட அற்புதமான மேற்கோள்! அது சரி. மற்ற எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் எனக்கு அன்பைக் கொடுங்கள். வேதாகமத்திலுள்ள எல்லா வரங்களும் என்னிடம் இருந்து, அதை அன்பிற்குப் பரிமாறிக் கொள்ள முடிந்தால், நான் ஒருபோதும் கண் சிமிட்ட மாட்டேன்; இப்போதே அதை எடுத்துக்கொள்வேன். கர்த்தராகிய இயேசுவின் ஆசீர்வாதங்களையும், பரிசுத்த ஆவியானவரால் என் இருதயத்தில் ஊற்றப்பட்ட அவருடைய தெய்வீக அன்பையும் நான் உணரட்டும், வேதாகமத்திலுள்ள எந்த வரத்தையும் அதற்குப் பதிலாகக் கொடுப்பேன். ஆம், ஐயா. நான் ஒரு ராஜ்யத்தையே பரிமாற்றம் செய்வேன், நான் ஒரு ராஜாவாக இருந்து சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாலும், உலகம் என்னுடைய ராஜ்யமாக இருந்தாலும், பரிசுத்த ஆவியானவரால் நம் இருதயங்களில் ஊற்றப்பட்ட இயேசு கிறிஸ்துவின் அன்பைப் பெறுவதற்காக, அதன் ஒவ்வொரு காசையும் கொடுப்பேன், இந்த உலக வாழ்க்கையில் ஒரு மில்லியன் வருடங்களை இழக்கவும் செய்வேன். அதற்கு ஒப்பிட எதுவும் இல்லை. எனவே உலகம் என்ன சொன்னாலும் கர்த்தரைச் சேவிப்பேன் என்று உங்கள் இருதயத்தில் இப்போதே தீர்மானியுங்கள். 64 ஓ, பிசாசு எவ்வளவு தந்திரமானவன்! நண்பர்களே, அவன் எவ்வளவு நயவஞ்சக மானவன்! உலகெங்கிலும் மற்றும் வெவ்வேறு தேசங்களில் கர்த்தர் எனக்குக் கொடுத்த சிறிய ஊழியத்தின் எல்லைக்குள் அவனைக் கவனியுங்கள், பிசாசின் அந்த நயவஞ்சகமான கையைப் பார்ப்பது, மிகவும் தந்திரமானது. அவன் உங்களை எவ்வளவு எளிதாகக் குழப்ப முடியும், அது உண்மை போலவே தோற்ற மளிக்கச் செய்ய முடியும். ஆம், ஐயா. 65 சொல்லப்பட்ட மிகப்பெரிய பொய்யில் உண்மை இருந்தது. சொல்லப்பட்ட முதல் பொய்யில் உண்மை இருந்தது. ஏவாளிடம் பிசாசு சொன்ன முதல் பொய்யில் நிறைய உண்மை இருந்தது. சொன்னான், "அவள் கண்கள் திறக்கப்படும். அவள்... அவள் ஞானமடைவாள். அவளுக்கு அதிக அறிவு இருக்கும்." அதெல்லாம் உண்மை. பின்னர் அவன் சொன்னான், "நிச்சயமாக, நீ சாகமாட்டாய்." ஆனால் தேவன் சொன்னார், "நீ சாவாய்." எனவே அது அதைத் தீர்த்துவிட்டது, வார்த்தைக்கு உண்மையாக இருங்கள். 66 தானியேல் தேவனுக்கும் தேவனுடைய வார்த்தைக்கும் உண்மையாக இருப்பேன் என்று தன் இருதயத்தில் தீர்மானித்தான். அவன் அங்கே இருந்தபோது, கர்த்தரால் அவனைப் பயன்படுத்த முடிந்தது. அவரால் ஏன் தானியேலைப் பயன்படுத்த முடிந்தது? ஏனென்றால் அவன் தன் இருதயத்தில் தீர்மானித்தான். நீங்கள் தேவனால் பயன்படுத்தப்பட விரும்பினால், அவரை நேசிப்பேன், அவரைச் சேவிப்பேன் என்று உங்கள் இருதயத்தில் தீர்மானியுங்கள், அப்பொழுது எல்லாம் நன்றாக இருக்கும். ராஜா ஒரு சொப்பனம் கண்டான். 67 ஓ, அதற்குள் செல்வதற்கு எனக்கு நேரம் இருந்திருக்க வேண்டும் என்று நான் எவ்வளவு விரும்புகிறேன்... நான் இதைப்பற்றி, ஒருமுறை இங்கே கூடாரத்தில், வாரக்கணக்காகப் பிரசங்கித்தேன், பல வருடங்களுக்கு முன்பு, சுமார் பதினைந்து, ஒருவேளை இருபது வருடங்களுக்கு முன்பு. 68 புறஜாதியினரின் காலம் துவங்கியபோது, தேவன் அங்கே புறஜாதியினரிடம் திரும்பி, ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தயவு காட்டி, அவனுக்கு ஒரு பெரிய சிம்மாசனத்தைக் கொடுத்தபோது, நடந்த முதல் விஷயம் என்னவென்றால், அந்த ராஜா தன் இருதயத்தில் மேட்டிமையடைந்தான். அப்படிச் செய்வது புறஜாதியினரின் சுபாவத்திலேயே ஊறிப்போன ஒன்று. "நாங்கள் ஏதோ பெரிய ஆட்கள்" என்று பெருமை கொள்வார்கள். 69 சபைகளுக்கு நேர்ந்ததும் அதுதான். அவர்கள் பெருமை கொண்டார்கள், "நாங்கள் ஒரு பெரிய டினாமினேஷன் (பிரிவு)." பிரஸ்பைடீரியன், மெத்தடிஸ்ட், பாப்டிஸ்ட், பெந்தெகொஸ்தே மற்றும் மற்ற அனைவருக்கும் நேர்ந்தது இதுதான். நீங்கள் பெருமை கொள்கிறீர்கள்; நீங்கள் ஏதோ பெரியவர்கள். நீங்கள் அப்படிச் செய்யும்போதுதான் தேவன் உங்களை விட்டு விலகுகிறார். நீங்கள் ஒரு வல்லமையான அமைப்பாக மாறுகிறீர்கள். 70 ஆனால் நான்... உலகத்திலுள்ள எல்லா அமைப்புகளையும் கொண்டிருப்பதை விட, அல்லது மிகப்பெரிய சபைக்குச் செல்வதை விட, அல்லது பெரும்பான்மையினரைச் சார்ந்திருப்பதை விட, கர்த்தருடைய ஒரு தாழ்மையான ஊழியனாக இருக்கவே நான் விரும்புகிறேன். எப்படியிருந்தாலும் நான் சிறுபான்மையினரில் இருக்கவே விரும்புகிறேன், தேவனுக்கு முன்பாகச் சரியாக இருக்க விரும்புகிறேன். ஆம், எந்த நேரத்திலும். 71 ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், தன் இருதயத்தில் மேட்டிமையடைந்த விதத்தையும், தேவன் அவனைப் பல வருடங்களுக்கு ஒரு எருதைப் போலப் புல்லைத் தின்ன வைத்த விதத்தையும் நாம் பார்க்கும்போது... அவனுடைய தலைமுடி கழுகின் இறகுகளைப் போலவும், அவனுடைய விரல் நகங்கள் பறவையின் நகங்களைப் போலவும் எப்படி வளர்ந்தன என்பதையும், தான் ஒன்றுமில் லாதவன் என்றும், பரலோகத்தின் தேவனே தான் விரும்புகிறவரை உயர்த்தி, தான் விரும்புகிறவரைக் கீழே தள்ளுகிறார் என்பதையும் அந்த ராஜா தன் இருதயத்தில் உணரும் வரை அது தொடர்ந்தது. 72 பல நேரங்களில், கழுகின் இறகுகளைப் போல நம் தலைமுடி வளராமல் இருக்கலாம், கழுகின் நகங்களைப் போல நம் விரல் நகங்கள் வளராமல் இருக்கலாம், நாம் ஒரு எருதைப் போலப் புல்லைத் தின்னாமல் இருக்கலாம், ஆனால் சில நேரங்களில் தேவன் இன்னும் நம் வாழ்க்கையின் ஆட்சியாளராக இருக்கிறார் என்பதை நமக்குத் தெரியப்படுத்த, அவர் நம் மீது உபத்திரவத்தை அனுமதிக்க வேண்டி யிருக்கிறது. நாம் இங்கே இருப்பதற்கு அவர் அனுமதிப்பதே காரணம் என்றும், அவருடைய கிருபையினாலேயே நாம் இங்கே இருக்கிறோம் என்றும், நாம் அவரைச் சேவிக்க வேண்டும் என்றும் அறிந்துகொள்ள வேண்டும். 73 சில காலத்திற்கு முன்பு, நான் இங்கே இடாஹோவில் ஒரு மனிதரிடம் பேசிக் கொண்டிருந்தேன், அவர் சொன்னார், "மிஸ்டர் பிரான்ஹாம்," அவர் சொன்னார், "நான் பன்றிகளை வளர்க்கிறேன்." அவர் சொன்னார், "என் தாத்தாவிடம் இந்தக் கூட்டம் இருந்தது. அவர் எங்களைப் படிக்க வைத்தார். அதே கூட்டத்தைக் கொண்டு, நான் என் பிள்ளைகளைப் படிக்க வைத்தேன். என் பிள்ளைகள் வளர்ந்து வந்து, அதே கூட்டத்தைக் கொண்டு அவர்களுடைய பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள்." 74 நான் சொன்னேன், "அது மிகவும் நல்லது, ஐயா. கால்நடைகளை வளர்ப்பது ஒரு நியாயமான தொழில் தான். ஆனால்," நான் சொன்னேன், "உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க, பன்றிகளை வளர்ப்பதைத் தவிர வேறு நோக்கத்திற்காகவும் தேவன் உங்களை இங்கே வைத்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் தேவனுடைய குமாரர் களாகவும் குமாரத்திகளாகவும் இருப்பதற்காகவே தேவன் உங்களை இங்கே வைத்திருக்கிறார். நீங்கள் அதைப் பெறத் தவறினால், தேவன் உங்களை பூமியில் வைத்த நோக்கத்தையே நீங்கள் பெறத் தவறிவிடுகிறீர்கள்." அது சரி. 75 நீங்கள் எவ்வளவு நேர்மையானவராக, எவ்வளவு கண்ணியமானவராக, எவ்வளவு ஒழுக்கமானவராக இருந்தாலும், நீங்கள் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், நீங்கள் பழகக்கூடிய எப்பேர்ப்பட்ட நல்ல மனிதராக இருந்தாலும்; கர்த்தராகிய இயேசுவைச் சேவித்து, தேவனுடைய குமாரனாகவும் குமாரத்தியாகவும் மாறும் வரை, நீங்கள் இன்னும் அந்த அழைப்பைத் தவற விட்டிருக்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு நல்ல அண்டை வீட்டாராக இருந்தாலும், வேறு எதிலும் எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும், அதெல்லாம் நல்லது, அதை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால், என் சகோதரனே, நீங்கள் தேவனுடைய குமாரனாக மாறும் வரை, தேவன் உங்களை பூமியில் வைத்த நோக்கத்திற்குப் பதிலளிக்கத் தவறிவிடுகிறீர்கள். அது சரி. இப்போது, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், ஒரு அகம்பாவமுள்ள மனிதனாக இருந்தான். அவன் சொன்னான், "நான் என்ன செய்திருக்கிறேன் என்று பாருங்கள்!" 76 அப்போது கர்த்தர் அவனுக்கு ஒரு சொப்பனத்தைக் கொடுத்தார், அது அவனைக் கலங்கப்பண்ணினது. அப்போது, அவன் ஒரு பெரிய சிலையைக் கண்டான். அந்தச் சிலையைப் பற்றி நாம் நன்கு அறிந்திருக் கிறோம். தேவனுடைய நித்திய வார்த்தையின் துல்லியத்தைக் கவனியுங்கள். ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் ஒரு பொன்னான தலையைக் கொண்ட சிலையைக் கண்டான். அதின் மார்பு வெள்ளியினால் இருந்தது. அதின் தொடைகள் வெண்கலமாக இருந்தன. அதின் பாதங்கள் இரும்பும் களிமண்ணுமாய் இருந்தன. இப்போது அந்த ராஜ்யங்கள் எப்படி... இருப்பதிலேயே மென்மையான உலோகம் பொன். அடுத்து வருவது, அதைவிடக் கடினமானது, வெள்ளி. அடுத்தது வெண்கலம். எல்லாவற்றிலும் கடினமானது இரும்பு. இரும்பு மிகவும் கடினமானது. புறஜாதியினரின் உலகம் எப்படித் தொடங்கும் என்பதைக் கவனியுங்கள். அது மென்மையாகத் தொடங்கி, பின்னர் கடினமாகி, கடினமாகி, கடினமாகி, கடைசியாக அது களிமண்ணும் இரும்பும் ஒன்றாகக் கலந்த நிலைக்குச் செல்லும். அந்த ராஜ்யங்கள் ஒவ்வொன்றும்... 77 நினைத்துப் பாருங்கள், இருபத்தைநூறு ஆண்டுகளுக்கு முன்பு, கர்த்தரைச் சேவிப்பேன் என்றும், தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ள மாட்டேன் என்றும் தன் இருதயத்தில் தீர்மானித்த ஒரு தனி நபர், இந்நாளைப் பற்றி மிகத் துல்லியமாக முன்னறிவித்தார். ஒவ்வொரு காலகட்டமும் கீழே வருவதை, மிகச்சரியாக. பாபிலோனிய ராஜ்யம் எப்படி அகற்றப்பட்டது; மேதியரும் பெர்சியரும் அதை எப்படி எடுத்துக்கொண்டார்கள்; கிரேக்கம் அதை எப்படி எடுத்துக்கொண்டது; ரோம் அதை எடுத்துக் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்கு ரோமாகிய இரண்டு பாதங்களாக எப்படி உடைந்தது. 78 ரோமப் பேரரசில், புறஜாதியினரிடையே இரண்டு வித்தியாசமான சபைகள் எப்படி இருக்கும், ஒன்று கத்தோலிக்கமாகவும் மற்றொன்று புராட்டஸ்டன்ட்டாகவும் இருக்கும். ரோமன் கத்தோலிக்க சபையின் இரும்பும், புராட்டஸ்டன்ட்டின் களிமண்ணும், அவை எப்படி ஒன்றாகக் கலக்காது, ஆனால் விதைகளைக் கலப்பார்கள், ஒன்று மற்றொன்றின் வல்லமையை உடைக்க முயற்சிக்கும் வகையில் ஒன்று மற்றொன்றில் திருமணம் செய்துகொள்ளும். தேவன் எப்படி நடக்கும் என்று சொன்னாரோ, மிகச்சரியாக அப்படியே நடக்கும். 79 அது நிறைவேறியிருக்கிறது, அது எவ்வளவு சரியாக நிறைவேற முடியுமோ அவ்வளவு சரியாக நிறைவேறியிருக்கிறது, தேவனுடைய மற்ற ஒவ்வொரு வாக்குறுதியும் அதைப் போலவே சரியாக நிறைவேறும். ஒரு நாள் நாம் மகிமையான வீட்டிற்குச் செல்லப் போகிறோம், ஒரு நாள் இயேசு வரப்போகிறார். 80 நான் நம்புகிறேன், இப்போது வேத பகுதிக்கு வருவோம், புறஜாதியினரின் சபையின் மேல் தேவன் தம்முடைய ஆவியை ஊற்றுவேன் என்று வாக்களித்த அதே நாளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தொடக்கத்தில், பெந்தெ கொஸ்தே நாளில், அவர் எபிரேய சபையின் மேல் தம்முடைய ஆவியை ஊற்றினார். அவர் சொன்னார், "முன்மாரியும் பின்மாரியும் இருக்கும்," யூதரும் புறஜாதியினருமான இரண்டு வெவ்வேறு மக்கள். இந்தக் கடைசி நாட்களில், "புறஜாதி சபையின் மேல் அவர் தம்முடைய ஆவியை ஊற்றுவார்." 81 இப்போது, நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ராஜா இந்தத் தரிசனத்தைக் கண்டவுடனே, அவன் அதைச் செய்தான், அவன் தன் ராஜ்யத்திலுள்ள, தன் ஆளுகைக்குட்பட்ட ஒவ்வொரு நபரையும் இந்தச் சிலையை வணங்கும்படி கட்டாயப் படுத்தினான். அவன் ஒரு சிலையைச் செய்தான். அது அறிஞர்களால் நம்பப்படுகிறது... ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு நபர் அதைப் பார்ப்பார் என்று நான் நம்புகிறேன், அது... அவன் தானியேலைத் தான் வணங்கினான், அவன் செய்தது அதுதான். அவன் தானியேலுக்கு ஒரு சிலையைச் செய்தான், அதற்கு "பெல்தெஷாத்சார்" என்று பெயரிட்டான். அவன் தானியேலை, "பெல்தெஷாத்சார்" என்று அழைத்தான், அது அவனுடைய தேவனின் பெயராக இருந்தது. அவன் ஒரு சிலையைச் செய்து, ஒவ்வொரு நபரையும் அந்தச் சிலையை வணங்கும்படி கட்டாயப்படுத்தினான். 82 நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், புறஜாதியினரின் ஆரம்பத்தில், தேவன் அவர்களுடன் இடைப்பட்டபோது, அவர்கள் தங்கள் இருதயத்தில் அகம் பாவமடைந்து, ஒவ்வொரு மனிதனையும் ஒரு பரிசுத்த மனிதனின் சிலையை வணங்கும்படி கட்டாயப்படுத்தினார்கள். புறஜாதியினரின் காலம் அதையுடன்தான் துவங்கியது. அதே வழியில் தான் அது வெளியேறும், மிருகத்தின் முத்திரையைப் புறக்கணிப்பது, இது மக்களைச் சிலைகளை வணங்கவும், தேவனுடைய வார்த்தைக்கு முரணானது என்று நாம் போதிக்கப்பட்ட காரியங்களைச் செய்யவும் கட்டாயப்படுத்தும். சகோதரனே, அது மிகவும் நயவஞ்சகமாகவும் தந்திரமாகவும் இருக்கும், "கூடுமானால் அது தெரிந்து கொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கும்." ஆகவே, அந்த அறிவிப்பு வெளியிடப் படும்போது, சரியானதையும் தவறானதையும் உங்களால் பகுத்துணர முடியும் படிக்கு, இன்று இரவு உங்கள் இருதயத்தில் தீர்மானித்து, தேவனுடைய பரிசுத்த ஆவியால் நிரப்பப் பட்டிருங்கள். அல்லேலூயா! 83 கிழக்கு, மத்திய கிழக்கு வல்லமைகள் அனைத்தையும் நாம் பார்க்கும்போது, கிழக்கும் மேற்கும் மீண்டும் இணைவதைப் பார்க்கும்போது, தானியேலின் தரிசனத்தில் அந்த இரண்டு பாதங்களையும் காண்கிறோம். பார்த்தீர்களா? அது மீண்டும் திரும்ப வருகிறது, பழைய ரோமப் பேரரசு மீண்டும் உயிர்பெற்று வருகிறது, நான் இங்கே நிற்பது எவ்வளவு நிச்சயமோ அதுவும் அவ்வளவு நிச்சயம். அது உண்மை. தானியேல்கள் எழும்ப வேண்டிய நேரம் இது. உலகம் என்ன சொன்னாலும், தேவனுக்கும் பரிசுத்த ஆவிக்கும், வேதாகமத்தின் கொள்கைகளுக்கும் உண்மையாக வாழ்வேன் என்று தங்கள் இருதயத்தில் தீர்மானிக்கும் மக்கள் எழும்ப வேண்டிய நேரம் இது. 84 அவர்கள் எப்பேர்ப்பட்ட ஒரு பெரிய அமளியைச் செய்தார்கள் என்று பாருங்கள். முதலாவதாக, அது மோசமாகி, எல்லா நேரத்திலும் மோசமாகிக் கொண்டே போனது. இப்போது அது ஒரு உச்சக்கட்டத்திற்கு வருவதை நாம் பார்க்கிறோம். அந்த விஷயத்தின் தலைப்பகுதிக்குக் கீழே, அவர்கள் ஒழுக்கக்கேடாக நடக்கத் தொடங்கிய ஒரு இடத்திற்கு அது வந்தது, அவர்கள் மனைவிகளைத் திருமணம் செய்தார்கள், அவர்கள் கலப்புத் திருமணங்கள், மற்றும் எல்லாவற்றையும் செய்தார்கள். கடைசியாக ராஜா ஒரு இடத்திற்கு வந்தான், அவன் திருமணம் மற்றும் கலப்புத் திருமணங்கள் செய்த தன் மனைவிகள் அனைவரையும் அழைத்தான், அவன் தன் பிரபுக்கள், மற்றும் தன் மறுமனையாட்டிகள் அனைவரையும், ஒரு இரவு பெரிய கேளிக்கை செய்வதற்காக ஒன்றாக அழைத்தான். இன்று நாம் அழைப்பது போல, ஒரு பெரிய கிடங்கு நடனத்தை (barn dance) நடத்துவதற்காக அவர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்தான், உலகத்தில் வேறொன்றுமில்லை. சரி! ஒரு பெரிய கொண்டாட்டம்! மக்கள் அனைவரும்... அனேகமாக யூதர்களில் அநேகரும் அவர்களுடனே அங்கே இருந்திருக்கலாம். அவர்கள் அனைவரையும் உள்ளே அழைத்தார்கள். அவர்கள் நன்றாகக் குடித்த பிறகு, அவர்கள் உள்ளே சென்று மத சம்பந்தமான பொருட்களை எடுத்து வந்து, அதைச் சற்றுக் கேலி செய்ய வேண்டும் என்று உணர்ந்தார்கள். 85 ஒரு மனிதன் விஸ்கி அல்லது மதுபானத்தால் போதையேறும்போது, அவன் மனதளவில் சரியாக இருக்க மாட்டான். எனவே, அவன் அதைச் செய்யக்கூடாது என்று அறியுமளவிற்கு மனதளவில் சரியாக இருந்தால், அவன் எப்படியும் போய் அதைச் செய்கிறான் என்றால், அவன் குடித்திருந்தாலும் தேவன் அவனை அதற்குப் பொறுப்பாளியாக்குவார். ஏனென்றால், அன்று இரவு அவர் அதை நிரூபித்தார். அது சரி. முதலாவதாக, அதைச் செய்யக்கூடாது என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். விபச்சாரம் செய்யக்கூடாது என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் அந்தச் செயலில் பிடிபட்டால், நீங்கள் குற்றவாளி தான். தேவன் உங்களைப் பிடிப்பார், அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அது சரி. நீங்கள் பொய் சொன்னாலோ, திருடினாலோ, அல்லது வேறு எதைச் செய்தாலோ, தேவன் உங்களைப் பிடிப்பார். நினைவில் கொள்ளுங்கள், உங்கள் பாவங்கள் உங்களைக் கண்டுபிடிக்கும். அது நிச்சயமாக நடக்கும். எனவே, நீங்கள் கர்த்தரைச் சேவிக்கப் போகிறீர்கள் என்று இன்று இரவு உங்கள் இருதயத்தில் தீர்மானியுங்கள். தேவன் என்ன செய்யப் போகிறார் என்பதற்கான எல்லா உதாரணங்களும் அவர்களிடம் இருந்தன. ராஜா மூலமாக அது அவர்களுக்கு முன்னறிவிக்கப்பட்டிருந்தது. 86 உண்மையில், பெல்ஷாத்சார் அவனுடைய மகன் என்று அழைக்கப் படுகிறான், ஆனால் அவன் அவனுடைய பேரன். அது அவனுடைய மகளுடைய... அவனுக்கு ஒரு... நேபுகாத்நேச்சாருக்கு ஒரு மகள் இருந்தாள், அவள் ஒரு தளபதியைத் திருமணம் செய்தாள், இந்தத் தளபதியின் மகன் தான் பெல்ஷாத்சார். ஆக, அவன் அவனுடைய பேரன். 87 அந்த நிலையை அடைந்ததற்காகத் தேவன் தன் தாத்தாவுக்கு என்ன செய்தார் என்பது அவனுக்குத் தெரியும். அந்த விஷயங்கள் அனைத்தும் அவனிடம் இருந்தன, அவன் என்ன செய்தான் என்பதும் தெரியும், இருந்தும் தேவன் சொன்ன எல்லாவற்றையும் அவன் புறக்கணித்தான். அவன் அதைப் புறக்கணித்துவிட்டு, தன் சொந்த வழியில் சென்றான். 88 சகோதரரே, சகோதரியே, இது இன்றைய நாட்டின் சித்திரம் இல்லையென்றால், வேறு எது என்று எனக்குத் தெரியவில்லை. இந்தக் காரியங்களைச் செய்வது தவறு என்று வேதாகமம் சொல்லும்போது, சபை தொடர்ந்து சென்று அதைச் செய்கிறது. நாம் விஸ்கி குடிப் பதைச் சட்டப்பூர்வமாக்குகிறோம். பீர் குடிப் பதைச் சட்டப்பூர்வமாக்குகிறோம். அவர்கள் பெண்களை அனுமதிக்கிறார்கள்... 89 இங்கே அன்றொருநாள், நானும் என் நண்பரும் அணில் வேட்டையாடப் போய்க் கொண்டிருந்தோம். நாங்கள் வெளியே சென்றோம்... நான் என் வாழ்நாள் முழுவதும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியிருக்கிறேன், நாங்கள் எஃகு மற்றும் எல்லாவற்றையும் கொண்டு ஒரு பெரிய தடுப்பை அமைத்து, எங்கள் குறிகள் சரியாக இருக்கிறதா என்று பார்க்க ஒரு இரண்டு தோட்டாக்களை அங்கே சுட்டோம், அவர்கள் போலீஸை அழைத்தார்கள். அவர்கள் மேலே வந்து, "அந்தப் பகுதியில் வாழ்வது ஆபத்தானது" என்று சொன்னார்கள். 90 நான் சொன்னேன், "அப்படியானால் நான் போலீஸை அழைத்து, 'தெருவில் வண்டி ஓட்டிச் செல்லும் மக்கள் பார்க்கும்படி, அந்த முற்றத்தில் நிர்வாணப் பெண்கள் படுத்திருப்பது ஆபத்தானது' என்று அவர்களிடம் சொல்ல வேண்டும்." அதைவிடக் கூடாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இயற்கையே அதைவிடக் கூடாது என்று உங்களுக்குச் சொல்லும். ஆனால் அது ஒரு நாளாக மாறிவிட்டது, அவர்கள் தேவனுடைய ஒவ்வொரு பிரமாணத்தையும் புறக்கணிக் கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த மனித கற்பனைகளை உருவாக்கி, அந்த வழியில் சேவிக்கிறார்கள். 91 சகோதரனே, உலகத்தில் நம்மிடம் வேறொன்றுமில்லை, ஆனால் மற்றொரு பாபிலோன் இருக்கிறது, மிகச்சரியாக. நம்மிடம் பாபிலோனின் நவீன வடிவம் இருக்கிறது, ஒரு பெரிய குடிவெறி விருந்து, ஒழுக்கக்கேடு. சபை... பாவிகள் மட்டுமல்ல, சபை அங்கத்தி னர்களும் ஞாயிறு மதியங்களில் அதைச் செய்கிறார்கள், களியாட்டம், குடிப்பது. சிறிய பெண்கள், தெருவில் வெளியே, மேலே ஒரு கோட் அணிந்துகொண்டு, இது போல. மிகவும் குளிராக, கிட்டத்தட்ட உறைந்து போகும் நிலையில், கீழே ஆடைகள் இல்லாமல். வேதாகமத்தில் ஒரே ஒரு இடத்தில்தான், ஒரு நபர் தங்கள் ஆடைகளைக் கழற்றச் செய்யப் பட்டார், அவர்கள் பிசாசு பிடித்திருந்தார்கள். அது சரி. அது சத்தியம். அதில் பாராட்டு வதற்கோ, சமரசம் செய்வதற்கோ ஒன்றுமில்லை. அது சத்தியம். அந்த மக்களுக்குள் புகுந்து, அவர்கள் ஆடைகளைக் களையும்படி செய்வது பிசாசு தான். அது பிசாசு. நீங்கள் தவறாக இருக்க விரும்புவதில்லை, ஆனால், பெண்ணே, அதைச் செய்வது பிசாசு தான். 92 பரிசுத்தமுள்ள பெண்கள் தங்கள் முகத்தில் சாயம் பூசுவது ஒரு காலத்தில் தவறாக இருந்தது. இப்போது, அவர்கள் எப்படியும் அதை அப்பி கொள்கிறார்கள், அதில் ஒன்றுமில்லை என்பது போலப் பாடி, ஆர்ப்பரித்து, கர்த்தரைத் துதிக்கிறார்கள். 93 ஓ, சகோதரனே, அதைச் செய்வது பிசாசு தான் என்பதை நீங்கள் உணருகிறீர்களா? அது பழைய பாணியாக இருந்தால், பழைய பாணியிலேயே வாழ்ந்து, வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தராகிய தேவனைச் சேவிப்பேன் என்று உங்கள் இருதயத்தில் தீர்மானியுங்கள். உங்கள் இருதயத்தில் தீர்மானியுங்கள். அவர்கள் எப்படி விலகிப் போனார்கள் என்பதைக் கவனியுங்கள். ஆண்கள் குடிப்பது ஒரு காலத்தில் தவறாக இருந்தது. ஆனால், இப்போது அது பிரபலமாகிவிட்டது, நீங்கள் எங்கே சென்றாலும், அவர்களுடைய அறைகளில் இருக்கிறது. 94 வெகு நாட்களுக்கு முன்பு அல்ல, நான் ஒரு ஞாயிறு பள்ளி மாநாட்டில் (Sunday school convention) இருந்தேன், நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில், என் வாழ்க்கையில் நான் கண்டிராத மிக மோசமான குடிகாரக் கூட்டத்திற்குள் மாட்டிக்கொண்டேன். ஒரு ஞாயிறு பள்ளி மாநாட்டில், அவர்கள் லிஃப்ட்களில் ஏறி இறங்கிக் கொண்டி ருந்தார்கள். சிறு பையன்களும் சிறுமிகளும் ஒரே அறைக்குள் ஒன்றாகச் சென்று, இரவு முழுவதும் தங்கியிருந்தார்கள், அவர்களுடைய பேராயர் அங்கே அமர்ந்து, அதை அனுமதித்தார். 95 சகோதரனே, அவர்கள் வேண்டுமென்றே அறியாமையில் இருக்கிறார்கள். "இப்படிப்பட்ட குழப்பங்களிலிருந்தும் அபத்தங்களிலிருந்தும் உங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள்" என்று தேவனுடைய வார்த்தை சொன்னது. உலகின் மற்ற நாடுகள் அனைத்தையும் விட நமது அமெரிக்க தேசத்தில் விவாகரத்து நீதிமன் றங்களில் விகிதம் அதிகமாக இருக்கிறது. 96 என்ன விஷயம்? நியாயத்தீர்ப்புக்கு நாம் பழுத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் வேதாகமத்தையும், பரிசுத்த ஆவியின் வல்லமை யையும், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும், விசுவாசியைத் தொடரும் அடையாளங்கள் மற்றும் அற்புதங்களையும் பிரசங்கிக்கலாம், வரங்கள் சபைக்குத் திரும்பி வருவதைப் பற்றிப் பேசலாம், சகலமும் திரும்பக் கொடுக்கப் படுவதைப் பற்றிப் பேசலாம், ஆனால் பிரசங்கிகள் உங்களைப் பார்த்துச் சிரித்து, "உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது" என்று சொல்வார்கள். 97 சகோதரனே, அமெரிக்கா என்ன சொன்னாலும் பரவாயில்லை, நான் சபையிலிருந்து நீக்கப்பட்டாலும் பரவாயில்லை, நான் முழு வேதாகமத்தையும் பிரசங்கிப்பேன் அல்லது எதையுமே பிரசங்கிக்க மாட்டேன், ஜீவனுள்ள தேவனுடைய கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பேன் என்று என் இருதயத்தில் தீர்மானித்திருக்கிறேன். நிச்சயமாக. சரியானதைச் செய்ய உங்கள் இருதயத்தில் தீர்மானியுங்கள். பரிசுத்தமானதைச் சிந்தியுங்கள். 98 அன்றொருநாள் நான் செல்லர்ஸ்பர்க் வழியாகக் கீழே வரும்போது, என் காரின் முன் ஒரு சிறிய சிலுவை தொங்கிக் கொண்டிருந்தது. காரில் ஏறிய ஒரு மனிதர் இருந்தார், அவர் சொன்னார், "பில்லி, நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்." அவர் கேட்டார், "அது கத்தோலிக்கம் என்பது உனக்குத் தெரியுமா?" நான் கேட்டேன், "என்ன?" "சிலுவை" என்று சொன்னார். 99 நான் சொன்னேன், "ஓ, இல்லை. கத்தோலிக்கர்களுக்கு எப்போது சிலுவையின் மேல் தனி உரிமை இருந்தது?" சரி. நான் சொன்னேன், "அது கிறிஸ்தவ விசுவாசத்தின் சின்னம்." நான் சொன்னேன், "கத்தோலிக்கம் என்பது மரித்தவர்களான மேரி மற்றும் செயிண்ட் சிசிலியா, மற்றும் அவர்களிடம் உள்ள மற்ற பத்தாயிரம் சிறிய புனிதர்களை வணங்குவதாகும். அது கத்தோலிக்கம். ஆனால் புராட்டஸ்டன்ட்டியம் என்பது சிலுவையும், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, இன்று இரவு சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற கிறிஸ்துவும், அவரே 'தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியிலிருக்கிற ஒரே மத்தியஸ்தர்' என்பதாகும்." ஆமென். 100 நான் சொன்னேன், "நான் ஏன் அதை அங்கே தொங்கவிடுகிறேன் என்று சொல்கிறேன்." நான் சொன்னேன், "ஏனென்றால்... நான் சில நாட்களில் இங்கிருந்து குடிபெயரக்கூடும். மியாமியின் மேயர், தெருவில் வரும் ஒவ்வொரு பெண்ணும் கழுத்து முதல் முழங்கால் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பை வெளியிடுவதாக என்னிடம் சொன்னார்கள்." நான் சொன்னேன், "நான் அதை எவ்வளவு வெறுத்தாலும் மியாமிக்குச் செல்வேன். ஆம்." நான் சொன்னேன், "காரணம், நீங்கள் எந்தப் பக்கம் பார்த்தாலும், கிழக்கோ மேற்கோ, வலது அல்லது இடது, எப்போதும் ஏதோ ஒரு வகையான ஆபாசம் இருக்கிறது. அது எப்போதும் உங்கள் முன் இருக்கிறது. நான் அந்தச் சிலுவையைப் பார்க்கும்போது, அதைவிடச் சிறந்த ஒன்றை என்னால் பார்க்க முடிகிறது. என் ஆத்துமாவை இரட்சித்த பரலோகத்திலுள்ள சர்வவல்லமையுள்ள தேவன் கொடுத்த மீட்பின் விலையை நான் நினைக்கிறேன். அந்தச் சிலுவையில், பாடுகளுக்கும் அவமானத்திற்கும் சின்னமான அந்தச் சிலுவையில், உலகத்தின் காரியங் களிலிருந்து என்னை இரட்சிக்கவும் பரிசுத்தப் படுத்தவும் இயேசு இரத்தம் சிந்தி மரித்தார் என்று நான் நினைக்கும்போது. அவர் எப்போதும் என் முகத்திற்கு முன்பாக இருக்கிறார்." அது சரி, இப்போது, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாளில், மற்றும் காரியங்கள்... 101 கவனியுங்கள், அந்தக் குழப்பங்கள் அனைத்திலும், அவர்கள் சென்று கர்த்தருடைய பரிசுத்த பாத்திரங்களை எடுத்து வந்து, அதில் திராட்சரசம் குடித்து, பரியாசம் பண்ணி, தேவனுடைய பரிசுத்தமான காரியங்களைக் கேலி செய்தார்கள். 102 அவர்கள் இன்றும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஐம்பது வருடங்களாக அவர்கள் அதைத்தான் செய்து கொண்டி ருக்கிறார்கள். அசுஸா ஸ்ட்ரீட் முதற்கொண்டு அவர்கள் அதைத்தான் செய்து கொண்டி ருக்கிறார்கள். இங்கே அவர்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதைக் கேலி செய்கிறார்கள். அதில் ஒன்றுமில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். "சுகமளிக்கும் தெய்வீக வரம், அந்நிய பாஷைகளில் பேசும் தெய்வீக வரம், வியாக்கியானம் செய்யும் தெய்வீக வரம், முன்னறிவிக்கும் தெய்வீக வரம், தீர்க்கதரிசனம், இவை அனைத்தும் குறிசொல்லுதல். அதில் ஒன்றுமில்லை. அதெல்லாம் பிசாசு" என்று அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் அந்த வார்த்தையைப் பேசும்போது, தங்களை தேவனிட இருந்து என்றென்றைக்கும் துண்டித்துக் கொள்கிறார்கள் என்பதை உணராமல் இருக்கிறார்கள். 103 இயேசு சொன்னார், "எவனாகிலும் எனக்கு விரோதமாக ஒரு வார்த்தை பேசினால், மன்னிக்கப்படும், ஆனால் பரிசுத்த ஆவி வந்து, அதே கிரியையைச் செய்யும்போது, அதற்கு விரோதமாக ஒரு வார்த்தை பேசுவது, இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப் படுவதில்லை." 104 அவள் தராசிலே நிறுக்கப்பட்டு குறையுள்ளவளாய்க் காணப்படுகிறாள், இன்று இரவு சுவர்மேல் கையெழுத்து எழுதப் பட்டிருக்கிறது. சரி. சகோதரனே, நாம் மூழ்கப் போவது நிச்சயம். நான் சபையைச் சொல்லவில்லை. தேசம் ஒரு தேசமாக மூழ்கப்போவது உறுதி என்று சொல்கிறேன். அது மூழ்கித்தான் ஆக வேண்டும், ஏனென்றால் முழு விஷயமும் தேவனுடைய முகத்தில் நாற்றமடித்துவிட்டது. பெயரளவிலான மதவா திகள் கம்யூனிஸ்டுகளை விட மோசமாகி விட்டார்கள், ஏனென்றால் அவர்களுக்குச் சிறப்பாகச் செய்யத் தெரிந்திருந்தும் அதைச் செய்ய மாட்டார்கள். 105 இன்றைக்கு நினைத்துப் பாருங்கள், சற்றே சிந்தியுங்கள்! அங்கே ஜெபக்கூட்டத்தில் முழங்காலிலிருந்து ஜெபிக்கும் அந்த நல்ல பழைய தாய்மார்களும் தகப்பன்மார்களும் தான் இந்தத் தேசத்தின் முதுகெலும்பு. தேவனைச் சேவிக்கும் மக்கள் தான் எந்தத் தேசத்திற்கும் முதுகெலும்பு. இருந்தும், அவர்கள் கேலி செய்யப்படுகிறார்கள், பரியாசம் பண்ணப் படுகிறார்கள், அவர்களை அழைக்க வானத்தின் கீழ் இருக்கும் ஏறக்குறைய எல்லாப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் கேலி செய்கிறார்கள். 106 நினைவில் கொள்ளுங்கள், சிறிது நேரத்திற்குப் பிறகு, சுவர்மேல் கையெழுத்து வந்தது, "மேனே, மேனே, தேக்கேல், உப்பார்சின்," இதற்கு அர்த்தம், "நீ தராசிலே நிறுக்கப் பட்டு, குறையுள்ளவனாய்க் காணப் பட்டாய்." 107 சகோதரனே, அங்கே எருசலேமில் கொடி ஏற்றப்படுவதை நான் பார்க்கும்போது, யூதர்கள் திரும்பி வருவதைப் பார்க்கும்போது, மத்திய கிழக்கு பிரச்சனையைப் பார்க்கும்போது. சிறிய நாடான இந்தியா, இத்தனை வருடங்களாக அங்கே கிடந்தது, இப்போது அவள் ஒரு முக்கியக் குறிப்பு; கல்வியறிவற்ற மக்கள், ஆனால் ஒரு முக்கியக் குறிப்பு. அவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க நாம் தவறிவிட்டோம். மற்ற எல்லாவற்றையும் செய்தோம். நாம் பெரிய சபைகளைக் கூடக் கட்டினோம், ஒரு சபையை அமைப்பதற்குக் கோடிக்கணக்கான டாலர்களைச் செலவிட்டோம். மிஷனரிகளால் போக முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் போவதற்குத் தேவையான நிதி அவர்களிடம் இல்லை. நாம் அங்கே சென்றோம், அங்கே சென்ற மிஷனரிகள் கர்த்தரைப் பற்றி அவர்களுக்குச் சொல்ல முயன்றபோது, அவர்களைத் தொடர்ந்து மற்றவர்கள் பெரிய ஆடம்பரங்களுடனும் பகட்டுடனும் வந்து, அவர்களைக் கேலி செய்து ஒதுக்கி வைத்தார்கள். நான் நின்று என் சொந்தக் கண்களால் அதைப் பார்த்தேன். சகோதரனே, நாம் தராசிலே நிறுக்கப்பட்டு, குறையுள்ள வர்களாய்க் காணப்பட்டோம். 108 மிஷனரிக்கு, பலிபீடத்தில் பென்னி மார்ச் (penny march - சிறிய காணிக்கை) கிடைத்தது, பீர் கம்பெனிக்கு அவனுடையது கிடைத்தது, தேவனுக்குச் சென்றிருக்க வேண்டிய தசமபாகப் பணம். அது மிகச்சரியான உண்மை. அது மிகச்சரியான உண்மை. நாம் முற்றிலும் தவறான விஷயத்திற்கு நன்கொடை அளித்திருக்கிறோம். அந்தப் பெயரளவிலான அமைப்புகளிலும், சிறிய தர்ம காரியங்களிலும், அது போன்றவைகளிலும் நாம் எல்லா வற்றையும் போட்டோம், அதே வேளையில் மனிதர்கள் பெரிய பச்சை நிற காடிலாக் (Cadillacs) கார்களில் வலம் வந்தார்கள், மோதிரங்கள் அணிந்து, வாயில் ஐம்பது சென்ட் சுருட்டுடன், தங்கள் நண்பர்களுக்கு விநியோகிக்க வாரத்திற்கு ஐந்நூறு டாலர்களைப் பெற்றார்கள். அது சரி. அதுதான் அதன் முதுகெலும்பு. மேலும் நமது... 109 உலகிலேயே மிகவும் தாழ்ந்த, அழுக்கடைந்த, அருவருப்பான மக்கள் இருந்த பாரிஸிலிருந்து பிசாசு உள்ளே வந்திருக்கிறான். அவர்கள் இங்கே வந்தார்கள், நாம் நம் மக்களை அவர்களைப் போல வடிவமைத்தோம். பெண்கள் அனைவரும் தங்கள் நவீனத்துவக் கருத்தைப் பெற்றார்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதா? நான் அதை வாசித்துக் கொண்டிருந்தேன், மறுநாள், ஹாலிவுட்டிலிருந்து வந்த சில அறிக்கைகளில். வானொலியில் ஒலிபரப்பப்பட்ட, அந்தப் பந்தை உருளச் செய்த தணிக்கை செய்யப்படாத முதல் பாடல் எது என்று உங்களுக்குத் தெரியுமா? முதலில் தொடங்கியது, "உன்... கீழே உருட்டு, உன் காலுறைகளை, உன் முழங்கால்களைக் காட்டு, பெண்களே" என்ற அந்தச் சிறிய பழைய பாடல். இப்போது அவர்களைப் பாருங்கள், கீழே உருட்டுவதற்கு அவர்களுக்குக் காலுறைகளே இல்லை. 110 அதைப் பாருங்கள். அந்த அழுக்கைப் பாருங்கள். அந்த ஆபாசத்தைப் பாருங்கள். அரை நிர்வாண நடனங்களைப் (stripteases) பாருங்கள். வானொலியில், அல்லது, வானொலியில் அல்ல, தொலைக்காட்சியில் உள்ள மற்ற எல்லாவற்றையும் பாருங்கள். நீங்கள் அதைத் திரைப்படங்களில் வைக்கிறீர்கள். உங்கள் குழந்தைகளைத் திரைப்படங்களிலிருந்து விலக்கி வைக்க முயற்சிக்கிறீர்கள்; நீங்கள் பரிசுத்தவான்கள், நீங்கள் நல்ல மக்கள், சத்தியத்தைப் பிரசங்கிக்க முயன்ற மக்கள், அதற்காக நிற்க முயன்ற மக்கள். பிசாசு ஒரு படி மேலே செல்ல முயற்சிக்கிறான். அவன் என்ன செய்தான் தெரியுமா? தொலைக்காட்சி என்ற பெயரில் அதை உங்கள் வீட்டிற்குள்ளேயே கொண்டு வந்துவிட்டான். ஆம், ஐயா. 111 இப்போது நாம் மிகவும் தாழ்ந்துபோய், ஊழலடைந்து, பாரிஸை விடவும் தாண்டிச் சென்று வெற்றி பெற்றிருக்கிறோம், இப்போது அவர்கள் நம்மைப் பார்த்து வடிவ மைக்கிறார்கள். ஓ, என் தேவனே. நான் அங்கே பாரிஸின் தெருக்களில் நடந்தபோது, அந்தப் பழைய சிறுநீர் கழிப்பிடங்கள் தெருவில் எப்படி நாற்றமடித்தன என்று நினைக்கும்போது, விவாகரத்து, கற்பழிப்பு மற்றும் குற்றம் போன்றவற்றால் சர்வவல்லமையுள்ள தேவனு டைய பார்வையில் அமெரிக்கா தேசம் முழுவதுமே ஒரு நவீன சிறுநீர் கழிப்பிடமாக மாறிவிட்டது என்று நினைக்கிறேன். உங்களால் முடிந்தால், அதை நிறுத்துங்களேன்? உங்களால் அதை நிறுத்த முடியாது. அது அப்படித்தான் இருக்கும் என்று தேவன் சொன்னார், அது நியாயத்தீர்ப்புக்குப் பழுத்திருக்கிறது. 112 உலகத்தின் காரியங்களால் உங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்ள மாட்டீர்கள் என்று உங்கள் இருதயத்தில் தீர்மானியுங்கள். பெண்களே, உங்கள் தலைமுடியை வளர விடுங்கள்; உங்கள் முகத்திலிருந்து சாயத்தை அகற்றுங்கள்; அந்த ஆபாசமான ஆடைகளை அணியாதீர்கள். ஆண்களே, அந்தச் சுருட்டுகள், சிகரெட்டுகள், பீர் கடைகள் மற்றும் பூல் அறைகளிலிருந்து (pool rooms) விலகி இருங்கள். ஜீவனுள்ள தேவனிடம் வாருங்கள், "நெருங்கி நிற்கிற பாரமான யாவற்றையும் தள்ளிவிட்டு, உங்களுக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடுவீர்கள்" என்று தேவனுடைய கிருபையினால் உங்கள் இருதயத்தில் தீர்மானியுங்கள். 113 எப்பேர்ப்பட்ட நாள்! நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் எப்பேர்ப்பட்ட நேரம், ஒரு நவீன பாபிலோன். அங்கே தனது நியாயத்தீர்ப்பை ஊற்றின நீதிபரரான அதே தேவன், இங்கேயும் அதை ஊற்றுவதற்கு அதே நீதிபரராக இருக்க வேண்டும். களியாட்டம், குடிப்பழக்கம், பெண்கள் மற்றும் கேளிக்கைகளின் கீழ் புறஜாதியினரின் காலம் துவங்கியது போல, புறஜாதியினரின் காலம் அதே விதத்தில் வெளியேறிக் கொண்டிருக்கிறது. நாம் குடித்து, போதையேறி, குழப்பத்தின் வழியாக வெளியேறிக் கொண்டிருக்கிறோம். 114 இங்கே பள்ளியில் படிக்கும் நமது சிறிய பதின்ம வயது பிள்ளைகள், சிகரெட் பிடிப்பதில் ஆரம்பிக்கிறார்கள், அங்கிருந்து மரிஜுவானாவுக்குச் செல்கிறார்கள். பல பள்ளிகள் தேர்விற்குச் சற்று முன்பு, வகுப்பில் பிள்ளைகள் புகைபிடிக்க அனுமதிக்கின்றன. 115 சில வருடங்களுக்கு முன்பு, "கீழே உருட்டி பெண்களின் முழங்கால்களைக் காட்டு" என்பது மிகவும்... அடக்கத்தை அதிர்ச்சிக் குள்ளாக்கும் விஷயமாக இருந்தது. இன்று, பெண்கள், கிறிஸ்தவ பெண்கள் என்று சொல்லப்படுபவர்கள், தெருக்களில் வெட்கக் கேடான முறையில் நடந்து செல்கிறார்கள், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அது ஒரு பிரதான தூதனைக் கூட வெட்கப்பட வைக்கும். சரி. நாம் எப்பேர்ப்பட்ட குழப்பத்தில் இருக்கிறோம்! உலகம் எப்பேர்ப்பட்ட நிலையில் இருக்கிறது! 116 இப்போது, நண்பர்களே, இந்த வார்த்தைகள் வீணாகக் கடந்து செல்ல விடாதீர்கள். அவை உண்மையானவை, அவை உறுதியானவை. அவை வேதாகமம். நான் தேவனுக்கு முன்பாக என் இருதயத்தைத் திறந்து வைத்திருக்க முயற்சிக்கிறேன் என்று எனக்குத் தெரிந்தால், அவை என் இருதயத்திலிருந்து வருகின்றன. சகோதரரே, சகோதரியே, அது கொடுக்கப்பட வேண்டிய விதத்தில், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். 117 இப்போது இதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உன்னிப்பாகக் கவனியுங்கள். நீங்கள் கவனித்தீர்களா? எல்லாவற்றிற்கும் உச்சக் கட்டத்திற்குச் சற்று முன்பு, சுவர்மேல் கையெழுத்து வந்தபோது, "இதெல்லாம் என்ன?" என்று அவர்கள் கேட்டார்கள். அவர்கள் சென்று தங்கள் ஞானிகளை அழைத்து வந்தார்கள். அவர்கள் கல்தேயர்களை அழைத்து வந்தார்கள். அவர்கள் குறிசொல்லுகிறவர்களை அழைத்து வந்தார்கள். யாராலும் அந்த மொழியை வியாக்கியானம் செய்ய முடியவில்லை. அது என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. அவர்களுடைய ராஜ்யத்தில், அந்நிய பாஷைகளை வியாக்கியானம் செய்யக்கூடிய ஒரே ஒரு மனிதன் தான் எஞ்சியிருந்தான். தேவன் அந்நிய பாஷைகளில் பேசினார், அந்நிய பாஷைகளில் தம் விரலால் எழுதினார். அங்கே வியாக்கியானம் செய்யும் வரத்தைப் பெற்ற ஒரு மனிதன் இருந்தான், அவன்தான் ராஜாவின் போஜனத்தினால் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ள மாட்டேன் என்று தீர்மானித்தவன். ஆமென். அவனிடம் உண்மையான வியாக்கி யானம் இருந்தது. அங்கே ஒரு போலிக் கூட்டம் இருக்கிறது; அது உண்மை தான். ஆனால் ஒரு மனிதனிடம் அந்தப் பொருள் இருந்தது, அவனால் அதை வாசிக்க முடிந்தது. அது என்னவென்று அவன் வியாக்கியானம் செய்தான். 118 கவனியுங்கள், புறஜாதியினரின் காலம் தேவனுடைய அமானுஷ்ய வரங்கள் செயல் படுவதோடு முடிவடைந்தது. அது அமானுஷ்ய வரங்களுடன் துவங்கியது. அது அமானுஷ்ய வரங்களுடன் முடிவடைகிறது. அமானுஷ்ய வரங்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட சபைக்குத் திரும்பியிருக்கின்றன, அது இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்கள் சுவர்மேல் உள்ள கையெழுத்தை வாசிக் கிறார்கள், "நாம் குழப்பத்தில் இருக்கிறோம்." ஆமென். கர்த்தராகிய இயேசுவைத் தவிர வேறு யாரையும் சேவிக்க மாட்டேன் என்று உங்கள் இருதயத்தில் தீர்மானியுங்கள். அவருக்காக வாழ்வீர்கள் என்று இன்று இரவு தீர்மானியுங்கள். நண்பர்களே, நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். நாம் முடிவு நாளில் இருக்கிறோம். என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள். 119 அந்த முதல் சிறிய ஆபாசமான பாடல் எனக்கு நினைவிருக்கிறது. இப்போது, வானொலியைத் திறந்தால், நீங்கள் கேட்கக்கூடியதெல்லாம், உங்களுக்கு ஏதாவது நல்ல மத நிகழ்ச்சிகள் கிடைக்காவிட்டால், இந்தப் பழைய பூகி-வூகிகள் (boogie-woogies) அல்லது ராக்-அன்ட்-ரோல் (rock-and-rolls) தான். அது சரி. என்ன நடக்கிறது என்று நினைத்துப் பாருங்கள்! 120 நவீன அமெரிக்க வீட்டலைப் பாருங்கள். அப்பா, அவர் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் மதுபானக் கடையில், அண்டை வீட்டுக்காரருடன் சேர்ந்து சமூக ரீதியாகக் குடித்துக் கொண்டிருக்கிறார். அம்மா எங்கே இருக்கிறாள்? அவள் தையல் கூடத்தில், சீட்டாடுகிறாள். ஜூனியர் எங்கே இருக்கிறான்? அவனது வேகமான காரில் (hot rod), தெருக்களில் பந்தயத்தில் ஈடுபடுகிறான், எல்லோரையும் இழுத்துச் செல்கிறான்; ஒரு கையில் பெண்ணை அணைத்துக் கொண்டும், மறு கையில் சிகரெட்டுடனும். தங்கை எங்கே இருக்கிறாள்? அவள் கேண்டீனில், ராக்-அன்ட்-ரோல் நடனமாடுகிறாள், இரவு முழுவதும் ஒரு கூட்டச் சிப்பாய்களுடன், தன்னால் முடிந்த அனைவருடனும் சுற்றிக்கொண்டிருக்கிறாள். அதுதான் ஒரு நவீன அமெரிக்க வீடு. 121 சகோதரனே, சுவர்மேல் கையெழுத்து இருக்கிறது. சரி! "நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையுள்ளவனாய்க் காணப்பட்டாய்." பில்லி கிரஹாம், ஜாக் ஸ்கூலர், ஓரல் ராபர்ட்ஸ் போன்ற பெரிய மனிதர்கள் இந்தத் தேசத்தைக் கடந்து வந்து, கர்த்தராகிய இயேசுவின் கலப்படமற்ற சுவிசேஷத்தைப் பிரசங்கித்தி ருக்கிறார்கள். மக்கள் அதைப் பார்த்துச் சிரித்துக் கேலி செய்து, அதைத் திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறார்கள். 122 தெய்வீக நியாயத்தீர்ப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறது, அது வந்து கொண்டிருக்கிறது. ரஷ்யா உங்களுக்காக அங்கே காத்துக் கொண்டிருக்கிறது. சகோதரனே, ஒரு மணி நேரத்தில் நூற்று ஐம்பது மில்லியன் மக்கள் இறக்கக்கூடும், அது காலையில் விடிவதற்கு முன்பே நடக்கக்கூடும் என்பதை உணருங்கள். இந்தத் தேசம் முழுவதுமே அழிக்கப்படலாம். அணுகுண்டுகள் ஏற்றப்பட்ட பத்தாயிரம் விமானங்கள் என்றால், என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஒவ்வொன்றும் ஓர் அணுகுண்டையோ, அல்லது ஒரு ஹைட்ரஜன் குண்டையோ இந்தத் தேசத்தின் மீது வீசினால், உலகம் முழுவதும் அதன் சுற்றுப் பாதையிலிருந்து முழுமையாக அதிர்ந்து போகும். அது என்ன செய்யும்? தேவன் சம்பவிக்கும் என்று சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற்றும். அது என்ன செய்யும்? 123 ஜலப்பிரளயத்திற்கு முந்தைய உலகத்தின் காலத்தில், அவர்கள் அந்த ஸ்பிங்க்ஸ் (sphinxes) சிலைகளையும், பெரிய பிரமிடுகளையும் கட்டியபோது, எகிப்தில் இப்போது பிரச்சனைகள் துவங்கும் அதே நாட்டில், நம்மால் இன்று அதை மீண்டும் உருவாக்க முடிந்திருக்காது. நமக்கு அதை எடுத்துக்கொள்ள நேரம் இருந்திருந்தால், அது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு வேதாகமத் தீர்க்கதரிசனம்; ஆனால் நமக்கு நேரமில்லை. ஆனால் கவனியுங்கள். எசேக்கியேல் 9 அல்லது 19-ம் அதிகாரத்தில் தேவன் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார். அது எங்கே என்று இப்போது மறந்துவிட்டேன். "கர்த்தருடைய வருகைக்குச் சற்று முன்னதாக, எகிப்திலிருந்து ஒரு நெடுஞ்சாலை வந்து, சீரியாவுக்குச் செல்லும்." இருபத்தைநூறு ஆண்டுகாலத் தீர்க்கதரிசனத்திற்குப் பிறகு, அவர்கள் இப்போதுதான் அந்த நெடுஞ்சாலையை முடித்திருக்கிறார்கள். அந்த நாளில், எருசலேம், "அங்கே ஒரு கொடி ஏற்றப்படும், தாவீதின் பழைய ஆறு முனை நட்சத்திரம் பறக்கும்." மேலும் எப்படி... "ரோஜாவைப் போலப் பூக்கும்." யூதர்கள் "எல்லா இடங்களிலிருந்தும் திரும்பி வருவார்கள், தாய்நாட்டிற்குத் திரும்பி வருவார்கள்." 124 இதோ மறுநாள், சகோதரர் ஆர்கன்பிரைட் எனக்கு அந்தப் படத்தைக் காட்டினார், நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் (Three Minutes Before Midnight). அது கிறிஸ்தவர்கள் அல்ல. அறிவியல் அப்படிச் சொன்னது. பழைய கடிகாரம் போய்விட்டது, பெண்டுலம் முன்னும் பின்னுமாக, முன்னும் பின்னுமாக, பிரச்சனைகள் மற்றும் குழப்பங்கள், சுவிசேஷப் பிரசங்கங்கள் மற்றும் செய்திகள் மூலமாக அடித்து, கடைசியாக அது நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்களுக்கு முன் இருக்கிறது. 125 நான் அந்தப் படத்தைப் பார்த்தேன். யூதர்கள் ஈரானிலிருந்து கீழே வருவதையும், எகிப்திலிருந்து கீழே வருவதையும், உலகம் முழுவதிலுமிருந்து கீழே வருவதையும், அவர்களை உள்ளே கொண்டுவருவதையும் நான் பார்த்தேன். அவர்களை மூட்டை கட்டுவது போல ஏற்றிக் கொண்டிருந்தார்கள், பையன்கள் தங்கள் வயதான தாயைத் தங்கள் முதுகில் சுமந்து சென்றார்கள். அவர்களைப் பேட்டி காணச் சென்றார்கள். நாங்கள் கீழே இறங்கியபோது, நான் எகிப்தின் கெய்ரோவில் இறங்கினேன், அந்த மக்களுடன் பெரிய விமானங்கள் உள்ளே வருவதைப் பார்த்தேன். அருகில் சென்று, "நீங்கள் எதற்காகத் தாய்நாட்டிற்குத் திரும்பிச் செல்கிறீர்கள்? நீங்கள் தாய்நாட்டில் அடக்கம் பண்ணப்படுவதற்காக, அங்கே சாகப் போகிறீர்களா?" என்று கேட்டார்கள். 126 அந்தக் கண்ணீர் வடியும் கன்னங்களுடன் அந்த வயதான யூதர்கள் சொன்னார்கள், "இல்லை. நாங்கள் மேசியாவைச் சந்திக்கப் போகிறோம். அல்லேலூயா! நாங்கள் மேசியாவைப் பார்க்கப் போகிறோம். அவர் சீக்கிரத்தில் அங்கே இருப்பார்." 127 "அத்திமரம் துளிர்விடும்போது, காலம் சமீபமாயிருக்கிறது, வாசலருகே வந்திருக்கிறது என்று அறியுங்கள். இவையெல்லாம் சம்பவிக்குமுன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." 128 மாபெரும், கடைசி நாகரிகமான அமெரிக்காவைப் பார்க்கும்போது, சகோதரனே, அது எவ்வளவு பெரிய தேசமாக இருந்தாலும், நாம் வழிவிட வேண்டும். அழிகிற ஒவ்வொன்றும் அழியாமைக்கு வழிவிட வேண்டும். 129 சில காலத்திற்கு முன்பு, நான் இங்கே காட்டில் நின்று, ஒரு குழந்தையைப் போல அழுதேன். இங்கே என் அப்பாவின் கல்லறைக்குச் சென்றேன். அவர் முகம் கழுவுவதை, அவருடைய குட்டையான, தடிமனான கைகளை நான் பார்ப்பது வழக்கம். அவர் மரவேலை செய்பவர், அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வலிமையானவர். எவ்வளவு... என்று பார்ப்பேன். மிஸ்டர் கோட்ஸ் என்னிடம் சொல்வதைக் கேட்பேன், "பில்லி," "உன் அப்பாவை நான் பார்த்தேன், ஒற்றைக் கையில்... நீ ஒரு வலிமையான மனிதனாக இருக்க வேண்டும்" என்றார். நான் சொன்னேன், "ஆனால் நான் இல்லை." அவர் சொன்னார், "உன் அப்பா தொள்ளாயிரத்து ஐம்பது பவுண்டு எடையுள்ள ஒரு சாம்பல் மரக்கட்டையை ஒற்றைக் கையில் ஏற்றுவதை நான் பார்த்தேன்." நான் நினைத்தேன், "அப்படியா, என் அப்பா நூற்று ஐம்பது வயது வரை வாழ்வார்." அவர் ஐம்பத்திரண்டு வயதில் இறந்தார். 130 அது என்ன? நமக்கு இங்கே நிலையான நகரம் இல்லை. அழிகிற அனைத்தும் வழிவிடுகிறது; நீங்கள் எவ்வளவு வலிமையானவர் என்பது முக்கியமல்ல, நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. உங்கள் சுவாசம் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கரத்தில் இருக்கிறது. அடுத்த நொடியில் அவர் அதை எடுத்துக்கொள்ளலாம். அது சரி. 131 நான் இரட்சிக்கப்பட்ட புதிதில், இங்கே ஒரு பழைய மரத்தடியில் நின்றேன். கர்த்தரிடம் எப்படிப் பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் சரியாக இருக்க விரும்பினேன். நான் அவரிடம் பேசியதே இல்லை. எனவே, என் முதல் ஜெபத்தை நான் எப்படி ஜெபித்தேன் தெரியுமா? நான் அதை ஒரு காகிதத் துண்டில் எழுதப் போனேன். 132 ஒரு காட்டுவாசியாக இருந்ததால், நான் எப்போதும் காட்டில் தான் வசித்தேன், பெரும்பாலும். அங்கே காட்டில் நான் அவரைப் பார்ப்பேன் என்று கவனித்தேன். என்னால் அவரைக் கேட்க முடிந்தது. அவர் கடந்து வரும்போது, இரவு நேரத்தில், சுழற்காற்றில் அவருடைய காலடிச் சத்தத்தைக் கேட்க முடிந்தது. ஓ! "அவர் சுழற்காற்றின் மேல் சவாரி செய்கிறார்." அல்லேலூயா! அவருடைய வழி சுழற்காற்றில் இருக்கிறது. இலைகளுடன் அவர் கைதட்டுவது போல, அவரை என்னால் பார்க்க முடிந்தது. [சகோதரர் பிரான்ஹாம் கைதட்டுகிறார்] எல்லாவற்றையும். "ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?" என்று ஒரு சத்தம் சொல்வது போல. ஓ, ஒரு போர்வையின் அடியில் படுத்துக்கொண்டு; என் தலை வெளியே நீட்டிக்கொண்டிருக்க, நட்சத்தி ரங்களைப் பார்த்துக்கொண்டு. அவர் காட்டில் வசிக்கிறார் என்று எனக்குத் தெரியும். 133 நான் என் ஜெபத்தை எழுதினேன், "தேவனே, நான் ஒரு மோசமான மனிதனாக இருந்தேன். நீர் என்னை மன்னிக்க வேண்டும்." நான் அதை எடுத்து அந்த மரத்தில் அறைந்தேன். அவரிடம் எப்படிக் கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை. "அவர் அந்த வழியாக வந்தால், அவர் அதை வாசித்து, நான் செய்ததிற்கு வருந்துகிறேன் என்பதை அறிந்து கொள்வார்" என்று நினைத்தேன். எப்படி ஜெபிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் பரலோகத்தின் தேவன் அதைப் புரிந்துகொண்டார், அவர் என் இழந்துபோன ஆத்துமாவை இரட்சித்தார். ஆம். ஆம், ஐயா. 134 அன்றொருநாள், அங்கே காட்டிலிருந்த அந்தப் பழைய மரங்களின் அடியில் நின்று, நான் அழத் தொடங்கினேன். சகோதரர் வுட்டும் நானும் காட்டில் இருந்தோம், நான் அதைக் கவனித்தேன். அந்தப் பெரிய மரம் அதன் பெரிய கிளைகளை அப்படி விரித்திருந்தது. நான் நினைத்தேன், "எப்பேர்ப்பட்ட அற்புதமான மரம்!" நான் அதிலிருந்து துண்டுகளை உடைப்பேன், (என்னால் ஒரு கூடாரத்தை வாங்க முடியவில்லை), மழை பெய்யும்போது, இரவில் ஒதுங்குவதற்கு ஒரு சிறிய தங்குமிடத்தை அமைப்பேன்; நான் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, இரவு முழுவதும் வெளியே தங்கியிருப்பேன், நான் ஒரு சிறுவனாக இருந்தபோது. "இந்த மரம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இங்கே நிற்கும்" என்று நினைத்தேன். இப்போது அது ஒரு மொட்டை மரத்தைத் தவிர வேறொன்று மில்லை. அது என்ன? அது எவ்வளவு வலிமையாகவும் வல்லமையாகவும் இருந் தாலும், அழிகிற ஒவ்வொன்றும் அழியாமைக்கு வழிவிட வேண்டும். 135 சகோதரனே, நாம் ஒரு பெரிய தேசமாக இருந்தோம். நாம் ஒரு பெரிய மக்களாக இருந்தோம். நாம் ஒரு பெரிய சபையாக இருந்தோம். நாம் எல்லாவற்றிலும் பெரியவர்களாக இருந்தோம். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அழிகிற அனைத்தும் வழிவிட வேண்டும். இதோ, காலம் சமீபமாயிருக்கிறது. எல்லாம் அதில்தான் இருக்கிறது என்றும், உலகம் தேவனுக்கு முன்பாக ஊழல் மற்றும் நாற்றத்தின் ஒரு பெரிய குழப்பமாக மாறிவிட்டது என்றும் நான் உங்களுக்குச் சொல்கிறேன். 136 இந்தத் தேசம், அது விஸ்கி குடிப்பது, பீர் குடிப்பது. இந்த விஸ்கி மற்றும் பொருட்களின் மீது நமது வரிகள் செலுத்தப்படுகின்றன, இது நமது தேசத்தை ஆதரிக்கிறது. விஸ்கி குடிப்பது தவறு என்று நீங்கள் நினைத்தால், அது இரத்தப் பணம். நீங்கள் சொல்கிறீர்கள், "அதை விட்டு விடுங்கள், பிரசங்கியே. குடிப்பதைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லக்கூடாது. அது எங்கள் அமெரிக்க உரிமை." 137 அது உங்கள் அமெரிக்க உரிமை என்று எனக்குத் தெரியும், ஆனால் அது உங்கள் பரலோக உரிமை அல்ல. சகோதரனே, தேவனுக்கு முன்பாக நீங்கள் மனமு வந்திருந்தால், நீங்கள்... உங்களால் முடியும்... கர்த்தரைச் சேவிப்பதற்காக உங்களிடம் உள்ள ஒவ்வொரு அசுத்தமான உரிமையையும் உங்கள் இருதயத்தில் இழப்பீர்கள், உலகத்தின் காரியங்களால் இனி உங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்ள மாட்டீர்கள் என்று உங்கள் இருதயத்தில் தீர்மானிப்பீர்கள். "சகோதரர் பிரான்ஹாம், மற்ற கிறிஸ்த வர்கள் புகைபிடிக்கிறார்கள். நான் ஏன் புகை பிடிக்கக்கூடாது?" என்று நீங்கள் கேட்கலாம். 138 ஒரு அமெரிக்கக் குடிமகனாகப் புகைபிடிக்க உங்களுக்கு உரிமை இருக்கலாம். ஆனால் ஒரு கிறிஸ்தவராக அதைச் செய்ய உங்களுக்கு உரிமை இல்லை, ஏனென்றால் அது மற்றவருக்கு ஒரு இடறலாக இருக்கிறது. அது மிகச்சரியாக இருக்கிறது. நீங்கள் அதைச் செய்யக்கூடாது; நீங்கள் ஒரு இடறலை உண்டாக்குவீர்கள். 139 மற்ற எல்லா விஷயங்களும், உங்கள் உடையும். "சரி, மற்ற பெண்கள், அவர்கள் இப்படி உடை அணிகிறார்கள். மற்ற சிறுமிகள், அவர்கள் இப்படி உடை அணிகிறார்கள். அவர்கள் இதைச் செய்கிறார்கள். நான் ஏன் அதைச் செய்யக்கூடாது?" என்று சொல்கிறீர்கள். அது உங்கள் அமெரிக்க உரிமை என்று எனக்குத் தெரியும். "நான் அதைச் செய்யக்கூடாது என்று சட்டம் சொல்லவில்லை." எனக்கு அது தெரியும். அது எதையும் பெரிதாகச் சொல்லவில்லை. நீங்கள் விரும்பும் எதையும் செய்யலாம், அது சரி, ஏறக்குறைய எதையும். 140 ஆனால், சகோதரனே, அதைச் செய்வது ஒரு கிறிஸ்தவனின் இருதயத்தில் இல்லை. நீங்கள் தேவனுக்கு முன்பாகச் சுத்தமாகவும் பரிசுத்தமாகவும் வாழ்வீர்கள் என்று உங்கள் இருதயத்தில் தீர்மானித்தால், அந்த விஷயங்கள் தவறானவை என்பதை இயற்கையே உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும். 141 ஆனால், இங்கே நாம் இந்த இடத்திற்கு வருகிறோம். அது என்ன? ஏனென்றால் நாம் முடிவுப் பாதையில் இருக்கிறோம். "இனி ஒருபோதும், இனி ஒருபோதும், உலகம் நிலைநிற்கும் வரை," அல்லது நீங்கள் உயிரோடிருக்கும் வரை, அமெரிக்க வாழ்க்கை முறை என்று சொல்லப்படுகிறதின் ஒரு பகுதியைக் கொண்டும் இனி ஒருபோதும் உங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்ள மாட்டீர்கள் என்று இன்று இரவு உங்கள் இருதயத்தில் தீர்மானியுங்கள். ஆம், ஐயா, அமெரிக்க வாழ்க்கை முறை என்று சொல்லப்படுவது. 142 இப்போது, பழைய அமெரிக்க வாழ்க்கை முறை நன்றாக இருந்தது; அண்டை வீட்டாருடன் பழகுவது, மற்றும் நேர்மையாக இருப்பது போன்றவை. அது நல்லது. ஆனால் உங்கள் நிர்வாணம், மற்றும் குடிப்பழக்கம், மற்றும் களியாட்டம், மற்றும் பிரிவினை, மற்றும் திருமணம், மற்றும் கலப்புத் திருமணம், மற்றும் இந்த அபத்தங்கள் அனைத்தும் கொண்ட இந்த நவீன முறை; நீங்கள் உயிரோடிருக்கும் வரை, அதற்கெல்லாம் விலகியிருப்பேன் என்று உங்கள் இருதயத்தில் தீர்மானியுங்கள். நாம் ஜெபிப்போம். 143 நம் தலைகளைத் தாழ்த்தி, ஒவ்வொரு இருதயமும் தேவனுக்கு முன்பாக, உண்மை யாக. நாம் பாதையின் முடிவில் இருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். சந்திப்புக் காலங்களில் இந்த அடையாளங்கள் எப்போதும் வருகின்றன. நினைவில் கொள்ளுங்கள், ஜலப்பிரளய அழிவுக்குச் சற்று முன்பு, தேவன் ஒரு தீர்க்கதரிசியை எழுப்பினார். தேவன் தூதர்களை பூமிக்கு அனுப்பினார், பெரிய அடையா ளங்களும் அற்புதங்களும் நடந்தன. மழை வந்தது, உலகம் அழிக்கப்பட்டது. எகிப்திலி ருந்து வெளியேறுவதற்குச் சற்று முன்பு, தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார், எரிகிற முட்செடியில் ஒரு தூதனை அனுப்பினார், அடையாளங்களும் அற்புதங்களும் செய்யப் பட்டன. ஓ, எப்பேர்ப்பட்ட பயங்கரமான விஷயம்! எகிப்து கடலில் மூழ்கடிக்கப்பட்டது, பின்னால், சபை வெற்றிக்கு நேராகச் சென்றது. 144 கர்த்தராகிய இயேசுவின் வருகைக்குச் சற்று முன்பு, ஒரு தீர்க்கதரிசி எழுப்பப்பட்டார், யோவான் ஸ்நானகன். செய்தி புறப்பட்டுச் சென்றது, தூதர்கள் தோன்றினார்கள், அடையா ளங்களும் அற்புதங்களும் செய்யப்பட்டன, இயேசு வந்தார். உலக இரட்சகர் சிலுவையில் அறையப்பட்டார். 145 நாம் முடிவுப் பாதையில் இருக்கிறோம். கத்தோலிக்கத்தின் காலம், பதினைந்து நூற்றாண் டுகள் இருண்ட காலங்கள் வழியாகக் கீழே வந்திருக்கிறோம். மார்ட்டின் லூத்தரின் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வழியாக வந்தோம். ஜான் வெஸ்லியிடமிருந்து மெத்தடிசத்திற்கு வந்தோம். அதிலிருந்து, கால்வின், நாக்ஸ், பின்லே, பின்னீ, மற்றும் மற்ற அனைவருக்கும், கீழே பெந்தெகொஸ் தேவிற்கும் வந்தோம். பெந்தெகொஸ்தேவின் ஐம்பது ஆண்டுகளின் முடிவில் இருக்கிறோம். அது மற்றதைப் போலவே பின்வாங்கிப் போய்விட்டது. அது இப்போது வெளியே போய்விட்டது. பெண்கள் உலகத்தைப் போல நடக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆண்கள் உலகத்தின் காரியங்களை எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். மேடையிலுள்ள பிரசங்கி சொல்ல வெட்கப்படுகிறார் அல்லது பயப் படுகிறார், ஏனென்றால் அவர் அமைப்பிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று பயப்படுகிறார். 146 ஒவ்வொரு அடிமைத்தனத்திலிருந்தும் விடுபட்ட, எல்லாவற்றிலிருந்தும் விடுபட்ட மனிதர்களைக் கொண்டிருக்க தேவன் நமக்கு உதவுவாராக, அவர்களால் சமரசம் செய்யாமல் வார்த்தையைப் பிரசங்கிக்க முடியும், கருப்பைக் "கருப்பு" என்றும், வெள்ளையை "வெள்ளை" என்றும் அழைக்க முடியும். 147 என்னே, நண்பரே, இன்று இரவு நீங்கள் ஒரு கிறிஸ்தவரா? நீங்கள் இரட்சிக்கப் பட்டிருக்கிறீர்களா? நீங்கள் இரட்சிக்கப் பட்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நாம் பாதையின் முடிவில் இருக்கிறோம். இந்த இரவுகளில் ஒன்றில், அது மிகவும் தாமதமாகிவிடும். அவர் வருவார். எந்த நேரத்திலும் எடுத்துக் கொள்ளப்படுதல் நடக்கலாம். 148 நாம் தலைகளைத் தாழ்த்தியிருக்க, யாராவது உங்கள் கையை உயர்த்தி, "சகோதரர் பிரான்ஹாம், இன்று இரவு ஜெபத்தில் என்னை நினைவுகூருங்கள். இந்த இரவிலிருந்து, நான் இனி ஒருபோதும் உலகத்தைச் சேவிக்க மாட்டேன் என்று என் இருதயத்தில் தீர்மானிக்க விரும்புகிறேன்" என்று சொல்வீர்களா? உங்கள் கையை உயர்த்துவீர்களா? "நான் புகை பிடிப்பதை விட்டுவிடுவேன். நான் நடனமா டுவதை விட்டுவிடுவேன். உலகத்தின் அற்பத் தனத்தை விட்டுவிடுவேன்." 149 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அம்மையே. வேறு யாராவது? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, தம்பி. இங்கே கடைசியில் இருப்பவர், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரரே. பின்னால் இருப்பவர், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சிறிய பெண்ணே. 150 வேறு யாராவது கையை உயர்த்தி, "தேவனுடைய கிருபையினால், இன்று இரவு, நான் பாபிலோனில் இருக்கிறேன் என்பதை உணருகிறேன். நாம் இருக்கும் நிலையை நான் உணருகிறேன். சகோதரர் பிரான்ஹாம், எல்லா இடங்களிலும் அது முழங்கப்படுவதைக் கேட்கிறேன், நாம் பாதையின் முடிவில் இருக்கிறோம் என்று எனக்குத் தெரியும். நான் இப்போது கிறிஸ்து இயேசுவிடம் என் கையை உயர்த்துகிறேன், என்மேல் இரக்கமாயிருக்கும்படி அவரிடம் கேட்கிறேன். நான் செய்து கொண்டிருந்த அசுத்தமான காரியங்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டு, கர்த்தரைச் சேவிப்பேன் என்று இந்த இரவிலிருந்து, என் இருதயத்தில் தீர்மானிக்கிறேன்" என்று சொல்வீர்களா? 151 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அம்மையே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது, உங்கள் கையை உயர்த்தி, "நான் இப்போது உலகத்தின் காரியங்கள் எல்லாவற்றிலிருந்தும் விலகுகிறேன். இன்று இரவு முதல், நான் கர்த்தரைச் சேவிப்பேன்" என்று சொல்வீர்களா? 152 இப்போது, நாம் மெதுவாகப் பாடும்போது, உங்கள் தலைகளைத் தாழ்த்தி. யாராவது அதைப் பற்றிக் கண்டிப்புடன் உணர்ந்தால், நீங்கள் விரும்பினால், நீங்கள் இங்கே மேலே நடந்து வந்து பலிபீடத்தில் முழங்கால்படியிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அப்போது நாங்கள் உங்களுடன் ஜெபிக்கலாம். இதைச் செய்வதன் மூலம்... 153 இயேசு என்ன சொன்னார்? "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்." அது எவ்வளவு எளிமையானது! ஆண்களே, பெண்களே, பரலோகத்தைத் தவறவிட உங்களால் முடியுமா? என்ன...? எல்லாம் என்ன...? 154 யுகங்கள் உருண்டோடும்போது, இன்று இரவிலிருந்து பல்லாயிரக்கணக்கான மற்றும் லட்சக்கணக்கான வருடங்கள் செல்லும்போது, எப்போது... இந்தப் பழைய உலகம் வெடிக்கப் போகிறது. வேதாகமம் அப்படிச் சொன்னது. ரஷ்யா இப்போது அப்படித்தான் நினைக்கிறது. உங்கள் பெயர் எழுதப்பட்ட அந்தக் குண்டு அங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது. 155 "சரீரத்தைக் கொல்லுகிறவனுக்குப் பயப்படாமல், சரீரத்தையும் ஆத்துமாவையும் நரகத்திலே தள்ள வல்லவருக்கே பயப் படுங்கள்." பார்த்தீர்களா? தேவனுக்குப் பயப் படுங்கள். அவரை நேசியுங்கள். அவரைச் சேவிக்க இன்று இரவு உங்கள் இருதயத்தில் தீர்மானியுங்கள். 156 மேலும், இது, எப்போதாவது இந்த உலகம் இந்தக் குண்டுகளால் வெடிக்கப் படும்போது, அது அங்கே சூரியனுக்குள் பறந்து செல்லும், மிகுந்த உஷ்ணம் பூமியைப் பொசுக்கிவிடும். அணுக்களின் எரிதலினால், உலகம் நெருப்பினால் அழிக்கப்படும்; கோடிக்கணக்கான, பில்லியன் கணக்கான மடங்கு, ஃபாரன்ஹீட் வெப்பம். 157 நீங்கள் ஒரு எளிய காரியத்தைச் செய்வீர்களா? தேவன் உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, அவரிடம் உங்கள் கையை உயர்த்தி, "இன்று இரவு முதல் நான் தேவனைச் சேவிப்பேன். நான் தேவனைச் சேவிப்பேன்" என்று சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. இப்போது, நாம் நம் தலைகளைத் தாழ்த்துவோம். 158 அன்பான பரலோக பிதாவே! வார்த்தையின் கடினமான, கரடுமுரடான பிரசங்கம்; ஆனால், ஓ பிதாவாகிய தேவனே, மக்களின் இருதயத்திற்குள் செல்லாமல், "வாருங்கள், சபையில் சேருங்கள்" என்று மேலே பூசுகிற சிறிய, ஹாலிவுட் பாணியிலான, குழந்தைத் தனமான, மென்மையான பிரசங்கங்களைக் கேட்டு நான் மிகவும் சோர்ந்துவிட்டேன். தேவனே, எங்களுக்குப் பழைய பாணியிலான மனந்திரும்புதல் வேண்டும். ஆண்களும் பெண்களும் எழுந்து கர்த்தராகிய இயேசுவிடம் வருவதை நாங்கள் பார்க்க வேண்டும். தேவனே, இந்த விஷயம் தீர்க்கப்படுவதை நாங்கள் பார்க்க வேண்டும், ஏனென்றால் நாம் சரீரப்பிரகாரமாக இருக்கப்போகும் கடைசி முறையாக இது இருக்கும். இன்று இரவு இங்கே இருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உம்மிடம் வருவதற்குக் கிடைக்கும் கடைசி முறையாக, ஒருவேளை கடைசி வாய்ப்பாக இது இருக்கும். இது முத்திரையிடும் நேரமாக இருக்கலாம். அநேகருக்கு நாளை என்பது இல்லாமல் போகலாம். 159 அப்பொழுது, அந்த நாளில், நான் நிற்க வேண்டும். இந்தப் பெரிய இரவு இங்கே வரும்போது, அது பரலோகத்தின் பதிவேட்டில் இருக்கும், நான் சொன்னதற்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். மக்கள் தாங்கள் எப்படிப் பதிலளித்தார்கள் என்பதற்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். 160 ஆண்டவரே, இன்று இரவு, ஒரு டஜன் கைகள், அல்லது அதற்கு மேலாக உயர்ந்தன, இரட்சிப்பைத் தேடின. தேவனே, நீர் கிறிஸ்து. நீர் இன்று இரவு அவர்களை ஏற்றுக்கொள்வீர் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும், இப்பொழுதே அவர்களைப் பாவத்திலிருந்து இரட்சியும், அவர்கள் இந்த கட்டிடத்திலிருந்து வெளியேறி, நவீன பாபிலோனுக்குள் செல்லும்போது, ஒரு நாள் அது அசைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் தீர்மானித்திருக்கிறார்கள். 161 மேதியர்-பெர்சியர்கள் வாசலில் காத்துக் கொண்டிருந்தார்கள். "நீ தராசிலே நிறுக்கப் பட்டு, குறையுள்ளவனாய்க் காணப்பட்டாய்" என்று அவர் சொன்னார். 162 அதிக குண்டுகளையும், அதிக விமானங்களையும், ஆயிரக்கணக்கான மடங்கு அதிக மனிதர்களையும் கொண்டு, தயாராக இருக்கும் ஒரு வல்லமையான தேசத்தைப் பற்றி இன்று இரவு நாம் கேட்கும்போது; கிழக்கிலிருந்து, மேற்கிற்கு வரத் தயாராக இருக்கும், அதைச் செய்யத் திறமையும் வல்லமையும் கொண்ட, தேவனை அறியாத ஒரு தேவபக்தியற்ற தேசம். இங்கே நாம், விஸ்கி, பீர் கடைகள் திறந்திருக்க, குடித்து, களியாட்டம் போட்டு, ஒரு குடிகார விருந்துடன், இன்னும் பாவத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். 163 ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தன் வஸ்திரங்களைத் துவைத்த, முயற்சித்துக் கொண்டிருக்கும் சபை கேலி செய்யப்படுகிறது. அவர்கள் அதைக் கேலி செய்கிறார்கள். ஆனால் விசுவாசியைத் தொடரும் என்று நீர் சொன்ன அந்தப் பெரிய அடையாளங்களும் அற்புதங்களும், தேவனுடைய வரங்கள் திரும்ப வந்திருக்கின்றன. "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன," என்று நீர் சொன்னீர். "என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள், சாவுக்குேதுவான யாதொன்றைக் குடித்தாலும், அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்கள்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்." சுவர்மேல் கையெழுத்து இருக்கிறது, முடிவு காலம் இங்கே வந்திருக்கிறது என்பதை மக்களுக்குக் காட்ட அந்த அடையாளங்கள் திரும்ப வந்திருக்கின்றன. தேவனே... ஒவ்வொரு அவிசுவாசியையும், இன்று இரவு, தன் ஆத்தும இரட்சிப்பை உணரும்படி விழிக்கச் செய்யும். கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். நம் தலைகளைத் தாழ்த்தியிருக்க. 164 இன்று இரவு, கிறிஸ்துவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட உங்களில் யாராவது விரும்பினால், நீங்கள் இங்கே பலிபீடத்திற்கு வந்து, இங்கே கீழே முழங்கால்படியிட்டுச் சிறிது நேரம் ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நண்பரே, என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரிந்ததா? 165 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, வாலிபனே. வேறு யாராவது அவரைப் பின்தொடர்வீர்களா? இங்கே ஒரு கட்டிலில் படுத்திருக்கும் ஒரு மனிதர், தன் கையை உயர்த்துகிறார். ஒரு மனிதர், ஒருவேளை முடமானவராகவோ அல்லது ஏதோ ஒன்றாகவோ, அல்லது வியாதியஸ்தராக, மிகவும் வியாதியஸ்தராக, ஒரு கட்டிலில் படுத்திருந்து, தன் கையை உயர்த்துகிறார். ஒருவேளை அவரால் பலிபீடத்திற்கு வர முடியாது. தேவன் அவரைச் சுகமாக்க... அவர் இருக்கும் இடத்திலேயே அவரைப் பராமரிக்க முடியும். அது மட்டுமல்ல, அவரைச் சுகமாக்கவும், அவரை நன்றாக்கவும் முடியும். நாங்கள் ஒரு சுகமளிக்கும் கூட்டத்தை நடத்தப் போகிறோம். 166 நீங்கள் உங்கள் இருக்கையிலிருந்து எழுந்து, இங்கே மேலே வருவீர்களா, ஒரு நிமிடம்? கர்த்தரைச் சேவிக்க விரும்புகிற, ஒரு அர்ப்பணிப்பு செய்ய விரும்புகிற நீங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் கருப்பின சகோதரரே, அவர் தனது அர்ப்பணிப்பைச் செய்ய இப்போது பலிபீடத்திற்கு நடந்து வருகிறார். மற்றொரு மனிதர், பின்னாலிருந்து நடந்து வருகிறார். அப்படியே வாருங்கள். அது சரி. இரத்தத்தால் நிறைந்த ஒரு ஊற்று இருக்கிறது, இம்மானுவேலின் நரம்புகளிலிருந்து பெறப் பட்டது, பாவிகள் அந்த வெள்ளத்தில் மூழ்கும்போது, தங்கள் குற்றக்கறை அனைத்தையும் இழக்கிறார்கள். நாம் இப்போது மெதுவாகப் பாடும்போது, நீங்கள் வருவீர்களா? ஒரு... இருக்கிறது (அது திறந்திருக்கிறது)... இரத்தத்தால், ... இம்மானுவேலின் நரம்பிலிருந்து, பாவிகள்... நீங்கள் வந்து இங்கே ஒரு கணம் முழங்கால்படியிட்டு, அதைப் பற்றிப் பேச மாட்டீர்களா? இப்போதே மேலே வாருங்கள். இங்கே கீழே முழங்கால்படியிடுங்கள். தங்கள் குற்ற... அனைத்தையும் இழக்கிறார்கள். 167 ஜெபத்தின் மதிப்பை அறிந்த ஒவ்வொரு கிறிஸ்தவனும், ஜெபியுங்கள். ஜெபிக்கத் தெரிந்த எல்லோரும், இப்போது ஜெபத்தில் இருங்கள். நினைவில் கொள்ளுங்கள், உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் ஒரு மனிதருக்கு, இது கடைசி வாய்ப்பாக இருக்கலாம். அந்த இளம் பெண்ணுக்கு அது கடைசி வாய்ப்பாக இருக்கலாம். அந்த வாலிபனுக்கு அது கடைசி வாய்ப்பாக இருக்கலாம். இன்று இரவு, தேவன் தன் கடைசி முறையாகத் தட்டிக் கொண்டிருக்கலாம். "என் ஆவி மனிதனோடு என்றைக்கும் போராடுவதில்லை." ஒருவேளை அவர் மீண்டும் வர அவருக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போகலாம். 168 இங்கே மூன்று ஆண்கள், பலிபீடத்தின் மேல் முழங்கால் படியிட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பெரியவர்கள். தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் அனைவரும் உணருகிறார்கள், தாங்கள் இப்போது யெகோவா தேவனின் பிரசன்னத்தில் இருப்பதை அறிந்து. இயேசு சொன்னார், "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை." தாங்கள் தவறு செய்திருக்கிறோம் என்பதை அறிந்து, தாங்கள் தேவனுடைய பிரமாணங்களை மீறியிருக்கிறோம் என்பதை அறிந்து; "தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்" என்று சொல்ல, அவர்கள் இங்கே தங்கள் முழங்கால்களில் நின்று வருகிறார்கள். 169 இயேசு என்ன சொன்னார்? ஆயக்காரன், தன் மார்பில் அடித்துக் கொண்டு, "தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்" என்று சொன்னதைத் தவிர வேறொன்றும் செய்ய வில்லை. அவன் நீதிமானாக்கப்பட்டுத் தன் வீட்டிற்குச் சென்றான். நீங்கள் வந்து முழங்கால்படியிடுவீர்களா? இன்று இரவு, நீதிமானாக்கப்பட்டு உங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள். "அணுகுண்டுகள் வெடிக்கட்டும், மரணம் தாக்கட்டும், அது விரும்பும் எதுவும் நடக்கட்டும், இனி எதுவும் என்னைத் தொந்தரவு செய்யாது" என்று சொல்லுங்கள். 170 நான் இப்போது அங்கே பின்னால் அமர்ந்திருக்கும் ஒரு மனிதனின் முகத்தைத் திரும்பிப் பார்க்கிறேன். தேவன் அவர் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக! அவர் வெகு நாட்களுக்கு முன்பு அல்ல, ஒரு மரிக்கும் மனிதராக, தொண்டையில் புற்றுநோயுடன் இங்கே வந்தார். எனக்கு நினைவிருக்கிறது... அவருக்குத் தெரியாது, ஆனால் நிலைமையைத் தெரிந்த மருத்துவரிடம் நான் கேட்டேன். அவர் சொன்னார், "அவருக்குச் சில நாட்களே இருக்கின்றன." அவர் இங்கே வந்தார், நான் பலிபீடத்தில் அவருக்காக ஜெபித்தேன். விலையேறப்பெற்ற கர்த்தராகிய இயேசு அவரைச் சுகமாக்கினார். அவரை நன்றாகத் தெரியும்; அவருடைய மகளுடன் செல்வது வழக்கம். இதோ அவர்கள், அவரும் அவர் மனைவியும், இன்று இரவு இங்கே அமர்ந்திருக்கிறார்கள். மறுநாள் நான் அவரைச் சந்தித்தேன், அவர் தன் முற்றத்தில் புல் வெட்டிக்கொண்டிருந்தார். நான் அவரை வெளியே பார்க்கிறேன், அவரைப் பார்க்கும் போது நான் ஒரு துளி கண்ணீர் விட வேண்டியிருந்தது. "தேவனுடைய இரக்கங்கள் இல்லாவிட்டால், அவர் இன்று இரவு அங்கே கல்லறைத் தோட்டத்தில் படுத்திருந்திருப்பார்" என்று நான் நினைக்கிறேன். தேவன் அவரை எப்படிக் காப்பாற்றினார்! 171 நான் சற்று முன்பு, ஏழை சகோதரர் பர்ன்ஸைப் பார்த்தேன். பரிசுத்த ஆவியானவர் அவர் இருந்த அறைக்குள் வந்த பிறகு, அவர் எழுந்து புன்னகைத்தார். சொன்னார், "சகோதரர் பிரான்ஹாம், நான் மீண்டும் சபைக்கு வருகிறேன்." அவரைப் பாருங்கள்; அவர் இங்கே இருப்பார். நீங்கள் கவலைப்பட வேண்டாம். என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் இங்கே இருப்பார். நீங்கள் வருவீர்களா, ஜெபத்தின் பழைய பாணியிலான பலிபீடத்திற்கு, இங்கே இப்போது உங்கள் வழியை அமைத்துக் கொள்வீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சிறிய பெண்ணே, நீங்கள் வந்து, முழங்கால் படியிடும்போது. நீங்கள் விரும்பினால், இங்கே சரியாக. நாம் மீண்டும் ஒருமுறை பாடும்போது, இந்த நேரத்தில் வேறு யார் வருவார்கள்? மரிக்கும் கள்ளன் கண்டு மகிழ்ந்தான் அவன் நாளில் அந்த ஊற்றை; அவனைப் போலப் பாவியான நானும், அங்கே, என் பாவங்கள் அனைத்தையும் கழுவக்கூடும். இப்போது என்னுடன் சேர்ந்து பாடுவீர்களா? கிறிஸ்தவர்கள் ஜெபிக்கட்டும். இப்போதே வாருங்கள், அங்கேயே எழுந்து இங்கே வாருங்கள். உங்களுடன் சேர்ந்து கீழே இறங்கி வந்து ஜெபிக்க விரும்புகிறேன். மரிக்கும் கள்ளன் கண்டு மகிழ்ந்தான்... நீங்கள் வரமாட்டீர்களா? தேவனுடைய வார்த்தை சொன்னது, "விருப்பமுள்ளவன் எவனோ அவன் வரக்கடவன்." பாழாக்கப்பட்ட மற்றும் இழந்துபோன அந்த வாழ்க்கையைச் சரி செய்யுங்கள். அவனைப் போலப் பாவியான நானும்... தங்கள் குற்றக்கறை அனைத்தையும் இழக்கிறார்கள். அனைத்தையும் இழக்கிறார்கள்... நீங்கள் வரமாட்டீர்களா? இது உங்கள் வாய்ப்பு, நான் இப்போது உங்களிடம் கெஞ்சுகிறேன். பாவிகள் அந்த வெள்ளத்தில் மூழ்கி, இழக்கிறார்கள்... 172 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அம்மையே. வேறு யாராவது கூட வரமாட்டீர்களா? இதுதான் நேரம் மற்றும் காலம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. நீங்கள் விரும்பினால், இந்தப் பெண்களுடன் இங்கே வாருங்கள். அங்கே கவனியுங்கள், ஒரு கணம். 173 நீங்கள் இப்போது வருகிறீர்களா? அவர்கள் அழுதபடி, வருத்தத்துடன், தங்கள் இருதயத்தில் தீர்மானிக்க வருவதைப் பார்ப்பதைத்தான் நான் விரும்புகிறேன். எது அதைச் செய்தது? பரிசுத்த ஆவியானவர். நான் உண்மையில் நெருக்கப்படுவதாக உணர்கிறேன். நான்... நான் ஒரு பைத்தியக்காரனாக இருந்தால், எனக்கு அது தெரியாது என்று அறியுமளவிற்கு உங்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். பல்லாயிரக்கணக்கான மக்கள் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும், தேவன் உங்களை அதற்குப் பதில் சொல்ல வைப்பார். என் இருதயத்தில் அந்த நெருக்கத்தை நான் உணர்கிறேன். இன்று இரவு இங்கே அநேக மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் உண்மையில் இங்கே சரியாக வர விரும்புகிறார்கள், ஆனால் பிசாசின் ஒடுக்குதல் உங்களைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது. 174 இந்தப் பெண்ணைப் போல, நீங்கள் கட்டுகளை அறுத்துக்கொண்டு வரமாட்டீர்களா? அவள் செய்த ஒரே விஷயம், ஒரு சிறிய சித்தத்தை, அதாவது அவளுடைய சித்தத்தை ஒப்புக்கொடுத்தாள், தேவன் தனது சித்தத்தை எடுத்துக்கொண்டு அவளை இங்கே மேலே கொண்டு வந்தார். இப்போது அவளுக்கு நித்திய ஜீவன் இருக்கிறது, ஏனென்றால் அவள் அவரை அறிக்கையிட வந்திருக்கிறாள். நீங்கள் வரமாட்டீர்களா? ஓ, நான் உணர்கிறேன்... நாம் மீண்டும் ஒருமுறை ஜெபிப்போம். செய்வீர்களா? 175 பரலோக பிதாவே, இன்று இரவு என் ஆத்துமாவின் மேல் இருக்கும் மிகுந்த பாரத்தை அறிந்து, இங்கே வர வேண்டிய அநேகர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து. அநேகர் தங்கள் கைகளை உயர்த்துவதன் மூலம் அதை அறிக்கையிட்டிருக்கிறார்கள். ஆண்டவரே, இந்த ஒரு கணம் கூட, இந்தப் பெண்ணுக்கு ஏதோ அர்த்தம் இருக்கிறது என்பதை அறிந்து, நான் இன்னும் சிறிது நேரம் காத்துக் கொண்டிருக்கிறேன். அது மரணம்... மரணத்திற்கும் ஜீவனுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் குறிக்கிறது. அவள் வந்தாள். "வருகிறவனைப் புறம்பே தள்ளாமல், நீர் அவர்களை ஏற்றுக்கொள்வீர்" என்று நீர் சொன்னீர். இப்போது, நாம் முடிவில் இருக்கிறோம் என்பதை அறிய. தேவனே, அந்தச் சிறிய பெண் இப்போது வருவதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். மற்றவர்களும் வருவார்கள் என்று நான் ஜெபிக்கிறேன். அதை அருளும், ஆண்டவரே. 176 பாவியே, நீங்கள் வரமாட்டீர்களா? வாருங்கள், நாங்கள் ஜெபத்தில் காத்துக் கொண்டிருக்கும்போதே. ஜெபம் காரியங்களை மாற்றுகிறது. வாழ்க்கையின் குறுக்குச் சாலைகளில் இருக்கும் மற்றொரு இளம் பெண், சாத்தான் அவளை அங்கே தடுத்து வைத்திருக்கலாம். உங்களில் சிலர் வயதானவர்கள் மற்றும் நரைத்தவர்களாகவும் இருக்கிறீர்கள்; நீங்கள் இங்கே இருக்க வேண்டும். ஓ, சகோதரரே, சகோதரியே, உங்கள் இளமை நாட்கள் போய்விட்டன, எல்லாம் முடிந்துவிட்டது. இந்தப் பிள்ளைகள் வரலாம்; ஏன் உங்களால் முடியாது? நீங்கள் வரும்படி, கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களிடம் கெஞ்சுகிறேன். 177 கர்த்தராகிய இயேசுவே, மீண்டும் ஒருமுறை நான் ஜெபிக்கிறேன், ஆண்டவரே, ஒரு கல் கூடப் புரட்டப்படாமல் இருக்கக்கூடாது என்று நான் ஜெபிக்கிறேன். இங்கே இருக்கும் எல்லோரும் பார்க்கும்படி. அவர்கள் இன்று இரவு வந்து, கர்த்தராகிய இயேசுவின் உருவத்தையும் ஒளியையும் அணிந்து கொள்ளட்டும், அவர்கள் சிலுவையின் வீரம்மிக்க போர்வீரர்களாக இருக்கட்டும், உலகத்தின் காரியங்களைக் கைவிடவும், இன்று இரவு கிறிஸ்துவிடம் வரவும் தங்கள் இருதயத்தில் தீர்மானிக்கட்டும். ஆண்டவரே, அதை அருளும், பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தைக்குத் தண்ணீர் பாய்ச்சவும், தேவனுடைய குமாரன் சீக்கிரம் வருகிறார் என்று நாங்கள் பேசுகிறோம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தவும் நாங்கள் பொறுமையுடன் காத்திருக்கும்போது! செய்தித்தாள்களையும் மற்ற எல்லாவற்றையும் அவர்கள் பார்க்கிறார்கள், வானொலிகள் அதை முழங்குகின்றன, பெரிய மன்றங்களும் மாநாடுகளும் தோல்வியடைகின்றன என்பதை அறிந்திருக்கிறார்கள். நேபுகாத்நேச்சார் காலத்தில் நடந்தது போல, ரஷ்யா நேராக அணிவகுத்து வருகிறது. 178 ஓ தேவனே, புறஜாதியினரின் நாள் முடிந்தது. சுவர்மேல் கையெழுத்து இருக்கிறது. தங்கள் இருதயத்தில் தீர்மானித்தவர்களுக்கு, ஆவிக்குரிய வரங்கள் சபையில் இருக்கின்றன. "மேனே, மேனே, தேக்கேல், உப்பார்சின். நாம் தராசிலே நிறுக்கப்பட்டு, குறையுள்ளவர்களாய்க் காணப்பட்டோம்." 179 தேவனே, சுவிசேஷம் பிரசங்கிக்கப் பட்டது, இங்கே இந்தக் கூடாரத்தில், இங்கே அமர்ந்திருக்கும் நூற்றுக்கணக்கான மக்கள், அநேகர் இன்று இரவு இங்கே அமர்ந்திருக்கிறார்கள், அவர்களுக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது, பலிபீட அழைப்பு கொடுக்கப்பட்டது, பின்னர் அவர்களுக்குக் குறுக்கே, "மேனே, மேனே, தேக்கேல், உப்பார்சின்" என்று எழுதப்பட்டது. 180 தேவனே, பலிபீட அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்குச் சாக்குப் போக்கு இல்லை. நீர் முன்னறிவித்தீர். நீர் தீர்க்கதரிசனம் உரைத்தீர். நீர் அடையா ளங்களையும் அற்புதங்களையும் காட்டினீர். நீர் புற்றுநோய்களைச் சுகமாக்கினீர். நீர் குருடர் களின் கண்களைத் திறந்தீர். நீர் முடவனை நடக்கப் பண்ணினீர். நீர் செவிடனைக் கேட்கவும், ஊமையைப் பேசவும் வைத்தீர். நீர் அனைத்து வகையான அடையாளங்களையும் செய்தீர், இங்கேயே இந்தக் கூடாரத்தில். மக்கள் இப்போதே, சாட்சிகளாக இங்கே அமர்ந்திருக்கிறார்கள். ஓ தேவனே, சூரியன் மறையும் போது அது எப்படி இருக்கும்? ஓ தேவனே, மனிதர்கள் பதில் சொல்லும் படி கேட்கப்படும்போது அது எப்படி இருக்கும்? அது எப்படி இருக்கும்? பிதாவே, இன்று இரவு, கிறிஸ்துவின் நாமத்தில், அநேகர் வருவதற்கு அருள் புரியும். 181 இன்னும் ஒரு அழைப்பு இருக்கும்போது, நீங்கள் இப்போது வருவீர்களா, பலிபீடத்திற்கு உங்கள் வழியை அமைத்துக் கொள்வீர்களா? நீங்கள் சபையில் இணைந்து எவ்வளவு காலம் ஆகியிருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் மறுபடியும் பிறந்திருக் கிறீர்களா? கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக நீங்கள் அறிவீர்களா? வாருங்கள், முழங்கால் படியிடுங்கள். நான் ஒரு கணம் காத்திருக்க விரும்புகிறேன். ஜெபியுங்கள். 182 இசைக்கப்படும் அந்தப் பாடலை நீங்கள் கேட்கிறீர்களா? "நீங்கள் பதில் சொல்லும்படி கேட்கப்படும்போது..." விடியற் காலைக்கு முன்பே இயேசு வந்தால் என்ன செய்வது? இன்று இரவு நீங்கள் வீட்டிற்குச் செல்லும் வழியில், ஒரு குடிகார ஓட்டுநர் உங்கள் மீது மோதினால் என்ன செய்வது? கண்ணாடி உங்கள் சரீரத்தின் நரம்புகளுக்குக் குறுக்கே பாய்ந்து, நீங்கள் இரத்தம் வடிந்து இறக்க நேரிட்டால். நீங்கள் நியாயத்தீர்ப்புக்கு முன் நிற்க வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு காரணம் சொல்லும்படி கேட்கப்படுவீர்கள். அப்பொழுது என்ன? அப்பொழுது என்ன? அப்பொழுது என்ன? பெரிய புத்தகம் திறக்கப்படும்போது, அப்பொழுது என்ன? இன்று இரவு இந்தச் செய்தியை நிராகரிக்கிறவர், ஒரு காரணம் சொல்லும்படி கேட்கப்படுவீர்கள் - அப்பொழுது என்ன? அப்பொழுது என்ன? அப்பொழுது என்ன? பெரிய புத்தகம் திறக்கப்படும்போது, அப்பொழுது என்ன? இன்று இரவு இந்தச் செய்தியை நிராகரிக்கிறவர், ஒரு காரணம் சொல்லும்படி கேட்கப்படுவீர்கள் - அப்பொழுது என்ன? 183 நீங்கள் வரமாட்டீர்களா? அவரை நிராகரிக்காதீர்கள். அவர் உங்கள் இருதயத்தில் அழைக்கிறார். அவரே இரட்சகர். பலிபீடத்தில் இருப்பவர்களுக்காக நாங்கள் ஜெபிக்கும்போது, உங்கள் மனதை முடிவு செய்யுங்கள். எல்லோரும் உங்கள் தலைகளைத் தாழ்த்தி, ஆழமான ஜெபத்தில் இருங்கள். இன்று இரவு, ஆறு அல்லது ஏழு ஆத்துமாக்கள் பலிபீடத்தில் கிடக்கிறார்கள். அன்பான சகோதரரே, அங்கே கட்டிலில் இருப்பவரே, தேவன் உங்கள் கையையும் பார்த்தார். 184 நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? இயேசு சொன்னார், "என் பிதா ஒருவனை முதலில் அழைத்தாலொழிய, எவனும் என்னிடத்தில் வரமாட்டான்." தேவன் உங்கள் இருதயத்தில் பேசினார்; அது உங்களுக்குக் கிடைத்த தேவனுடைய கிருபை. பின்னர் நீங்கள் வந்தீர்கள். இயேசு சொன்னார், "வருகிறவனை, நான் புறம்பே தள்ளுவதில்லை." 185 அப்படியானால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களை மன்னிக்கும்படி அவரிடம் கேளுங்கள், அவர் உங்களைச் செய்யச் சொல்வதெல்லாம் அதுதான். நீங்கள் செய்ததிற்கு வருந்துங்கள். அவர் உங்களை ஏற்றுக்கொள்வார். "தேவனே, நான் இப்போதே என் இருதயத்தில் தீர்மானிக்கிறேன்" என்று சொல்லுங்கள். இளம் பெண்ணே, நீங்களும் அப்படியே. நீங்கள் இருவரும், பலிபீடத்தில் இருக்கும் நீங்கள் மூன்று பேரும்; மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள். ஜெபியுங்கள். 186 அன்பான பரலோக பிதாவே, நான் இங்கே கீழே பார்த்து, சுவிசேஷத்தின் ஆதிக்கத்தின் கீழ், ஆண்களும் பெண்களும் பலிபீடத்தில் பணிந்திருப்பதைப் பார்க்கிறேன். ஓ, ஆண்டவரே, எங்களை ஒரு ஆதிக்கத்தின் கீழ் வைக்கும் ஏதோ ஒன்று எங்களிடம் இருப்பதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சிய டைகிறோம். அது மதுபானம் அல்ல. அது பெந்தெகொஸ்தேவின் திராட்சரசம். சரியானதைச் செய்ய அது எங்களை ஆட்கொள்கிறது. அது தவறுகள் அனைத்தையும் அகற்றி, அதைச் சரியாக்குகிறது. ஆண்டவரே, இதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மனிதர்கள் தேவனை ருசி பார்த்திருக்கிறார்கள். இந்தப் பெண்கள் தேவனை ருசி பார்த்திருக்கிறார்கள். இன்று இரவு, ஒருவேளை தங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக, ஏதோ ஒன்று அவர்கள் இருதயத்தில் பேசி, "என்னுடைய பிள்ளையே, அந்த விபத்து ஏற்படாமல் உன்னைக் காத்தது நானே. நீங்கள் மரிக்கும் நிலையில் இருந்தபோது உங்களை இங்கே காப்பாற்றியவர் நானே. இப்போது நீங்கள் திரும்பி வந்து, உங்கள் வாழ்க்கையை என்னிடம் கொடுக்க மாட்டீர்களா? நான் உங்களை வழிநடத்தி, வீட்டிற்கு அழைத்துச் செல்ல அனுமதியுங்கள். நான் உங்களை நேசிக்கிறேன், உங்களுக்கு நன்மையாக இருக்க விரும்புகிறேன்" என்று சொல்லியிருக்கிறது. 187 தேவனே, நீர் செய்த இந்த வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு, நீர் அவர்களைத் திருப்பி அனுப்பமாட்டீர் என்று ஏற்றுக் கொண்டு, அவர்கள் வந்து, பலிபீடத்தில் முழங்கால்படியிட்டிருக்கிறார்கள். பரலோக பிதாவே, இன்று இரவு, நீர் அவர்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கும்படி நான் ஜெபிக்கிறேன். வாக்குறுதி அளித்த தேவன், வாக்குறுதியைக் காப்பாற்றுகிறார் என்ற இந்த நிச்சயத்தை அறிந்து அவர்கள் இங்கிருந்து எழும்பட்டும். இந்த இரவிலிருந்து, அவர்கள் தங்கள் ஆத்துமாவில சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளட்டும். இவர்கள் மட்டுமல்ல, தங்கள் கைகளை உயர்த்திய பின்னால் இருப்பவர்களுக்காவும். தேவனே, நீர் அவர்களுடன் இருக்கும்படி நான் ஜெபிக்கிறேன். இப்போதே, தங்கள் இருக்கையில், அவர்கள் எழுந்து நிற்காததன் மூலம் தாங்கள் ஒரு தவறு செய்திருக்கிறோம் என்பதை அவர்கள் உணரட்டும். "ஆண்டவரே, இப்போதே, நான் என் இருதயத்தில் தீர்மானிக்கிறேன், இந்த இரவிலிருந்து நான் உம்மைச் சேவிப்பேன்" என்று தேவனுக்கு அந்த நித்திய "ஆம்" என்பதை அவர்கள் சொல்லட்டும். "ஆண்டவரே, நான் என் கையை உயர்த்தும்போது, இதை உமக்கு வாக்குறுதி அளிக்கிறேன். தேவனே, உமது கிருபையினால் நான் அதைச் செய்வேன். நான் இப்போது இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். நான் இப்போது அவரை என் இரட்சகராகவும், என் வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொள்கிறேன். என் சொந்த உணர்வின் வழிநடத்துதலை நான் பின்பற்ற மாட்டேன். இந்த இரவிலிருந்து, பாதையின் முடிவில் அவரை நேரில், தனிப்பட்ட முறையில் சந்திக்கும் வரை, நான் அவருடைய ஆவியின் வழிநடத்துதலைப் பின்பற்றுவேன்." பிதாவே, அதை அருளும். 188 இப்போது நான் ஆச்சரியப்படுகிறேன், நம் தலைகளைத் தாழ்த்தியிருக்க, பலிபீடத்திற்கு வராத, தேவனுக்கு அந்த அர்ப்பணிப்பைச் செய்த யாராவது சபையார் மத்தியில் இருந்தால், உங்கள் கைகளை உயர்த்தி, "இன்று இரவு என் இருதயத்தில் அந்த அர்ப்பணிப்பைச் செய்தேன், சகோதரர் பிரான்ஹாம். 'தேவனே, இந்த இரவிலிருந்து, விலைக்கிரயம் எதுவாக இருந்தாலும் நான் உம்மைச் சேவிக்கப் போகிறேன். நான் என் சொந்த எண்ணங்களைப் பின்பற்றப் போவ தில்லை, நான் பரிசுத்த ஆவியின் கண்டிப்பு உணர்வைப் பின்பற்றப் போகிறேன்'" என்று சொல்வீர்களா? "இன்று இரவு என் இருதயத்தில் நான் அதைச் செய்தேன், சகோதரர் பிரான்ஹாம்" என்று சொல்லி உங்கள் கையை உயர்த்துவீர்களா? 189 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. அங்கே பின்னால் இருப்பவர், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அம்மையே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அம்மையே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. அது நல்லது. அது நல்லது. இங்கே இருப்பவர், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரரே. அங்கே பின்னால் இருக்கும் சகோதரர், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களைப் பார்க்கிறேன். அது சரி. அவர்களில் அநேகர். "சகோதரர் பிரான்ஹாம், அவர்கள் பீடத்திற்கு வர வேண்டுமா?" என்று கேட்கலாம். இல்லை, இல்லை. இல்லை, இல்லை. அது உங்கள் இருதயத்தில் இருக்கிறது. உங்கள் இருதயமே தேவனுடைய பலிபீடம். 190 ஆனால் இவர்கள் செய்ததைப் போல, மேலே வந்து முழங்கால்படியிட்டு ஜெபிப்பது நல்லது. ஆம். அவர்கள் அதை அறிக்கையிடப் பகிரங்கமாக மேலே வந்திருக்கிறார்கள். அவர்கள் இப்படிச் செய்வதைப் பார்க்க நான் விரும்புகிறேன். ஆனால், நமது அறிக்கையைச் செய்ய பலிபீடத்திற்கு வருவது, நாம் செய்யும் ஒரு பழைய பாணியிலான முறையாகும். ஆனால், "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள் எத்தனை பேரோ அத்தனை பேரும் இரட்சிக்கப்பட்டார்கள்." வேதாகமம் அதைத்தான் சொன்னது. அவரைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். 191 இப்போது, பலிபீடத்தைச் சுற்றியி ருக்கும் நீங்கள், ஆண்களே, மற்றும் பலிபீடத்தில் இருக்கும் பெண்களே, தேவன் உங்களைப் பலிபீடத்திற்கு மேலே அனுப்பினார் என்றும், அவர் இன்று இரவு உங்களை அழைத்தார் என்றும் நீங்கள் விசுவாசித்து, தேவன் உங்கள் கடந்த கால வாழ்க்கையை மன்னித்திருக்கிறார் என்று நீங்கள் உணர்ந்தால், இன்று இரவு முதல், கர்த்தராகிய இயேசுவைச் சேவிக்கவும், உங்கள் பாவ வழிகளிலிருந்து திரும்பவும் உங்கள் இருதயத்தில் தீர்மானித் திருக்கிறீர்கள். அவருடைய கிருபையினால், உங்கள் சரீரத்தில் உயிர் இருக்கும் வரை இன்று இரவு முதல் அவரைச் சேவிக்கப் போகிறீர்கள். பலிபீடத்தில் இருக்கும் நீங்கள் யாராவது உங்கள் கையை உயர்த்துவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரரே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரரே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரரே. அந்தப் பெண்மணி என்ன? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. அது என்ன? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. மறுமுனையில் இருக்கும் மற்ற இரண்டு பெண்களைப் பற்றி என்ன? சகோதரியே, உங்களை மன்னிக்கும்படி தேவனிடம் கேளுங்கள். பலிபீடத்தில் இருக்கும் இரண்டு பேரைத் தவிர, மற்ற அனைவரும் இரட்சிக்கப்பட்டார்கள். 192 இப்போது என்ன? நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ஒன்றுமில்லை. விசுவாசியுங்கள், ஏற்றுக்கொள்ளுங்கள்! அது ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டது. இயேசு சிலுவையில் மரித்தபோதே அதைச் செய்துவிட்டார். இப்போது, மிகுந்த பயபக்தியுடன், நாம் மெதுவாகப் பாடுவோம். இளைப்பாறுதல் உண்டு களைத்தவர்களுக்கு, இளைப்பாறுதல் உண்டு களைத்தவர்களுக்கு, இளைப்பாறுதல் உண்டு களைத்தவர்களுக்கு, அவர் உங்களை விடுதலையாக்கியதினால். யோர்தானின் அக்கரையிலே, ஏதேனின் இனிமையிலே... ஜீவ விருட்சம் பூத்திருக்கிறது, உங்களுக்கு அங்கே இளைப்பாறுதல் உண்டு. இப்போது, இயேசு உடைக்கிறார் (அவர் அதைத்தான் செய்கிறார்) ஒவ்வொரு கட்டுகளையும், இயேசு உடைக்கிறார் ஒவ்வொரு... (எல்லா புகைப்பிடித்தல், குடிப்பழக்கம், பொய் சொல்லுதல், திருடுதல்!) இயேசு உடைக்கிறார் ஒவ்வொரு கட்டுகளையும், ஓ, அவர் உங்களை விடுதலையாக்குகிறார்! நான் அவரை என்றென்றைக்கும் துதிப்பேன், நான் அவரை என்றென்றைக்கும் துதிப்பேன், நான் அவரை என்றென்றைக்கும் துதிப்பேன், அவர் என்னை விடுதலையாக்கியதினால். 193 இப்போது தலைகளைத் தாழ்த்தியிருக்கும் வேறு யாராவது? கட்டிலில் இருக்கும் சகோதரரே, கர்த்தரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரரே. உங்கள் பாவங்கள் அனைத்தும் இப்போது இரத்தத்தின் கீழ் உள்ளன. நீங்கள் ஒரு கட்டிலில் படுத்திருப்பதை நான் பார்க்கிறேன், அனேகமாக முடமாக இருக்கலாம். கவலைப் படாதீர்கள், கிறிஸ்து உங்களைச் சுகமாக்குவார். அங்கே உங்கள் வாழ்க்கை காப்பாற்றப்படும். அங்கே பின்னால் இருக்கும் நீங்கள், இப்போது உங்கள் கைகளை உயர்த்தி, "இன்று இரவு நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டேன்" என்று சொல்லுங்கள். 194 பலிபீடத்தில் இருக்கும் இந்த இரண்டு பெண்களே, பெண்களே, இயேசு கிறிஸ்து உங்களைப் பாவத்திலிருந்து இரட்சிக்கிறார் என்பதை இப்போது உணருகிறீர்களா? நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ஒன்றுமில்லை. அவர் உங்களுக்காக அதைச் செய்து முடித்துவிட்டார். அவர் உங்களுக்காகச் செய்ததை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் ஒரே விஷயம். 195 அதை ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர்கள். வருபவர் களைப் பரிசுத்த ஆவியினால் நிரப்புவேன் என்று தேவன் வாக்குறுதி அளித்திருக்கிறார். பேதுரு சொன்னார், "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்." நாம் ஆவி ஊற்றப்படும் நாட்களில் இருக்கிறோம், சபையில் பெரிய அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கின்றன. எல்லோரும் இப்போது ஜெபத்தில் இருங்கள். நான் இந்தப் பெண்களிடம் ஒரு நிமிடம் பேச விரும்புகிறேன்...?... சகோதரி புரூஸ்...?... [ஒலி நாடாவில் காலியிடம்] ...?... 196 இன்று இரவு அங்கே பின்னால் எத்தனை பேர் கர்த்தரை ஏற்றுக்கொண்டீர்கள்? உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். நீங்கள் இருக்கும் இடத்திலேயே எழுந்து நில்லுங்கள், உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். அங்கே பின்னால், "நான் கர்த்தரை ஏற்றுக்கொண்டேன்" என்று சொன்னவர்கள், உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள், அப்போது நீங்கள் ஒரு பகிரங்க அறிக்கையைச் செய்கிறீர்கள். "உலகத்தின் காரியங்களால் இனி என்னை ஒருபோதும் தீட்டுப்படுத்திக் கொள்ள மாட்டேன் என்று என் இருதயத்தில் தீர்மானித்தேன். இன்று இரவு முதல் நான் கர்த்தரைச் சேவிக்கிறேன்" என்று சொல்லுங்கள். 197 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. அப்படியே நில்லுங்கள். வேறு யாராவது? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அம்மையே. வேறு யாராவது? கையை உயர்த்தின நீங்கள், இப்போது, உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை மக்களுக்குக் காட்டுங்கள். வெட்கப்படுவதற்கு இதில் ஒன்று மில்லை. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது? உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். கர்த்தராகிய இயேசு உங்களுக்காக என்ன செய்தார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அம்மையே. வேறு யாராவது, உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். உங்கள் கையை உயர்த்தின சிலர், இப்போது, உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். "இன்று இரவு முதல், நான் கர்த்தராகிய இயேசுவைச் சேவிப்பேன் என்று என் இருதயத்தில் தீர்மானிக்கிறேன்" என்று சொல்லுங்கள். 198 ஓ, இது அற்புதமாக இல்லையா? இங்கே இருக்கும் சிறிய பெண்கள், ஓரத்தில் இருக்கும் இரண்டு சிறிய பெண்கள், மிகவும் அழுதுகொண்டிருக்கிறார்கள். ஓ, என்ன... அவர்கள் பலிபீடத்திற்குக் கீழே வந்தார்கள். அவர்கள் சொன்னார்கள்... அவர்கள் கர்த்தரை ஏற்றுக்கொண்டபோது இரட்சிக்கப்பட்டார்கள், நிச்சயமாக. 199 இதோ நம் சகோதரர், இங்கே, வரிசையின் கடைசியில், இங்கே. நான் தவறாக நினைக்கவில்லை என்றால், பெட்டி, அது உன் கணவர். இப்போது, வாழ்க்கை உனக்கு மாறிவிடும், பெட்டி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரரே. 200 அங்கே இருக்கும் நம்முடைய கருப்பின சகோதரருக்கு, நம் சகோதரராகிய, கர்த்தராகிய இயேசுவின் ஐக்கியத்திற்குள் வருக என்று வரவேற்கிறோம். 201 இங்கே நிற்கும் நம் சகோதரருக்கும், இங்கே இருக்கும் சிறிய பெண்ணுக்கும், வரிசையில் இருக்கும் மற்றவர்களுக்கும், நாம் அனைவரும்... அங்கே பின்னால் எழுந்து நிற்கும் உங்களுக்கும், இந்த அற்புதமான ஐக்கியத்திற்குள் உங்களை வரவேற்கிறோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 202 இப்போது, இவர்களுக்கு அருகில் நிற்கும் யாராவது, முன் இருக்கையில் இருப்பவர்கள், மற்றும் இவர்கள் நிற்கும் இடத்திற்குப் பின்னால் நிற்பவர்கள், கிறிஸ்தவர்கள்... சும்மா அப்படி அவர்கள் கையை குலுக்கி, "தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக" என்று சொல்ல மாட்டீர்களா? அங்கே அவர்களில் சிலருடன் கை குலுக்கி, "தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக" என்று சொல்லுங்கள், ஐக்கியத்தைக் காட்டுவதற்காக. என் இரட்சகர் மரித்த இடத்திலே, அங்கே சுத்திகரிப்புக்காகக் கீழே... 203 [ஒலி நாடாவில் காலியிடம்]...?... நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் உலகம் முழுவதும் பல ஆண்டுகளாகச் செய்தி பிரசங்கிக்கப்பட்டது. கர்த்தரால் போதிக்கப்பட்டு, அப்போஸ் தலர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. நம் கர்த்தராகிய இயேசுவுக்காக அது அறிவிக்கப் பட்ட நாளில் இருந்ததைப் போலவே, இன்றும் அது உயிருள்ளதாகவும், தேவனுடைய வல்லமை உண்மையானதாகவும் இருக்கிறது. 204 பத்து வருடங்களாக, இப்போது, உலகம் தழுவிய சுவிசேஷ ஊழியம்; ஐந்து முறை உலகம் முழுவதும் சுற்றி, பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து சுகமடைவதைக் கண்டிருக்கிறேன். ஒரே நேரத்தில் இருபத்தைந் தாயிரம் பேர் சுகமடைவதைக் கண்டிருக்கிறேன். தென்னாப்பிரிக்காவின் டர்பனில், வியாதியஸ் தர்களுக்காக ஒரு ஜெபம் செய்யப்பட்டபோது, ஊன்றுகோல்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் மற்றும் கட்டில்கள் மற்றும் படுக்கைகளைத் தரையிலிருந்து ஏழு பெரிய லாரிகளில் ஏற்றிக் கொண்டு போனார்கள். 205 முப்பதாயிரம் பேர் கர்த்தராகிய இயேசுவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். புறஜாதியினர் தங்கள் விக்கிரகங்களைத் தரையில் உடைத்தெறிந்து விட்டு, கர்த்தரிடம் வந்தார்கள், அதே நேரத்தில் பத்தாயிரம் இந்துக்கள், மேதியர்-பெர்சியர் களைப் போல மாற்றமடையாதவர்கள், ஆனால், ஒரே நேரத்தில் தங்கள் தீர்க்கதரிசியான முகமதுவைக் கைவிட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைச் சேவித்தார்கள். 206 இந்தியாவில் ஐந்து லட்சம் பேர் கூடியிருந்த ஒரு கூட்டத்தில், முற்றிலும் குருடான ஒரு மனிதன் மேடைக்கு வந்து, தன் சுகத்தைப் பெற்றுக்கொண்டு நடந்து சென்றதைக் கண்டபோது, எத்தனை ஆயிரம் ஆயிரக் கணக்கான இந்துக்கள், மற்றும் அனைவரும் ஒரே நேரத்தில் தங்கள் இருதயத்தைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் கொடுத் தார்கள் என்பது கணக்கிட முடியாததாக இருந்தது. எல்லா வியாதிகளையும் குணமாக் குகிற கர்த்தர் அவரே. 207 என் தாயின் கூற்றுப்படி, எனக்கு நாற்பத்தேழு வயதாகிறது, நான் மக்களுக்காகப் பல்லாயிரக்கணக்கான முறை ஜெபித்தி ருக்கிறேன். என் வாழ்நாளில், ஒரு முறை கூட, நான் உண்மையாக இருந்து தேவனிடம் எதையாவது கேட்டு, அவர் எனக்குப் பதிலளிக் காமலோ, அல்லது ஏன் என்று சொல்லாமலோ இருந்ததில்லை. அது சரி. என் முழு இருதயத்தோடும் அதைச் சொல்கிறேன், ஒரு முறை கூட நான் கேட்டதில்லை. இன்று மதியம் சகோதரர் பர்ன்ஸுக்காகக் கேட்டபோது, தேவன் "ஆம்" என்று சொன்னபோது நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன். 208 அங்கே பின்னால் இருக்கும் சகோதரர் கோட்ஸைப் பற்றி நான் பேசினேன், புற்றுநோயுடன் இருந்த அந்தச் சகோதரருக்காகப் பின்னால் ஜெபித்தபோது நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன், சகோதரர் கோட்ஸ், அங்கே ஓரத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு தேவன் "ஆம்" என்று சொன்னபோது நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன். 209 மார்ஜி மார்கனுக்காக நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன், புற்றுநோயுடன் மரிக்கும் நிலையில், துண்டு துண்டாக வெட்டப் பட்டிருந்தார். மருத்துவர்கள்... அவர் இறந்து பத்து வருடங்கள் ஆகிறது, லூயிஸ்வில்லேயில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில். அவர் இப்போது முற்றிலும் இயல்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார். பார்த்தீர்களா. ஓ, சுற்றியுள்ள இன்னும் அநேகர். 210 இங்கிலாந்தின் ராஜா ஜார்ஜ், அவருக்கு மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (multiple sclerosis) இருந்தபோது, நான்... அவர் என்னை அங்கே வந்து தனக்காக ஜெபிக்கும்படி அழைப்பு விடுத்தார். இங்கிலாந்தின் ராஜா ஜார்ஜுக்கு இயேசு "ஆம்" என்று சொன்னபோது நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன். 211 குஸ்டாஃப் பற்றி நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன்; அவருடைய வாத நோய்க்காக (rheumatism) ஜெபிக்க அங்கே சென்றேன். 212 உலகம் முழுவதும் எத்தனை முறை, மிகத் தாழ்ந்தவர் முதல் மிக உயர்ந்தவர் வரை. உங்கள் நிலை என்ன என்பதைப் பற்றி இயேசு கவலைப்படுவதில்லை, அவருக்கு முன்பாக உங்கள் இருதயம் தான் முக்கியம். அவர் வியாதியஸ்தர்களையும் பாதிக்கப் பட்டவர் களையும் குணமாக்குகிறார். இப்போது, நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கிறோம், தேவன் குணமாக்குகிறார் என்று நம்புகிறோம். 213 இப்போது, இங்கே யாராவது ஜெபிக்கப்பட விரும்பினால், உங்கள் கையை உயர்த்துவதன் மூலம் தெரிவிக்கலாமா? நாம் திருவிருந்து ஆராதனைக்கு முன்பாக வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப் போகிறோம், பின்னர் நாம் திருவிருந்து எடுப்போம். சரி. 214 நம் சகோதரி இங்கே நமக்கு ஒரு பாடலைத் தருவார், விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள் (Only Believe). நீங்கள் விரும்பினால், மக்களை வலதுபுறத்தில் வரிசையாக நிற்கச் செய்வோம். நான் அவர்களுக்காக ஜெபிக்கும்போது மூப்பரானவர், இங்கே, அவர்களை அபிஷேகம் செய்வார், நாம் ஒன்றாகச் சேர்ந்து, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்போம். 215 தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்கிற வேறு யாராவது போதகர் இங்கே இருக்கிறீர்களா, நாங்கள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும்போது என்னுடன் வந்து நிற்க முடியுமா? என் சகோதரரே, நீங்கள் வந்து எனக்கு உதவினால் நான் மகிழ்ச்சியடைவேன்... இங்கே என் வலதுபுறத்தில் வரிசையாக நில்லுங்கள், நாங்கள் அவர்களுக்காக ஜெபிக்கும்போது அவர்களை இந்தப் பக்கம் கீழே கூட்டிக்கொண்டு வாருங்கள். 216 தேசம் முழுவதும் இந்தத் தெய்வீக சுகமளித்தல் அதிகமாகப் போதிக்கப் பட்டிருக்கிறது என்றும், பல்லாயிரம் ஆயிரக்கணக்கான மக்கள் சுகமடைந் திருக்கிறார்கள் என்றும் நான் நினைக்கிறேன்; வானொலிகள், செய்தித்தாள்கள், விமர்சகர்கள் கூட, செய்யப்பட்ட காரியங்களில் அது சரியானது என்று எப்படி ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. 217 அவருடைய பெரிய சுகமளிக்கும் வல்லமைக்காக, இன்று இரவு, நாம் தேவனுக்கு எப்படி நன்றி சொல்லலாம். இதை விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். விசுவா சமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்று என்று நான் நினைக்கிறேன். அது உண்மை. (எண்ணெய் வைத்திருக்கிறீர்களா...?... ஆம்...?... ) சகலமும் கூடும், விசுவாசிக்கவே. ஓ கர்த்தாவே... இப்போது, நம் கைகளை உயர்த்துவோம், "ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்." ... ஓ கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், சகலமும் கூடும், கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன்; ஓ கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், சகலமும் கூடும், கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன். 218 அன்று அவர் மலையிலிருந்து இறங்கி வந்தபோது என்ன சொன்னார்? அங்கே அநேகர் இருந்தார்கள். சீஷர்கள், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத ஒரு பையன் அங்கே இருந்தான். அவர்கள், "ஆண்டவரே, நாங்கள் அவனைச் சீஷர்களிடம் கொண்டுவந்தோம், அவர்களால் அவனுக்கு உதவ முடியவில்லை, நாங்கள் அவனை உம்மிடம் கொண்டுவந்தோம்" என்று சொன்னார்கள். அவர் சொன்னார், "நீ விசுவாசித்தால் என்னால் ஆகும்." 219 இப்போது, இன்று இரவு, நேரத்தைச் சேமிக்க, திருவிருந்து ஆராதனை வரவிருப்பதால்... இப்போது, நாம் வழக்கமாக, சில நேரங்களில், ஆவிகளைப் பகுத்தறிதலைக் கொண்டிருக்கிறோம், கர்த்தர் பேசும்போது, அந்த நபருக்கு என்ன பிரச்சனை, அவர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சொல்கிறார். 220 நான் தவறாக நினைக்கவில்லை என்றால், முன் இருக்கையில் இங்கே ஒரு மனிதர் அமர்ந்திருக்கிறார், நான் அவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன். நான்... நீங்கள் ஒருமுறை என் வீட்டிற்கு வந்தீர்கள், வெகு நாட்களுக்கு முன்பு அல்ல, ஒரு ஸ்டேஷன் வேகனில் (station wagon), ஓஹியோ விலிருந்து, இல்லையா? அங்கே பரிசுத்த ஆவியானவர் எப்படிப் பேசினார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? மிகச்சரியாக, என் வாழ்நாளில் நான் உங்களைப் பார்த்ததே இல்லை, ஆனால் அவர் எப்படி, எப்படி... அவர் என்ன செய்தார். உங்கள் கையை உயர்த்துங்கள், வாலிபனே. பார்த்தீர்களா. 221 வெகு தொலைவிலிருந்து அங்கே, அது எல்லா இடங்களிலிருந்தும் வருகிறது. அவர் மனிதனுக்குள் எப்படி கிரியை செய்கிறார். எத்தனை பேர் அதைப் பார்த்திருக்கிறீர்கள்? கட்டிடம் முழுவதும் உங்கள் கைகளைப் பார்ப்போம். நிச்சயமாக, ஏறக்குறைய எல்லோரும். நிச்சயமாக. இப்போது, அவர் இங்கே இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். அவர் இங்கே இருக்கிறார், அவர் மிகவும் அதிகமாய் கிரியை செய்கிறார். 222 இப்போது, நாங்கள் அபிஷேகம் செய்து உங்களுக்காக ஜெபித்தால், இங்கே நிற்கும் இந்தப் போதகர்கள் அனைவரும், வியாதியஸ் தர்களுக்கான ஜெபத்திற்குப் பின்னணியாக நிற்கும்போது, அவர் உங்களை நன்றாக்குவார் என்று விசுவாசிக்கவும், தேவனிடம் கேட்கவும், தொடர்ந்து நம்பவும் நீங்கள் உங்கள் விசுவாசத்தைச் செயல்படுத்துங்கள். 223 ஏனென்றால் வேதாகமத்தில் எழுதப் பட்டிருக்கிறது: "நம்முடைய மீறுதல்களி னிமித்தம் அவர் காயப்பட்டு, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." நாம் குணமானோம் என்று விசுவாசியுங்கள், நாம், அது கடந்த காலம், நாம் ஏற்கனவே குணமானோம். நாம் அப்படி இருப்பதற்காக நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 224 நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன்; சகோதரர் ராய் ராபர்சனைப் பார்த்தேன். அவருக்கு நினைவிருக்கும், அவர் ஒரு... நான் நம்புகிறேன் அவர் கீழே... ஹூஸ்டனில் கர்த்தருடைய தூதன் வந்து, தன் நிழற்படத்தை எடுத்த அந்த இரவில் நீங்கள் கீழே இல்லையா, சகோதரர் ராய்? நீங்கள் இருந்தீர்கள் என்று நினைத்தேன். சகோதரர் வுட், அங்கே, இங்கே எங்கேயோ, அவரும் அங்கே கீழே இருந்தார் என்று நினைக்கிறேன், கர்த்தருடைய தூதன் கட்டிடத்தில் தோன்றிய அந்த இரவில். 225 இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் என் முதல் குழுவை ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அவர் இங்கே ஆற்றில் கீழே தோன்றியதை நினைவில் வைத்திருக்கும் பழைய குழுவில் மீதமுள் ளவர்கள் எத்தனை பேர் இங்கே இருக்கிறீர்கள்? பாருங்கள். அநேக கைகள், இன்னும், அவர் இங்கே கீழே தோன்றியபோது. கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. சரி. 226 இப்போது, இவர்கள் போதகர்கள், இல்லையா, ஜெபித்துக் கொண்டிருப்பவர்கள்? அப்படியா, உண்மையில்? உங்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் இந்தச் சகோதரர்கள் ஒவ்வொருவருடனும் கை குலுக்கிக் கொள்கிறேன். எனக்கு உங்கள் பெயர் தெரியாமல் இருக்கலாம், ஆனால் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உன்னைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி, டெடி பாய், வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதில் எங்களுக்கு உதவ நீயும் இதில் இணைந்திருப்பதைப் பார்ப்பதில். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 227 இப்போது, என் சகோதரர்களே, நான் உங்களைக் கேட்கப் போகிறேன், நீங்கள் இங்கே ஓரமாக ஒரு சிறிய வரிசையை அமைத்துக் கொள்ள முடியுமா, உங்களில் சிலர் இங்கேயும், சிலர் அங்கேயும், நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப் போகும்போது, உங்களால் முடிந்தால். பார்ப்போம், சுமார்-சுமார்-சுமார் நான்கு பேர் இங்கே சரியாகக் கீழே செல்லுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் வியாதியஸ்தர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மேல் உங்கள் கைகளை வைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பிறகு மீதமுள்ள நாம் இந்தப் பக்கமாக வருவோம். அது சரி. 228 என்னே, எங்கே ஒற்றுமை இருக்கிறதோ, அங்கே வல்லமை இருக்கிறது. இல்லையா? ஜெபத்தை வலுப்படுத்துவதில், இப்போது. சரி. அங்கே எத்தனை பேர், இப்போது, நீங்கள் ஜெபத்தில் இருப்பீர்கள் என்று வாக்குறுதி அளிப்பீர்கள்? உங்கள் கைகளைப் பார்ப்போம், மேலே உயர்த்தி. நல்லது. சரி. 229 இதோ தேவனுடைய மனிதர்கள், இதை உண்மையிலேயே விசுவாசிக்கிறவர்கள், இந்தச் செய்தியை விசுவாசிக்கிறவர்கள். இன்று இரவு, வியாதியஸ்தர்களுக்காகவும் பாதிக்கப் பட்டவர் களுக்காகவும் ஜெபிக்க இங்கே நிற்கும் பிரசங்கிகளைப் பாருங்கள். 230 அவர்கள் வரிசையாக வரும்போது, நாங்கள் ஜெபிக்கும்போது, ஒவ்வொருவரும் உங்கள் மேல் கைகளை வைக்கப் போகிறார்கள். சகோதரர் நெவில் உங்களை எண்ணெயால் அபிஷேகம் செய்யப் போகிறார். வியாதியஸ்தர்கள் கடந்து செல்லும்போது அவர்கள் மேல் கைகளை வைப்பதற்காக, நானும் வரிசையின் இறுதியில் நிற்கப் போகிறேன். தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் முற்றிலும் நன்றாகவும் சுகமாகவும் மாற்றுவார் என்று நான் நம்புகிறேன். 231 சகோதரர் காலின்ஸ், அங்கே, ஒரு நிமிடம் சும்மா இருக்கிறீர்களா? இங்கே வாருங்கள், ஒரு நிமிடம். சகோதரர் பீலர் இன்னும் அங்கே பதிவிறக்கும் அறையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன், இல்லையா? நீங்கள் சும்மா இருந்தீர்களா? ஜெபத்திற்குப் பிறகு, நீங்கள் எனக்காக இந்தப் பாடலை, விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள் (Only Believe), இங்கே முணுமுணுக்க வேண்டும் என்று விரும்புகிறேன், உங்களால் முடிந்தால், செய்வீர்களா? ம்? நீங்கள் ஜெபிப்பீர்களா...? சரி. சரி. இப்போது உங்கள் தலைகளைத் தாழ்த்தி, இப்போது எல்லோரும் சேர்ந்து. 232 இப்போது, பரலோக பிதாவே, இந்த முக்கியமான தருணம் மீண்டும் வந்திருக்கிறது. நாங்கள் இதைச் செய்கிறோம், ஏனென்றால் இது தேவனுடைய வார்த்தையை நிறைவேற்று வதற்காக, அது சொல்கிறது, "விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங் களாவன." இன்று இரவு, இந்த நீதிமான்களின் ஜெபங்களின் பலனைப் பெற்றுக்கொள்ள அநேக வியாதியஸ்தர்கள் நிற்கிறார்கள். 233 ஆண்டவரே, வியாதியஸ்தர்களை அபிஷேகம் செய்ய அங்கே குப்பியில் எண்ணெய் இருக்கிறது. ஒரு சாட்சியாகவும், அவர்கள் உமது மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல், உமது பரமேறுதல், உமது இரண்டாம் வருகையை விசுவாசிக்கிறார்கள், உமது சுகமளிக்கும் வல்லமை பெரியது என்று விசுவாசிக்கிறார்கள் என்பதற்குச் சாட்சியாகவும் மக்கள் மேல் பரிசுத்த கைகளை வைக்க அங்கே போதகர்கள் இருக்கிறார்கள். உமது பெரிய அபிஷேகம் பண்ணப்பட்ட சுகமளிக்கும் வல்லமையால் அவர்களே தொடப் பட்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. பிதாவே, அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைக்கும்போது, அவர்கள் குணமடையட்டும். இயேசுவின் நாமத்தில், உமது ஆசீர்வாதங்களுக்காக நாங்கள் ஒன்றாகக் காத்திருக்கும்போது, இப்போது எங்களை ஆசீர்வதியும். ஆமென். இப்போது உங்கள் தலைகளைத் தாழ்த்தியிருக்க, சகோதரர் காலின்ஸ் தொடர்ந்து வழிநடத்தும்போது ஜெபத்தில் இருங்கள். இப்போது, மூப்பர்களும் மற்றவர்களும் இங்கே வாருங்கள், தொடர்ந்து இருக்க உதவுங்கள்...?... [ஒலி நாடாவில் காலியிடம்] அது என்ன? ஓ, விலையேறப்பெற்ற ஊற்று என்னை உறைந்த மழையைப் போல வெண்மையாக்குகிறது; வேறொரு ஊற்றையும் நான் அறியேன், இயேசுவின் இரத்தம் மட்டுமே. என் பாவத்தைக் கழுவுவது எது? இயேசுவின் இரத்தம் மட்டுமே. ஓ, எது என்னை மீண்டும் முழுமையாக்கும்? இயேசுவின் இரத்தம் மட்டுமே. எல்லோரும் சேர்ந்து. ஓ, விலையேறப்பெற்ற ஊற்று என்னை உறைந்த மழையைப் போல வெண்மையாக்குகிறது; வேறொரு ஊற்றையும் நான் அறியேன், இயேசுவின் இரத்தம் மட்டுமே. 234 இப்போது, உங்கள் கவனம், ஒரு கணம். நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். இந்த மனிதர், அந்தக் கால் ஊனமுற்ற மனிதருக்கு நான் ஏன் அதைச் செய்தேன் என்றால், அவர் உதவியற்றவர். ஆவியானவருக்குள் அறிந்து, அந்த மனிதர்... இது கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொள்வதற்கான அவருடைய இரவு. அவர் நம்பிக்கையற்ற நிலையில் இருந்தார் என்பதை அறிந்து, அவர்... கிறிஸ்து இல்லாமல் அவர் வாழ்ந்த இந்த வாழ்க்கை முழுவதும். ஆனால், அந்த மனிதர் என் குரலைக் கேட்கும்படி அங்கிருந்தால், நான் அவரை இப்போது பார்த்தால் எனக்கு அடையாளம் தெரியாது. ஆனால், கடந்த சில வாரங்களாக, இந்த மனிதர் தேவனைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து. அவருடைய மகள் வந்து இரட்சிக்கப்பட்டாள். அந்த மனிதர்... அதனால் தான் நான் அதைச் செய்தேன். அந்தக் குருட்டுப் பெண்மணி, நான் அதைச் செய்ததற்குக் காரணம், அது ஒரு பொல்லாத ஆவியை விரட்டுவதாக இருந்தது. 235 இப்போது, பொல்லாத ஆவியை விரட்டுவது, நான் தரிசனத்திற்கான அபிஷே கத்தில் இல்லாதபோது அந்தக் காரியங்களில் மிகவும் கவனமாக இருப்பேன் என்பது என் சபைக்குத் தெரியும். பார்த்தீர்களா? ஏனென்றால், முதலாவதாக, யாராவது என் கூட்டத்தில் இருந்திருந்தால், நீங்கள் கவனிப்பீர்கள். அது போன்ற ஒரு பிசாசை நான் அழைப்பதற்கு முன், நான் எதைப் பற்றிப் பேசுகிறேன் என்பதை நான் அறிந்திருக்க வேண்டும். எத்தனை பேர் அதைக் கவனித்திருக்கிறீர்கள்? அது மிகவும் நெருக்கமாக வரும். ஆனால் தேவனுடைய மகிமைக்காக, அவர் இதைச் செய்ய வேண்டும் என்று நான் கர்த்தரிடம் கேட்டேன். 236 அன்றொருநாள் இரவு, அங்கே இருந்த அந்தச் சிறிய பெண்மணிக்கு (நடந்ததைப்) போன்று, செவிடாகவும் ஊமையாகவும் இருந்தவள், நரம்பு துண்டிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கேட்கவோ பேசவோ முடியாதவள். நான் அவரிடம் கேட்டேன். ஆப்பிரிக்கா எனக்கு முன் வருவதைக் கண்டேன். நான் சொன்னேன், "ஆண்டவரே, என்னை மீண்டும் ஆப்பிரிக்காவிற்கு அழைப்பது நீர் என்றால், அந்த விபத்தில் சிக்கிய இந்த ஊமையைச் சுகமாக்கும்." அவள் மற்றவர்களைப் போலவே பேசவும் கேட்கவும் முடிந்தது. 237 இப்போது, இன்று இரவு, அந்தக் குருட்டுப் பெண்மணி இங்கே நின்று கொண்டிருந்தபோது, ஆவிக்குள் வந்து கொண்டி ருந்தபோது, இருளின் நிழலை நான் கவனித்தேன். இப்போது, அந்தப் பெண்மணி இன்னும் இருந்தால், அவள் இருந்தால், அல்லது யாருக்காவது அவளைத் தெரிந்தால். இப்போது, சரியாக, சில நிமிடங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது அவளால் நன்றாகப் பார்க்க முடியும். காலையில், அவள் இன்னும் நன்றாகப் பார்ப்பாள். அந்தப் பெண்மணி அங்கே பின்னால் இருக்கிறாரா? அதுவா...? சரி, நீங்கள் நன்றாகப் பார்க்கிறீர்கள். இல்லையா, அம்மையே? [சகோதரி சொல்கிறார், "ஆமென்."] அது சரி. இப்போது, காலையில், நீங்கள் இன்னும் நன்றாகப் பார்ப்பீர்கள். நாளை மறுநாள், நீங்கள் இன்னும் நன்றாகப் பார்ப்பீர்கள். ஆனால், அதற்கடுத்த நாள், அது மீண்டும் போக ஆரம்பிக்கும். அது நடிக்க ஆரம்பிக்கும். நினைவில் கொள்ளுங்கள், தவறவிடாதீர்கள். அந்த வளர்ச்சிகள் வீங்குகின்றன. அவை இறந்துவிட்டன. அது என்னவென்றால், உங்கள் கண்ணின் மேல் அது போன்ற ஒரு வளர்ச்சி ஒரு... அது ஒரு பிசாசு, அது ஒரு சரீரத்தை வளர்க்கிறது. எந்த வகையான சதையிலிருந்தும் அந்த உயிர் ஆவி வெளியேறும்போது, அது சுருங்குகிறது. 238 ஒரு மிருகத்தைக் கொல்லுங்கள், அதைத் தராசில் வைத்து, இன்று இரவு எடை போடுங்கள், அதைத் தொந்தரவு செய்யாதீர்கள், காலையில் அதில் வையுங்கள், அது பல பவுண்டுகள் எடை குறைந்திருக்கும். இப்போது அதைச் சிறிது நேரம் அங்கே கிடக்க விடுங்கள், தெருவில் கிடக்கும் ஒரு சிறிய நாயைப் போல, அதைச் சிறிது நேரம் அங்கே கிடக்க விடுங்கள். அது சிதைவதற்கு அல்லது அழுகுவதற்கு முன்பு, அது வீங்கிப் பெரிதாகும். 239 இப்போது, அது வீங்க ஆரம்பிக்கும்போது, சுமார் எழுபத்திரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, உங்கள் பார்வை மீண்டும் மங்கத் தொடங்கும், உங்கள் முழு இருதயத் தோடும் தேவனைத் துதியுங்கள். அவ்வளவு தான். அது போய்விட்டது. பார்த்தீர்களா? சும்மா விசுவாசியுங்கள். 240 இப்போது, கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படுவதாக! கர்த்தராகிய இயேசு வுக்காக நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்களா? அது என்னவென்றால், அவர் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வதை நான் பார்த்தி ருக்கிறேன்! நண்பர்களே, நாம் இனி ஊகிக்கத் தேவையில்லை. இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார். அவர் வியாதியஸ்தர்களைக் குணமாக்கு கிறார். அவர் முடவர்களை நடக்கப் பண்ணுகிறார். அவர் மரித்தோரைத் தங்கள் கட்டில்களிலிருந்து எழுப்புவதை நான் பார்த்திருக்கிறேன். அவர் கர்த்தராகிய இயேசு என்று எனக்குத் தெரியும். அவர் சீக்கிரம் வருகிறார் என்று நான் நம்புகிறேன். இன்று இரவு, அவரை உங்கள் சொந்த இரட்சகராக நீங்கள் ஏற்றுக்கொண்டதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது இங்கே எத்தனை கிறிஸ்தவர்கள் இருக்கிறீர்கள்? கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிற உங்கள் கைகளை உயர்த்துங்கள். கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்! 241 எங்கள் பரலோக பிதாவே, இந்த காரியங்கள் அனைத்திற்காகவும் இன்று இரவு நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். கூட்டத்திற்காகவும், மெய்யாகவே பிரிக்கிற தேவனுடைய கரடுமுரடான வார்த்தைக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். தேவனுடைய வீட்டில் நியாயத்தீர்ப்பு துவங் குகிறது. இந்தக் காரியங்கள் அனைத்திற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இழந்து போனவர்களை இரட்சித்ததற்காகவும், பல்வேறு தேசத்து மக்களை இரட்சித்ததற் காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். 242 ஒரு எத்தியோப்பிய பையனை, ஒரு கருப்பின சகோதரரை, இன்று இரவு பலிபீடத்திற்கு நீர் கொண்டு வந்ததையும், இங்கே அவரைப் பாவத்திலிருந்து இரட்சித் ததையும் நாங்கள் கண்டோம். ஆஸ்துமா அவரைத் தொந்தரவு செய்யாதபடி அவர் மேல் கைகளை வைத்தோம். 243 இதோ அவருடைய சகோதரிகளில் ஒருவர் வந்தார், குருடாகி, இருளில் தள்ளாடிக் கொண்டு. திடீரென்று, ஒளி அவள் கண்களில் மின்னியது. பிசாசு போய்விட்டான். ஓ, அவன் ஒருபோதும் திரும்பி வராமல் இருப்பானாக. தேவனே, அவளுக்கு விசுவாசத்தைத் தாரும், அவள் சுகமாகவே இருக்கட்டும். பீடத்தில் இருந்த ஒவ்வொரு ஆத்துமா வுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். 244 ஊன்றுகோல்கள் தன்னைச் சுற்றிலும் கிடக்க, கட்டிலில் படுத்திருந்த இந்த மனிதருக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், பின்னர் அவற்றின் ஆதரவு இல்லாமல் எழுந்து நடந்து சென்றார்; ஒரு இரட்சிக்கப்பட்ட மனிதர், ஒரு சுகமளிக்கப்பட்ட மனிதர். அவருடைய குழந்தை அவரைச் சுற்றி, தேவனுடைய மகிமையில் களிகூருகிறது. அது எப்பேர்ப்பட்ட வித்தியாசமான வீடாக இருக்கும். 245 ஓ, ஆண்டவரே, நாங்கள் ஒவ்வொரு வருக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். பெட்டியின் கணவருக்காகவும், வந்தவர்களுக் காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இப்போது, தேவனே, இவை எல்லாவற்றிலும் மகிமை அடைவீராக. இது எல்லாம் உம்முடையது. 246 ஆண்டவரே, உலகம் முழுவதிலுமிருந்து மக்களை அனுப்பக்கூடிய ஒரு பழைய பாணியிலான எழுப்புதல் இங்கே இந்தக் கூடாரத்தைச் சுற்றி வெடிக்க வேண்டும் என்றும், ஜெஃபர்சன்வில்லேயில் தேவனுடைய மகிமைக் காக ஒரு பெரிய பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும் என்றும் அருளும். பிதாவே, அதை அருளும். 247 இப்போது நாங்கள் அப்பத்தைப் பிட்கவும் திருவிருந்து எடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம். நாங்கள் இதைச் செய்யும்போது, கர்த்தராகிய தேவனே, நீர் எங்களோடு இருந்து எங்களை ஆசீர்வதிக்கும்படியும், உமது அன்பை எங்களுக்கு வெளிப்படுத்தும் படியும் நாங்கள் ஜெபிக்கிறோம். ஏனென்றால் கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். 248 இப்போது, போக வேண்டிய உங்களை, நாங்கள் அனுப்புகிறோம். சகோதரர் நெவில், திருவிருந்துக்காக, வார்த்தையை வாசிக்க வேத பகுதிகளை ஆயத்தப்படுத்தும்படி நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், தங்க முடிந்தவர்கள், திருவிருந்துக்காக எங்களோடு தங்குங்கள். தங்க முடியாதவர்கள், தேவனுடைய ஆசீர்வாதங்களுடன் அனுப்பப்படுகிறீர்கள், மற்றொரு நேரத்தில் திரும்பி வந்து எங்களோடு இருங்கள். இப்போது மணி பத்துக்கும் எட்டு நிமிடங்கள் ஆகிறது. இப்போது நீங்கள் போக வேண்டியிருந்தால், வந்ததற்காகத் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, மகிமையின் இந்தப் பக்கத்தில் உங்களை மீண்டும் பார்க்கலாம் என்று நம்புகிறோம்; இல்லையென்றால், அந்தப் பக்கத்தில். தங்க முடிந்தவர்கள், அடுத்த முப்பது நிமிடங்களுக்குத் தங்க உங்களை வரவேற்கி றோம், அங்கே நாம் திருவிருந்து எடுக்கிறோம், மற்றும் பாதசுழுவுதல் ஆராதனை வைத்திருக்கிறோம். 249 இப்போது, நம் வாசல்களில் இருக்கும் அந்நியர்களுக்கு, குலுக்குங்கள்... இயேசுவின் நாமத்தை உன்னுடன் எடுத்துச் செல் (Take The Name Of Jesus With You) என்று நாம் பாடும்போது, எல்லோரும் ஒருவர் கையை ஒருவர் குலுக்கி, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். சரி. இயேசுவின் நாமத்தை உன்னுடன் எடுத்துச் செல், பிள்ளையே (...?... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரரே...?...) ~ 3 ~